Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தார்கள் வான்புலிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வந்தார்கள் வான்புலிகள்!

pg27fw8.jpg

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலங்கை கட்டுநாயகா விமானப்படைத் தளத்துக்குத் தம்முடைய “வான் புலிகள்” பிரிவைச் சேர்ந்த இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை வீசினார்கள் விடுதலைப் புலிகள். சில உயிர் இழப்புகள், பலர் காயம். தமிழர் பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசி பல அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்லும் இலங்கை விமானப்படையின் ரஷ்ய மிக் ரக விமானங்களும், (இந்தியாவில் வேஸ்ட் என்று தீர்மானிக்கப்பட்டு காலாவதியான அதே மிக்) இஸ்ரேலின் கஃபிர் ரக விமானங்களும் இங்கேதான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மொத்தம் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சுமார் இரண்டு மணி நேரங்கள் பறந்து, இலங்கை ராடார்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு (அதுவும் இந்தியா கொடுத்ததுதான்) இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வெற்றிகரமாக வீடு திரும்பியிருப்பது பல நாடுகளை அதிரச் செய்திருக்கிறது.

உலகிலேயே தனிப்பட்ட டெக்னாலஜி மூலம் விமானப்படை உருவாக்கிய ஒரே ஒரு கெரில்லா இயக்கம் புலிகள் இயக்கம்தான்.

புலிகள் ஏதோ இன்றுதான் விமானப் படை விமானங்களை உருவாக்கியிருப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தாலும் பல வருடங்களாகவே இந்த டெக்னாலஜியை அவர்கள் வைத்திருந்ததுதான் உண்மை. வன்னியின் தடை செய்யப்பட்ட இரனைமடு காட்டுப் பகுதியில் புலிகளின் விமானப் படைத் தளம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

புலிகளின் விமானப் படை ரன்வே பற்றிய சாட்டிலைட் படங்களை வைத்துக் கொண்டு _ பேச்சு வார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் புலிகளிடம் விளக்கம் கேட்ட போது, புலிகள் தரப்பில் பதில் ஏதும் சொல்லப்படவில்லை.

3600 அடி நீளம் கொண்ட இரனைமடு ரன்வேயை குண்டு வீச்சில் அழித்து விட்டதாக இலங்கை அரசு சொல்லி வந்தது. அப்படியென்றால் இந்த விமானங்கள் எங்கேயிருந்து பறந்து வந்தன என்கிற கேள்விக்கு பதில் இல்லை. மொத்தம் நான்கு இலகு ரக விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் புலிகளிடம் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை விமானப் படையும் தமிழர் வாழ் பகுதிகளில் அராஜக தாக்குதலை உடனே ஆரம்பித்து விட்டது. தமிழர்களின் முக்கியமான கவலை, இதை சாக்காக வைத்து இலங்கை அரசு வெளிநாடுகளிடம் மேலும் ஆயுதமும் தொழில்நுட்பமும் வாங்கும் என்பதுதான். அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான், ஏன் இந்தியா உள்பட, பல நாடுகளின் ஊடுருவல் இந்தத் தாக்குதல் மூலம் இலங்கையில் ஏற்படலாம் என்று அங்குள்ள பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் கவலைப்படுகிறார்கள்.

புலிகளிடம் இரவிலும் பறந்து தாக்கக் கூடிய அளவில் விமானப் படை டெக்னாலஜி இருப்பது உண்மையாகியிருக்கும் நிலையில், இலங்கை முழுவதும் பதட்டம் நிலவுகிறது. இந்த “வான்புலிகள்’’ விமானப் படைத் தாக்குதலை _ மறைந்த புலிகள் இயக்க, கர்னல் ஷங்கர் என்கிற வைத்தியலிங்கம் சொர்ணலிங்கத்துக்கு அர்ப்பணித்திருக்கிறார்கள் புலிகள். ஏர் கனடாவில் ஏரோநாட்டிக்கல் இன்ஜீனியராகப் பணியாற்றிய ஷங்கர் விமானம் பற்றிப் படித்தது சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில். 2001_ம் வருடம் படுகொலை செய்யப்பட்ட ஷங்கரின் ஒரே கனவு, புலிகளுக்கான விமானப் படையை உருவாக்குவதுதான். அவர் கனவு நிறைவேறி விட்டதாக கிளிநொச்சியில் இன்று கொண்டாட்டம் நிலவுகிறது.

50 இன்ச் நீளமும் 12 இன்ச் விட்டமும் கொண்ட குண்டுகளை “ஆட்டொமேடிக் வெப்பன் டிஸ்சார்ஜ்’’ முறையில் இந்தத் தாக்குதலில் புலிகள் வீசினர். அமெரிக்க உளவுத் துறைத் தகவல்களின் படி, செக்கோஸ்லெவேகியா மாடலான லின் இஸட்_ 143 ரக விமானம் ஒன்றும், சுவிட்ஸர்லாந்தின் பிலாத்தஸ் பி.சி 7 டிரைனர் ரக விமானம் ஒன்றும் புலிகள் வசம் இருப்பதாகத் தெரிகிறது. இதன் உதிரி பாகங்கள் தருவிக்கப்பட்டு வன்னிக் காட்டிலேயே அவை அஸம்பிள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் தேசங்களில் வான் புலிகளின் பைலட்டுகள் பயிற்சி பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிக்கு 240 கி.மி. வேகத்தில் பறக்கக் கூடிய இந்த சிறிய விமானங்களில் 1,040 கிலோ அளவுக்கு வெடி பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தத் தாக்குதலை அடுத்து இலங்கை அரசாங்கத்தின் முன்னால் பூதாகரமாக எழுந்திருக்கும் கேள்விகள் இவை:

புலிகளிடம் விமானப் படை இருப்பது நிரூபணமாகி விட்டது. இனி அவர்களால் தாக்கப்படக் கூடும் என்கிற இலக்குகள் என்ன?

செப்டம்பர் 11ல் நியூயார்க்கில் நடந்தது போன்ற ஒரு தற்கொலை விமானத் தாக்குதல் நடக்க வாய்ப்புண்டா?

இலங்கை விமானப் படைக்கு வான் பரப்பில் எதிரியுடன் போரிட்டு அனுபவமே இல்லை. எப்படி சமாளிக்கப் போகிறது?

புலிகள் இனிமேல் வான்வழியாகவும் ஆயுதங்களை பெறக்கூடும். அதை எப்படித் தடுப்பது?

விமான தளமும், ஓடுபாதையும், டெக்னாலஜியும் இருக்கும் பட்சத்தில் விமானங்கள் அங்கே ஹைஜாக் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இப்படிப்பட்ட கேள்விகளால் கதிகலங்கிக் கிடக்கிறார் ராஜபக்ஷே.

- கிருஷ்ணா டாவின்ஸி

குமுதம்

கைஜக் பண்ண புலிகள் அல்குவைடா அல்ல தனிப்பட்ட வியாபாரத்துக்காக உண்மைக்கு புறம்பான எதிர்வுகூறல்களை சொல்லி விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்துகின்றன குமுதம் போன்ற பத்திரிகைகள் இதை வன்மையாக கண்டிக்க வேன்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.