Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்

karunanithi-300x209.jpg

வாக்குக் கட்சிகளால் மக்களுக்கான எதையும் சாதித்துவிட முடியாது. அதிலும் இலங்கை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பிரித்தானிய காலனியாதிக்க வாதிகளால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் மக்கள் விரோத ஆட்சிகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. இந்த ஒட்டு ஜனநாயகத்தின் மத்தியிலிருந்து தோன்றிய விரல்விட்டு எண்ணக்கூடிய சீர்திருத்த வாதிகள் சிலர் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும், பின் தங்கிய சமூக உற்பத்தியை புதிய நிலைக்கு நகர்த்தவும் தம்மாலான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வெனிசூலா நாட்டின் சனாதிபதியாக தனது இறுதிக்காலம் வரை பதவிவகித்க ஹுகோ சவேஸ் இன் சீர்திருத்தக் கருத்துக்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் எதிரொலித்தது. புரட்சிகர இயக்கங்கங்களுக்கான வித்துக்களின் விளை நிலமாக அந்த நாடுகள் மாற்றமடைவதற்கு சாவேஸ் இன் ஆட்சி வழிவகுத்தது. சீர்த்திருத்த வாதம் என்பது சமூக மாற்றத்திற்கு எதிரானதாகவே பல சந்தர்ப்பங்களில் அமைந்துவிடுகிறது.

இருப்பினும் சில குறிப்பான சூழ்னிலைகளில் அது முற்போக்கான பாத்திரத்தையும் வகிக்கிறது என்பதற்கு சாவேஸ் ஆட்சி செய்த சீரழிந்து போயிருந்த நில உடமைச் சமூகம் சிறப்பான உதாரணம்.

ஆசிய உற்பத்தி முறை சமூகத்தின் முன் நோக்கிய நகர்வைத் தடுத்திருந்தது. அங்கிருந்த சாதி அமைப்பு முறையைம் அதனை கவனமாகப் பாதுகாத்த இந்துத்துவா அமைப்பு முறையும், அதன் உச்சியில் அமர்ந்திருந்த பிராமணர்களும் மாற்ற மடையாத சமூகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவே பயன்பட்டன. சாதி அமைப்புபிற்கான கோட்பாட்டு வடிவமான இந்துத்துவா சாதி ஒடுக்கு முறையினால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களாலும் ஏற்றுக்கொள்ளும் அவல நிலையே இந்தியாவின் பின் தங்கிய நிலைக்கும் அதன் தொடச்சியான இருப்பிற்கும் காரணமாகியது, இவ்வாறான சூழலில் பெரியாரும் அம்பேத்கரும் முன்வைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் உண்மையிலேயே புரட்சிக்கான வித்துக்கள்.

பெரியார் அம்பேத்கரை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டு ஆட்சியைக் கையகப்பட்ய்த்திய இரண்டாவது தலைரான கருணநிதி ‘தமிழர் அல்லாத’ ஈழத் தமிழர்களுக்கு எதிரான தமிழினத் துரோகியா என்பதே இன்றைய சமூக வலைத் தளங்களில் உலாவரும் பலரது குறுகிய விவாதப் பொருள்.

ஈழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த 80 களின் ஆரம்பங்களில் திராவிட இயக்கங்கள் மட்டுமே தமிழ் நாட்டின் ஆதரவு நிலையிலிருந்தன. தி.க மற்றும் திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற இயக்கங்களின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை ஈழப் போராட்டத்தை அறிந்து வைத்திருந்தனர்.

எமது தொடர்புகள் அனைத்தும் திராவிட இயங்கள் மட்டுமே. ஈ.பி.ஆஎ.எல் போன்ற இயக்கங்களுக்கு சில இடதுசாரி இயங்களுடன் பிற்காலத்தில் தொர்புகள் ஏற்பட்டிருந்தன.

80 களில் ஈழத்திலிருந்து வேதாரண்யம் கடற்கரையில் படகுகள் ஊடாக தமிழ் நாடு செல்லும் போராளிகள் அனைவருகும் வேதாரணியம் தி.மு.க எம்.எல்.ஏ மீனாட்சி சுந்தரத்தின் வீட்டில் தங்கியே சென்னை செல்வது வழமை. மீனாட்சிசுந்தரத்தின் வீடு இயக்க ஒற்றுமைக்கான மையமாக அமைந்திருந்தது தமிழகத்தில் இயங்களின் நுளை வாசல் கூட திராவிட இயக்கங்கள் தான். புளட், என்.எல்.எப்.ரி போன்ற இயக்கங்கள் நக்சல்பாரி குழுக்களோடும் தொடர்புவைத்திருந்தமைக்கன தகவல்கள் உண்டு.

80 களில் படிப்படியாக வளர்ச்சியடைந்த ஈழப் போராட்டத்தை ஆயுதங்களை வழங்கி வீக்கமடையச் செய்து அழிக்கத் திட்டமிட்ட இந்திய அதிகாரவர்க்கமும் அதன் உளவுத் துறையும், பாராளுமன்றக் கட்சியான  தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தொடர்புகொண்டு இராணுவப் பயிற்சிக்கு இளைஞர்களை ஏற்பாடு செய்துதருமாறு கேட்டுக்கொண்டன. அதன் தொடர்ச்சியாக 1982 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளில் தமிழ் தேசிய இராணுவம் என்ற குழுவை உருவாக்கிக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தி.மு.க இன் ஆதரவு கிடைத்திருக்கவில்லை. மறுபக்கத்தில் பயிற்சிக்காகக் கேட்கப்பட்ட 500 பேரில் 50 இளைஞர்களைக் கூடத் திரட்டிக்கொடுக்க முடியத தமிழர் விடுதலைக் கூட்டணியை கைவிட்ட இந்திய உளவுத்துறை அதே கட்சியைச் சேர்ந்த சந்திரகாசன் செல்வநாயகம் ஊடாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களை அணுகியது. அப்போது, டெலோ, ஈ.பி.ஆ.ர்.எல்.எப், ஈரோஸ்,தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களுக்கு பயிற்சி வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

karunanithi-1-300x188.jpg 80 களில் இயக்கத் தலைவர்களுடன் கருணாநிதி

அப்போது தான், வடக்குக் கிழக்கிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழ் நாட்டிற்கு இராணுவப் பயிற்சிக்காக அழைத்துவரப்ப்பட்டனர். தமிழ் நாட்டில் அவர்களைப் பாதுகாப்பதற்கும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கிக்கொள்ளை மற்றும் பணத் திரட்டல் போன்ற நடவடிக்கைகளை இயக்கங்கள் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றன. அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் திராவிடர் கழகம் போன்றவற்றினதும் நிதி மற்றும் அது சார்ந்த உதவிகள் இயக்கங்களுக்கு வலுச்சேர்க்கின்றன.


திடீரென 84 ஆம் ஆண்டளவில் விடுதலை இயக்கங்கள் – தி.மு.க இடையிலான விரிசல் ஆரம்பிக்கிறது. அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான கருணாநிதியைச் சந்திக்கச் செல்லும் குழுவில் விடுதலைப் புலிகள் அமைப்பு திடீரென மறைந்து போனது. அதற்கான காரணம் எம்.ஜீ.ராமச்சந்திரன். அன்று காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான உறவைப் பேணிக்கொண்ட எம்.ஜீ.ஆர், ஏனைய இயக்கங்களைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப் புலிகளுக்கு மட்டும் 2 கோடி இந்திய ரூபாய்களை முதலமைச்சர் நிதியிலிருந்து வழங்கியமை இயக்கங்களைப் பிரித்தாளும் முதலாவது இந்திய உளவுத்துறையின் தந்திரம்.

விடுதலைப் புலிகளுக்கும், ஏனைய மூன்று இயக்கங்களுக்கும் எம்.ஜி.ஆர் ஊடாக பிளவை ஏற்படுத்திய இந்திய உளவுத்துறை, திராவிட இயக்க எல்லைக்குள் இருந்தும் விடுதலைப் புலிகளைப் பிரித்தெடுத்தது.

83 இன் இறுதியில் தி.மு.க விலிருந்த வை.கோ எழுதிய யமுனைக் கரையில் ஈழப் புயல் என்ற நூலை அனைத்து இயக்கங்களும் ஈழத்தில் விற்பனை செய்தன. அது கூடப் பணத்தேவையை ஓரளவு பூர்த்தி செய்தது. எம்.ஜீ.ஆர் இன் பணம் வழங்கப்பட்ட பின்னர், வை.கோ இன் நூல் விடுதலைப் புலிகளால் விற்பனை செய்யப்படுவதில்லை.

திராவிட இயக்க எதிர்ப்பையே தமது அடிப்படைக் கோட்பாடாகக்கொண்ட நெடுமாறன் போன்றவர்கள் விடுதலஒ புலிகளோடு தொற்றிக்கொண்டார்கள்.

70 களிலிருந்து ஈழவிடுதலை ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களை அதிலிருந்து அன்னியப்படுத்தும் செயலை எம்.ஜீ.ஆர் இன் 2 கோடி ரூபாய்கள் உடாக கச்சிதமாக நடத்தி முடித்தது இந்திய உளவுத்துறை.

அக்காலப்பகுதியில் கருணாநிதியைச் சந்திப்பதையும் திராவிட இயக்கங்களோடு தம்மை அடையாளப்படுத்துவதையும் விடுதலைப் புலிகள் கவனமாகத் தவிர்த்துவந்தனர். இந்திய உளவித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் 2 கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்க எம்.ஜீ.ஆர் ஆல் முடிந்திருக்காது என்பது ஒருபுறமிருக்க பின்னாளில் இயக்கங்களுக்கு இடையேயான மோதலும் இதிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே உண்டு.

இந்தியாவின் இந்துதுவ அதிகாரவர்க்கத்தை திராவிட இயக்கங்கள் அச்சுறுத்திய அளவிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட அச்சுறுத்தியதில்லை. இந்திய உற்பத்தி முறையின் அடிப்படைக் கோட்பாட்டை அதன் வேர்கள் வரை சென்று விசாரித்த திராவிட இயக்கங்களின் சீர்திருத்தவாதம் தமிழ் நாட்டை தூக்கலாக உயர்த்திக்காட்டியது.

தி.மு.க மற்றும் திரவிட இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் கருணாநிதி முதல்வரான காலத்திலிருந்தே அதிகமாகியிருந்தது. கருணாநிதி முதல்வரான போது, வட இந்தியப் பத்திரிகைகள் “தமிழ்த் திவிரவாதி” முதல்வராகிறார் என எச்சரித்தன. அதன் தொடர்ச்சிகயாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை திராவிட இயக்கங்களிலிருந்து அன்னியப்படுத்த இந்திய உளவுத்துறை திட்டம் வகுத்தது. 2 கோடியில் ஆரம்பித்த இந்திய அதிகாரவர்க்கத்தின் சதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது….

தொடரும்….

 

http://inioru.com/karunanidhi-raw-and-eelam-struggle/

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதி கொல்லப்படுவது இப்போதல்ல(பகுதி2): சபா நாவலன்

karunanidhi_anna-300x215.jpg

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் மறைவும் அதன் பின்னான வாதப் பிரதிவாதங்களும் இன்றைய “தேசியவாதம்” தொடர்பான புதிய கேள்விகளை முன்வைக்கிறது. அவரின் இறப்பு “தமிழ்த் தேசியம் என்று அழைக்கப்படுகிற ஒரு கோட்பாட்டின் பின்னால் அணிதிரள்கின்ற ஒரு கூட்டத்தின் அரசியலை ஆழமான கேள்விக்கு உட்படுத்துகிறது. தேசியம் என்ற கோட்பாட்டின் சாத்தியம் தொடர்பாகப் அது பல வருடங்கள் பின்னால் சென்று வினவுகிறது.புத்தர் தோன்றிய காலம் என்பது மன்னர்களும் பேரரசுகளும் தோன்றிய காலம்.. நிலங்களை அதிகாரம் செய்பவர்களே சமூகத்தில் அதிகாரம்படைத்திருந்த அக்காலத்தில் இந்துத்துவம் ஆழ வேரூன்றியிருந்தது. புத்தரைக் கடவுளாக மாற்றி அவரைக் கொன்றொழிந்த பின்னர் கருணாநிதி போன்ற பலர் கருத்துரீதியாகக் கொலை செய்யப்பட்டிருந்தனர். கருணாநிதி உயிரோடு வாழ்ந்த காலம் முழுவதும் அவர் கருத்தியல்ரீதியில் கொலைசெய்யப்படாமலிருப்பதற்காக பல்வேறு சமரசங்களுக்கு உட்பட்டார். பலர் பண முதலைகளானதைக் தனது கண்முன்னே கண்டும் காணாமலிருந்ததிலிருந்து வன்னிப் படுகொலைகளின் போதான மவுனம் வரைக்கும் அந்த சமரசம் விரிவடைந்தது.

இந்த நிலையில் இந்திய மற்றும் ஆசிய சமூகத்தில் ‘தேசியம்’ என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

முதலில் தேசியம் என்பது மன்னர்களின் காலத்திற்கான ஒரு தத்துவம் அல்ல என்பதில் இடதுசாரி வலதுசாரி என்ற பேதங்களைக் கடந்து அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.( அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ராஜராஜ சோழனே தனது தேசிய முப்பாட்டன் என்று சீமானின் விசில்கள் சொன்னால் நான் அதற்குப் பொறுப்பல்ல). தேசியம் என்பது முதலாளித்துவக் காலத்திற்குரியது. முதலாளித்துவம் தோன்றும் போதே தேசங்களும், அவற்றின் கோட்பாட்டு வடிவமான தேசியமும் உருவாகும்.

அப்படித்தான் உலகம் முழுவதும் தேசங்களும் தேசியமும் தோன்றியிருக்கின்றன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் தோன்றுவதற்குரிய சூழல் இருந்தாலும் அது முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி பெறு இயலாத சூழலில் தேசியம் என்பது அதன் முழுமையான உள்ளர்த்ததில் இல்லாமல், வெறுமனே மதம், மொழி போன்றவற்றை முன்வைத்து உணர்ச்சி அரசியலுக்கான பயன்பாடாகவே முடிந்து போகிறது.

இந்தியாவில் தேசங்கள் அதாவது முதலாளித்துவம் தோன்ற இயலாத சூழல் காணப்படுவதாக 1873 ஆம் ஆண்டு இந்தியாவில் காலடிபதிக்காத கார்ல் மார்க்ஸ் கூறிய அதே காரணங்கள் இன்னும் அப்படியே காணப்படுகின்றன. ஆசிய உற்பத்தி முறை (AMP) என்று இந்திய பொருளுற்பத்தி முறையைக் குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், அங்கு அரசியல் அமைப்பிலிருந்து தனித்துவமான, பொதுவான விதிவிலக்குப் பெற்ற சமூக உறுப்பினர்களிடையேயான ஒழுங்கமைப்பு “மாறாத” தன்மைக்குக் காராணமான உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

karl-marx-300x202.jpg

இந்த மாறா நிலைக்கு, அதாவது வளர்ச்சியற்ற நிலைக்கு காரணம் இந்திய சாதீய அமைப்பும் அதன் தத்துவார்த்த மேல் பகுதியாக அமைந்திருக்கும் இந்துமதமுமே என்பது வெளிப்படையானது. இந்தியாவில்,(அது வேவ்வேறு தேசங்களின் கூட்டாக இருந்தால் கூட) முதலாளித்துவம் தோன்ற வேண்டுமானால் சாதீய அமைப்பும் அதனை தாங்கிப் பிடித்திருக்கும் இந்துத்துவமும் அழிவிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது முன் நிபந்தனை.
அதனைக் கடந்து செல்லாமால், முதலாளித்துவமும் தேசியமும், தேசங்களின் உருவாக்கமும் சாத்தியமற்றது என்பது கார்ல் மார்க்ஸ் அவதானித்த காலத்தில் மட்டுமன்றி இன்று வரை வெளிப்படையானதாகவே காணப்படுகிறது.

ஆசிய உற்பத்தி முறை தொடர்பான முழுமையான புரிதலின்றி இந்தியா போன்ற நாடுகளில் சோசலிசப் புரட்சி மட்டுமன்றி முதலாளித்துவப் புரட்சி கூடச் சாத்தியமற்றது என்பது வெளிப்படை.

இந்த வகையில் முதலாளித்துவம் சார்ந்து சாதீய நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்தவர்கள் என்ற பட்டியலில் பெரியார், அம்பேத்கர் என்ற வரிசையில் கருணாநிதியைக் குறிப்பிடலாம். கருணாநிதியின் சுருக்கமான வரலாற்றுப் பாத்திரம் இதுதான்.

இரண்டாயிரம் வருடங்களாக நடத்தப்பட்ட போராட்டத்தின் நமது காலத்தின் குறியீடாகக் கூட கருணாநிதியைக் குறிப்பிடலாம்.

எம்மைப் பொறுத்தவரைக்கும் இதே போராட்டம் மார்க்சிய லெனினிய தளத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முரண்பட்டாலும் கலைஞர் கருணாநிதியின் வரலாற்றுப் பாத்திரம் கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்.

இந்தியாவில் முதலாளித்துவப் புரட்சிக்கான அடிப்படையை கலைஞர்,பெரியார்,அம்பேத்கர் போன்றவர்கள் உருவாக்க முயன்றனர். ஆக, தேசியம், தேசங்களின் தோற்றம் ஆகிய கருத்துருவாக்கத்திற்கு இவர்களின் பங்களிப்பைக் கடந்து செல்ல முடியாது. இந்த வகையில் தமிழ் நாடு என்ற இன்னும் முழுமை பெறாத தேசத்தின் உருவாக்கத்தில் கலைஞரின் பங்கு அவரின் மரணத்தின் பின்னர் தேசியத்திற்கு எதிரான நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு வாதிகளை இனம் காட்டியிருக்கிறது என்பது சிறப்பு.

கலைஞர் கருணாநிதி என்ற தனி மனிதனாகட்டும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களாகட்டும் சாதீய ஒழிப்பு இந்துத்துவ எதிர்ப்பு என்ற வரையறைகளுக்கு அப்பால் எந்தக் குறித்த கோட்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. இந்த மூவருமே ஆளும் வர்க்கத்தையும் அதிகாரவர்க்கத்தையும் பயன்படுத்தி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

Karunanidhi_Kamaraj-300x200.jpg

காமராஜரையும் கருணாநிதியையும் ஆட்சியில் அமர்த்துவதன் ஊடாக தமது சமூக நீதி நோக்கங்களைச் சாதிக்க முயன்று பெரியார் வெற்றிகண்டுள்ளார். இந்திய அரசியலமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் அம்பேத்கார் வெற்றிகண்டார். அதே போல கருணாநிதியும் பல்வேறு வெற்றிகளைச் சேர்த்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார். பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஒட்டவைத்த ஜனநாயகத்தை சீர்திருத்தி முழுமையான நிலப்பிரபுத்துவத் தளைகளற்றை இந்துத்துவா தலையீடற்ற முதலாளித்துவ ஜனநாயகமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் சீர்திருத்தவாதக் கொள்கையாக அமைந்திருந்தது. இச் சீர்திருத்தவாதம் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது என்பதைப் புரட்சிகர சக்திகளே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

சீர்திருத்தவாதம் புரட்சிக்கு எதிரானது தான். இந்திய உற்பத்தை முறையின் நிலையான தன்மைக்கு எதிரான சீர்திருத்தவாதம் என்பது வேறுபட்டது. அது புரட்சிக்கான புறச் சூழலை ஏற்படுத்தவல்லது. இந்த வெளிச்சத்தில் தான் கருணாநிதியின் இறுதிக்காலம் வரையிலான அரசியல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்,
ஆனால் ஈழப் பிரச்சானை சார்ந்து அவரது அரசியலை மதிப்பீடு செய்பவர்கள் அத்தனை பேருமே, புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்ற அதே பழமைவாத கருத்தியலின் அடிப்படையில் கருணாநிதியை அணி சேர்த்துக்கொள்கிறார்கள்.

புலி ஆதரவு பிற்போக்குவாதிகளதும் பழமை வாதிகளதும் கருணாநிதி எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் புலி எதிர்ப்பு – அரச ஆதரவுக் கும்பல்கள் கருணாநிதியை எளிதாகத் தமது ஆளாகக் காட்ட முற்படுகிறார்கள். இந்த இரண்டு அணியுமே கருணாநிதியை மதிப்பீடு செய்யத் தவறியவர்கள் மட்டுமன்றி அவரது அரசியலுக்கு எதிரானவர்கள் என்பது தான் உண்மை.

(தொடரும்)

 

http://inioru.com/questioning-karunanidhi-by-tamil-nationalists/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.