Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனீஷியா: பூமியின் 10 கி.மீ ஆழத்தில் கடும் நிலநடுக்கம்

Featured Replies

இந்தோனீஷியா: பூமியின் 10 கி.மீ ஆழத்தில் கடும் நிலநடுக்கம்

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கியுள்ளது.

Indonesia earthquake Lombok island Image captionஎரிமலை அருகே வசிப்பதால் இயற்கை பேரிடர்கள் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகக் கூறுகிறார் லோம்போக் தீவில் வசிக்கும் கிடா திவிப்பயாசாந்த்ரி.

இந்த நிலநடுக்கம் ஏழு எனும் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் உண்டானதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும் சில மணி நேரங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது.

பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், அந்தத் தீவின் வடக்கு கடலோரப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் அமைப்பான யு.எஸ் ஜியாலஜிக்கல் சர்வே கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த செய்திகள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும், கடலில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

அப்பகுதியில் உள்ள எரிமலை அருகே வசிக்கும் மக்களும் நிலநடுக்கம் நிகழ்ந்த பிறகு அதிகமான எண்ணிக்கையில் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அத்தீவில் இயங்கி வரும் விமான நிலையத்துக்கு எந்த சேதமும் உண்டாகவில்லை எனவும், அது வழக்கமாக இயங்கி வருவதாகவும் அவ்விமான நிலையத்தை இயக்கி வரும் அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள பாலி தீவிலும் சில நொடிகள் உணரப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டடங்களுக்குள் இருந்த மக்கள் உடனடியாக வெளியேறினார்கள்.

Indonesia earthquake Lombok island

தான் தங்கியிருந்த விடுதியில் இருந்த அனைவரும் வெளியேறி ஓடியதால், தாமும் வெளியேறியதாக மிஷெல் லிண்ட்சே எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

லோம்போக் தீவில் கடந்த வாரம் உண்டான நிலநடுக்கத்தால் உண்டான மலைச்சரிவில் ரிஞ்சனி மலையில் மலையேறச் சென்ற 500க்கும் மேற்பட்டவர்கள் மலையிலேயே சிக்கிக்கொண்டனர்.

அவர்களில் சிலர் தரை மார்க்கமாகவும், சிலர் ஹெலிகாப்டர் உதவியுடனும் மீட்கப்பட்டனர். அந்த நிலநடுக்கத்தில் 16 பேர் பலியாகினர்.

https://www.bbc.com/tamil/global-45076796

  • தொடங்கியவர்

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்பு

இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை ஞாயிற்றுக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 82 பேர் இறந்துள்ளது தெரிய வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை. பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியின் வரைபடம்

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால், இந்தோனீஷியாவிற்கு அருகே உள்ள பாலி தீவில் மக்கள் கத்திக்கொண்டே தங்கள் வீடுகளை விட்டு ஓடுவதை ஒரு காணொளி பதிவு காண்பிக்கிறது.

இந்தோனீஷியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 82 பேர் உயிரிழப்புபடத்தின் காப்புரிமைREUTERS

கடற்கரைகள் மற்றும் மலையேற்ற பாதைகளுக்கு பிரசித்திபெற்ற சுற்றுலாதளமான லோம்போக் தீவில் கடந்த வாரம் 16 பேர் உயிரிழக்க காரணமான நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.

சுனாமி எச்சரிக்கைபடத்தின் காப்புரிமைREUTERS

லோம்போக் தீவில் உள்ள முக்கிய நகரமான மடராமில் பெரும்பாலான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக இந்தோனீஷியாவின் பேரிடர் தடுப்பு முகமையை சேர்ந்த பேச்சளார் ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த பெரும்பாலான கட்டடங்கள் தரம்குறைந்த மற்றும் வலுவில்லாத கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-45079891

  • தொடங்கியவர்

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் இதுவரை 145 பேர் உயிரிழப்பு

 
 
indhonasiajpg

நிலநடுக்கம் காரணமாக லாம்போக் தீவின் மத்தாரம் பகுதியில் சாலையில் தஞ்சமடைந்த பொதுமக்கள். படம்: ஏஎப்பி

இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 6.8, 7 ஆகப் பதிவாகின. அதன் 132 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

லாம்போக் தீவில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அங்கு 80 சதவீத வீடுகள் நில நடுக்கத்தால் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் சாலை, தெருக்களில் முகாமிட்டுள்ளனர். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்துள் ளனர்.

 

இந்தோனேசிய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதுவரை 145-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

லாம்போக் தீவு முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட் டுள்ளது. பாலங்கள் இடிந்து விழுந் துள்ளதால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு சேவைகளும் பாதிக்கப் பட்டுள்ளன.

பாலி தீவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கிருந்த வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

https://tamil.thehindu.com/world/article24620565.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.