Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்!

Featured Replies

சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்!

 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 21 ஆண்டுகாலக் கொடுங்கனவாகத் தொடர்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. தி.மு.க ஆட்சிக் காலத்தில், தன்மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் உடைத்த ஜெயலலிதாவால், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மரணத்துக்குப் பிறகும் விடுதலை பெற முடியவில்லை. அதேபோன்ற ஒரு கடும் வெள்ளத்தில் சிக்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்த வெள்ளத்தின் முதல் சுழலில் தப்பிய ஓ.பி.எஸ்., இரண்டாவது சுழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார். ரெய்டுகள் சூழ்ந்த ஜூலை மாதத்தில், ‘ஏன் இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு, ஓ.பி.எஸ் மீதான புகாரை, அவர் துணை முதல்வராக அங்கம் வகிக்கும் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககமே விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த் துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வர் ஆனார் ஓ.பி.எஸ். பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக ஆன பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவிவகித்தார். 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில், ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

p42a_1532713972.jpg

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப் பட்ட அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக ஓ.பி.எஸ் சேர்க்கப்பட்டார். அவருடன் அவரின் மனைவி விஜயலெட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன் மற்றும் அவரின் மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர். தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2009 ஜூலை 30-ம் தேதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பி.எஸ் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் என்று பதவிகள் வகித்த ஐந்து வருடங்களில், ஓ.பி.எஸ்ஸின் சொத்து மதிப்பு  ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 374 சதவிகிதம் உயர்ந்துள்ளது’ என்று குற்றம் சாட்டப்பட்டது.

அந்த வழக்குப் பல்வேறு கட்டங்களைக் கடந்து, சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டுவந்தது. 2011-ல் அ.தி.மு.க ஆட்சி வந்தது. அதன்பின், திடீர்த் திருப்பங்கள் நிகழ்ந்தன. 2012 அக்டோபர் 27-ம் தேதி தமிழக சபாநாயகர் தனபால், ஓ.பி.எஸ் மீது வழக்கு போடுவதற்காக ஏற்கெனவே சட்டமன்றம் கொடுத்திருந்த அனுமதியைத் திரும்பப் பெற்றார். அதைத் தொடர்ந்து சிவகங்கை நீதிமன்றத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்கும்விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வழக்கைத் திரும்பப் பெறுகிறோம்’ என்றது அந்த அறிக்கை. அதன் அடிப்படையில், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

அரசு திரும்பப்பெற்ற வழக்கை, உரிய சட்ட நடைமுறைகளைப் பயன்படுத்தி, அரசு ஊழியர் மற்றும் பொது ஊழியருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் தொடர முடியும். இந்த விதியைப் பயன்படுத்தி, ஓ.பி.எஸ் மீதான வழக்கை வாபஸ் பெற்றதை எதிர்த்து, 2017 டிசம்பரில் அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுக்கப்பட்டது.

p42b_1532713990.jpg

அந்தப் புகார்மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை விசாரணை ஏதும் நடத்தாத நிலையில், 2018 மார்ச் மாதத்தில் ஓ.பி.எஸ் மீது சொத்துக்குவிப்பு புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி கொடுத்தார். ஆனால், அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், ஓ.பி.எஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “பன்னீர்செல்வம், அவரின் மனைவி, மகன்கள், மகள், சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பெயர்களில் அதிக அளவிலான சொத்துகளை வாங்கியும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தும் உள்ளார். சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகள் உள்ளன. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளைக் குவித்த  பன்னீர்செல்வம் மற்றும் அவரின் உறவினர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டம், வருமானவரிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்படி குற்ற நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அறப்போர் இயக்கத்தின் சார்பில்  ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், ‘தேனி மாவட்டத்தில், 2006 முதல் 2017 வரை தன் மனைவி விஜயலட்சுமி பெயரில் 25.205 ஏக்கர் நிலத்தை ஓ.பி.எஸ் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 35,88,160 ரூபாய். ஓ.பி.எஸ் மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் ஆகியோர் 2006-க்கும், 2017-க்கும் இடைப்பட்ட காலத்தில், தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் 81 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். இருவரின் வயதும் 20-களின் தொடக்கத்தில்தான் உள்ளது. இவ்வளவு நிலம் வாங்கும் அளவுக்கு அவர்களுக்குத் தொழில் அனுபவமும் வருவாயும் இல்லை. ஓ.பி.எஸ்ஸின் இரண்டு மகன்களும் நான்கு நிறுவனங்களில் பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களாக உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு ஓ.பி.எஸ் நிதியுதவி செய்திருக்கிறார். நான்கு நிறுவனங்களில் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் ஆகியோர் 2015-16-ல் பங்குதாரர்களாகவும், 2016-17-ம் ஆண்டில் இயக்குநர்களாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இதில் நிழலான பல விஷயங்கள் நடந்துள்ளன’ என்று சொல்லப்பட்டிருந்தது.

p42_1532713955.jpg

இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பி.எஸ்ஸுக்கு வலுவாக செக் வைத்தார். அவர் அரசு வழக்கறிஞர் களிடம், ‘இதில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மூன்று மாதங்களாக என்ன செய்கிறீர்கள்? ஏன் இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது?’ என்று கேட்டார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நேரம் வாங்கிய அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன், ‘ஜூலை 18-ம் தேதி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்ப கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறது’ என்று தெரிவித்தார். அதற்கான சில ஆவணங்களையும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் அந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.

அப்படி முடித்துவைத்தபோதும் ஓ.பி.எஸ்ஸை நீதிபதி விடுவதாக இல்லை. ‘‘இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்து முடிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையில் திருப்தி இல்லையென்றால், நீங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று ஆர்.எஸ்.பாரதி தரப்புக்கு உத்தர விட்டார். அது மட்டுமில்லை... ‘அறப்போர் இயக்கம் தாக்கல் செய்திருந்த மனுவில் இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதில், ஓ.பி.எஸ் தரப்பு ஆடிப்போயிருக்கிறது.

ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கு என்ன பாடுபடுத்தியது என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்தவர் பன்னீர். அதனால், தன்மீது தொடரப்பட்டுள்ள வழக்கு, இன்னும் என்னவெல்லாம் செய்யும் என்பது பன்னீருக்குத் தெளிவாகவே தெரியும். பன்னீருக்கு எதிரான ஒரு கத்தியாக, எடப்பாடியின் கையில் சிக்கியிருக்கிறது இந்த வழக்கு.

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.