Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14வது சார்க் மாநாடு இன்று தொடக்கம்

ஏப்ரல் 03, 2007

டெல்லி: தெற்காசிய கூட்டமைப்பின் (சார்க்) 14வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

2 நாட்கள் நடைபெறும் சார்க் மாநாடு டெல்லி, விஞ்ஞான் பவனில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

தீவிரவாதம், போதைப் பொருள் தடுப்பு, பஞ்சம், பொருளாதர முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.

மாநாட்டின் முக்கிய அம்சமாக தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

மாநாட்டை பிரதமர் மன்ேமாகன் சிங் தொடங்கி வைக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் செளகத் அஜீஸ், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக் ஷே, ேநபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, மாலத்தீவுகள் அதிபர் முகம்மது அப்துல் கயூம், பூடான் பிரதமர் லியான்போ காண்டு வாங்க்சுங், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் பக்ருதீன் அகமது ஆகிேயார் பங்ேகற்கின்றனர்.

சார்க் அமைப்பின் 8வது உறுப்பினராக புதிதாக ேசர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் சார்பில் அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாய் பங்கேற்கிறார்.

முதல் முறையாக அெமரிக்கா, ஐேராப்பிய யூனியன், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பார்வையாளராக கலந்து ெகாள்ளவுள்ளன.

சார்க் மாநாடுகளில் பார்வையாளராக கலந்து ெகாள்ள தங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை சார்க் நாடுகள் ஏற்கனவே ஏற்றுக் ெகாண்டுள்ளன.

ெதற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டாலும், தீவிரவாதம் குறித்து அதிக அளவில் விவாதம் இடம்பெறும் எனத் தெரிகிறது.

சார்க் மாநாட்டையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/04/03/saarc.html

சார்க் என்றால் என்ன கப்பி அக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் நிதியமைச்சர் ப. சிதம்பரமும், சிங்கள தேசத்தின் அடிவருடி மணிசங்கர் ஜயரும், அதில் கலந்து கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. ஆனால், கதிரையில் இருந்தபடி, மணிசங்கர் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றார்.

புலிகளின் வாந்தாக்குதலைப் பற்றி சர்வதேசம் வாய்திறக்காதபடியால், இலங்கை இந்த மகாநாட்டில் இதை ஒரு முக்கிய பிரச்சனையாகக் கிளப்பலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

தெற்காசியாவிலுள்ள கொலைகார முட்டாள்கள் எல்லோரும் சேர்ந்து விட்டார்கள், சார்க் எனும் முட்டாள்கள் மாநாட்டை நடத்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியன் போல "சார்க்' அமைப்பு மாற வேண்டும் : பொதுவான "கரன்சி' தேவை என ராஜபக்சே வலியுறுத்தல்

புதுடில்லி: ""ஐரோப்பிய யூனியன் போல சார்க் அமைப்பும் மாற வேண்டும். பொதுவான கரன்சியை அறிமுகப்படுத்த வேண்டும்,'' என இலங்கை அதிபர் ராஜபக்சே யோசனை தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜீசோ வழக்கம்போல இந்தியாவுடனான பிரச்னைகள் பற்றி புலம்பித் தீர்த்தார்.

"சார்க்' அமைப்பின் 14வது உச்சி மாநாடு டில்லியில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் "சார்க்' அமைப்பை சேர்ந்த எட்டு உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உரையாற்றினர். அவர்கள் பேசிய விவரம்: பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜீஸ்: சார்க் நாடுகளுக்கு இடையிலான ஒருமைப் பாட்டிற்கு அரசியல் உறுதிப்பாடே முதல் தேவை. கருத்து வேற்றுமை, அவ நம்பிக்கை போன்றவற்றால் தெற்கு ஆசியாவின் அரசியல் சூழ்நிலை தொடர்ந்து இழிவான நிலையில் உள்ளது. நம்முடைய சச்சரவுகளுக்கு தீர்வு காண்பதிலேயே ஆற்றல் அனைத்தையும் வீணாக செலவிடுவதால் "சார்க்' இலக்குகளை எட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தெற்காசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கான ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

* இலங்கை அதிபர் ராஜபக்சே: பயங்கரவாதம் ஒரு உலக அபாயமாக உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்காமல் எந்தவொரு நாடும் வளம்பெற முடியாது. பயங்கரவாதத்தை அரசியல் ரீதியாக தடுக்க வேண்டும். சார்க் நாடுகளில் உள்ள மக்களிடையே தொடர்புகளை வலுப் படுத்தும் இந்நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன் போல "சார்க்' நாடுகள் ஒன்று சேர்ந்து "சார்க் யூனியன் கூட்டமைப்பு' ஏற்படுத்த வேண்டும். "சார்க்' நாடுகள் அனைத்துக்கும் பொதுவான "கரன்சி'யை உருவாக்க சரியான தருணம் இதுவே. நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா: நேபாளத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கு எனது அரசியல் வாழ்வில் 60 ஆண்டுகாலம் போராடி உள்ளேன். பயங்கரவாதிகள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என பலர் கூறினர். ஆனாலும், மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சு நடத்தினேன். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் இழந்ததை போல நாடு எதையும் இழக்க கூடாது என கருதினேன். மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயக கட்டமைப்புக்குள் வந்து விட்டனர். தற்போது நேபாளத்தில் அமைதி திரும்பியதோடு புதிய அத்தியாயம் தொடங்கி விட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய்: அரசியல் ஆதரவு, நிதியுதவி உட்பட அனைத்து வழிகளிலும் பயங்கரவாதம் தடை செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால் இந்த பகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் தடுக்கப்படும். துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே குழாய் மூலமாக சமையல் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். உறுப்பு நாடுகளுக்குள் மிகப்பெரிய அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு அவசியம்.

* மாநாட்டில் சிறப்பு பார்வையாளராக அழைக்கப்பட்ட சீனா சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லீ ஜாவ்சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ""உள்கட்டமைப்பு, எரிசக்தி உட்பட அனைத்து துறைகளிலும் "சார்க்' உறுப்பு நாடுகளுக்கு சீனா ஒத்துழைப்பு தரும். பார்வையாளர் என்ற அடிப்படையில் "சார்க்' அமைப்பின் முடிவுகளை சீனா ஏற்று கொள்ளும்,'' என்றார். "சார்க்' அமைப்பின் அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட ஒரே தலைவர் என்ற பெருமையை மாலத்தீவு அதிபர் அப்துல் கயூம் பெற்றுள்ளார். கடந்த 1985ம் ஆண்டு தாகாவில் நடந்த முதல் "சார்க்' மாநாடு தொடங்கி இதுவரை நடந்த 13 மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளார். டில்லியில் நேற்று தொடங்கிய 14வது "சார்க்' மாநாடு தொடக்க விழாவில் உரையாற்றும்போது கயூம் இந்த தகவலை தெரிவித்தார்.

* "சார்க்' அமைப்பால் பலன் இல்லை : பாக்., பிரதமர் அஜீஸ் ஆதங்கம் : "நாடுகள் இடையே நிலவும் சண்டை சச்சரவுகள், அவநம்பிக்கை போன்றவற்றால் சார்க் அமைப்பால் எந்த பலனும் கிடைக்கவில்லை,' என பாகிஸ்தான் பிரதமர் சவுகத் அஜீஸ் கூறினார். அத்துடன் "காஷ்மீரே முக்கிய பிரச்னை' என கூறி வழக்கம் போல இந்தியா மீதான புகார்களை அவிழ்த்து விட்டார். "சார்க்' மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்துள்ள பாக்., பிரதமர் சவுகத் அஜீஸ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது: பாகிஸ்தானின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது காஷ்மீர் ஒரு முக்கிய பிரச்னை. பாகிஸ்தானும் இந்தியாவும் பல்முனை பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன. பேச்சு வார்த்தை எப்படி இருந்தாலும் முடிவுதான் முக்கியம். பிரச்னைக்கான தீர்வானது இரு நாடுகளின் நீடித்த நட்புறவுக்கு ஏற்றவகையில் இருக்கும். நாடுகள் இடையே நிலவும் சண்டை சச்சரவுகள், அவநம்பிக்கை போன்றவற்றால் "சார்க்' அமைப்பால் பலன் எதுவும் கிடைக்கவில்லை. முதலில் பேச்சுவார்த்தைகள் மூலமாக நாடுகள் இடையேயான பிரச்னைகளை தீர்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு சவுகத் அஜீஸ் கூறினார்.

http://www.dinamalar.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே பேச்சு இலங்கை பார்லி.,யில் அமளி

கொழும்பு : "சார்க் நாடுகள் ஒரே கரன்சியை ஏற்படுத்த வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்த கருத்து தொடர்பாக அந்நாட்டு பார்லிமென்ட்டில் கடும் அமளி ஏற்பட்டது.

பார்லிமென்ட் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக கருத்து தெரிவித்ததாக அதிபர் மீது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இப்பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

http://www.dinamalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.