Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொடா வழக்கிலிருந்து பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் விடுதலை

Featured Replies

[செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2007, 13:35 ஈழம்] [புதினம் நிருபர்]

பொடா வழக்கிலிருந்து பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோரை விடுதலை செய்து இன்று செவ்வாய்க்கிழமை பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13 ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த போதும், பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசக்கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதராமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை

சென்னை - ஏப்ரல் 03, 2007விடுதலைப் புலிகளை ஆதரித்து கூட்டம் நடத்தியதாக கூறி கடந்த அதிமுக ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5 ேபர் அந்த வழக்கிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் 13ம் ேததி சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் திறனாய்வு கூட்டம் நடந்தது. தமிழ் முழக்கம் பதிப்பாளர் ஷாகுல் ஹமீது என்பவர் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன், புதுக்ேகாட்டை பாவாணன், பாடலாசிரியர் அறிவுமதி, வழக்கறிஞர் அருள்மொழி உள்ளிட்ேடார் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் கலந்து ெகாண்டவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ேபசியதாக நெடுமாறன், சுப.வீ, பாவாணன், ஷாகுல் ஹமீது, தாயப்பன் ஆகிேயார் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

வேலூர் சிறையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஐந்து பேரும் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர். அவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

பின்னர் ஐந்து பேரும் தங்கள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி பொடா மறு ஆய்வுக் கமிட்டியிடம் விண்ணப்பித்தனர். அதை பரிசீலித்த மறு ஆய்வுக் கமிட்டி, ஐந்து பேர் மீதான வழக்குக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஐந்து பேர் மீதான வழக்கையும் திரும்பப் பெற முடிவு செய்தது.

இதுதொடர்பாக தமிழக அரசின் வழக்கறிஞர் வெங்கடசுப்ரமணி, பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தியாகராஜ மூர்த்தி, பொடா வழக்கிலிருந்து நெடுமாறன் உள்ளிட்டவர்களை நிரந்தரமாக விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

இதன் மூலம் பொடா வலையிலிருந்து நெடுமாறன் உள்ளிட்டவர்கள் வெளியில் வந்துள்ளனர்.

-தற்ஸ் தமிழ்

--------------------------

பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் பொடா வழக்கிலிருந்து விடுதலை

பொடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.

அம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.

பின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.

அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

-தென் செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி!

நெடுமாறன் அவர்கள் இன்னும் உறுதியோடு ஈழத்தமிழர்களுக்கான போரட்டத்தை தமிழகம் முழுமைக்கும் கொண்டு செல்வார்...

- கப்பல்பயணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.