Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது''

Featured Replies

''அரசின் இராணுவ மூலோபாயம் தோல்வியடைகிறது''

-ச.சங்கரன்-

விடுதலைப் புலிப்படைகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் பலப்பரீட்சை ஒன்றக்கான போர் ஆரம்பித்திருக்கின்றது. இதன் வெற்றி தோல்வி பூடகமாக உள்ளது. வெளித்தோற்றத்தில் ஒன்றாகவும், யதார்த்தத்தில் வேறு ஒன்றாகவுமேயுள்ளது. உண்மையிலேயே மகிந்த அரசாங்கத்தின் இராணுவ மூலோபாயம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அரசு எதிர்பார்த்த இராணுவத் திட்டமிடலின்படி எதுவும் நடைபெறவில்லை. அரசுக்கு நில மீட்பு என்ற பலகோணத்திட்டத்தின் கீழ் ஒரு கோணத்தில் தான் வெற்றிபோல் காட்டிக்கொள்ள முடிந்துள்ளது. இராணுவ ரீதியில் எதுவித நலன்களையும் சாதிக்க முடியவில்லை. புலிகளைப் பலவீனப்படுத்தவும் முடியவில்லை.

அரசாங்கத்தின் பிரதான திட்டம் புலிகளின் வன்னித்தளத்தை பலவீனப்படுத்துவது, அதன் மூலம் யாழ் மீட்புக்கான புலிகளின் திட்டத்தை சிதறடிப்பது, வடக்குக் கிழக்கு இணைப்புக்கான முல்லை, திருகோணமலைக்கான நிலத் தொடர்பினைப் பேணும் புலிகளின் திட்டங்களை முறியடிப்பது, இதற்காக வன்னியில் தயாராகும் புலிப்படை வீரர்களை அவர்களின் வன்னிக்கு வெளியே இழுத்து; இராணுவ களநிலவரங்களில் புலிகளுக்கு சாதகம் அற்ற கிழக்கில் வைத்து புலிகளுக்கு ஆளணி இழப்பை ஏற்படுத்துவதும், தோற்கடிப்பதும் அதன் அரசின் மூலோபாயமாக இருந்தது. வன்னியில் இருக்கும் புலிகளை கிழக்கிற்கு இழுத்தெடுத்து, கிழக்கில் புலிகளை இலகுவாக வெல்வதன் மூலம் வடக்கில் அல்லது வன்னியில் புலிகளினால் நிகழ்த்த திட்டமிடும் போரை தடுத்து நிறுத்துவது தான் அரசின் திட்டமாக இருக்கின்றது.

அரசின் இராணுவ மூலோபாயத்தினை முன்கூட்டியே அறிந்திருந்த புலிகள், கிழக்கில் எந்தவொரு பெரும் சமர்களிலும் ஈடுபட விரும்பவில்லை. தந்திரோபாயமாக தற்காப்புத் தாக்குதல்களையும், மட்டுப் படுத்தப்பட்ட தாக்குதல்களையும் நடாத்தி பின்வாங்கியமை உண்மையில் புலிகளின் மூலோ

பாய வெற்றி என்று தான் கூறவேண்டும். புலிகள் அகலக் கால் வைக்க விரும்பவில்லை. அரச படையினர் இப்போது அகலக்கால் பரப்பியுள்ளனர். எந்த வேளையிலும் படையினர் இடறி விழக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

சந்திரிகா அரச அதிபராகிய போது, அரசாங்கப் படையினரால் விட்டுச் செல்லப்பட்ட பகுதிகளைத் தான் தற்போது படையினர் கிழக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். யாழ்பாணத்தை மீட்பதற்கு எந்தப்படைகளை சந்திரிகா பயன்படுத்தினாரோ, அந்தப்படைகளை யாழ்ப்

பாணத்தை இழப்பதற்கு மகிந்தர் பயன்படுத்துகின்றார் என்பது தான் இராணுவ ஆய்வுகளின் முடிவு ஆகும். அரச படைகள் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளமை, யாழ்ப்பாணத்தில் அது எதிர்நோக்கவுள்ள தோல்விக்கான காரணமாக அமையப் போகிறது என்பது தான் உண்மை. சீனப் போரியல் அறிஞர் சன்சூ தனது போர்க்கலை என்ற புத்தகத்தில், எதிரியை உனது தளத்திற்கு இழுத்து அவனுடன் போரிடு. அவனுடைய தளத்திற்கு சொல்லவேண்டாம் உங்கள் தளத்தில் உங்களுக்கு வெற்றி. அவனுடைய தளத்தில் அவனுக்கு வெற்றி என்று கூறுகின்றார்.

அதேபோல் கடந்த காலத்தில் வன்னியை மையம் கொண்டு நடந்த தீச்சுவாலை, ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர் என்பன புலிகளுக்கு வெற்றியானது. இங்கு களம் புலிகளுக்கு சாதகமானதாக இருந்தமை தான் காரணம். கிழக்கு என்பது இப்போதைக்கு பின்புல ரீதியில் அரச படைக்கு சாதகமான இடம் ஆகும் அதனால் புலிகள் எதிரியை வன்னிக்கரைப் போர்க்களத்தில் சந்திக்க விரும்பகின்றனர். அரச படையினர் கிழக்கில் புலிகளை சந்திக்க விரும்புகின்றனர்.

அரசின் திட்டதிற்கு புலிகள் எடுபட்டுப் போகவில்லை. புலிகள் தமது திட்டத்தில் தெளிவாக உள்ளனர். யாருடைய படைகள் இடம்மாறுகின்றதோ அவர்களுக்கு ஆபத்து இருக்கின்றது. உண்மையில் அரசு புலிகளுக்கான பலப்பரீட்சைக் களம் கிழக்கு அல்ல. கிழக்குச் சமர்க்களம் எப்போதும் ஒரு போலியானது. வன்னியை மையம் கொண்ட போர் முனைதான் உண்மையில் வெற்றி தோல்வியினை தீர்மானிக்கும் கள முனை ஆகும். இங்கு தான் அரசு, புலிகளின் பலப்பரீட்சை தீர்மானிக்கப்படப்போகின்றது.

புலிகளை வன்னியில் பலவீனப்படுத்துவது தான் அரசுக்கு வெற்றி என்பது தெரியும். அது இயலாத காரணத்தினால் தான் கிழக்கில் ஒரு போலியான வெற்றியினைப் பெற்று அரசியல் இலாபம் ஈட்டலாம் என மகிந்த அரசு கருதி செயற்படுகின்றது. அரசியல் ரீதியில் கிழக்கின் சில பகுதிகளை ஆக்கிரமித்

ததன் மூலம் அரச படை ஒரளவு தனது வெற்றிச் செய்தியை சிங்கள மக்களுக்கு காட்டிக் கொண்டுள்ளது. ஆனால், அது நிரந்தரமான வெற்றி அல்ல. அது மகிந்த என்ற தனிமனித அரசியலுக்கு மட்டுமானதாகும். ஆகவே, அரசின் திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அல்லது எதிர்பார்த்த பயனை பெற்றக்கொள்ள முடியவில்லை. அரசு, புலிகள் தொடர்பாக எதனை எதிர்பார்த்ததோ அது நிகழவில்லை. அரசின் எதிர்பார்ப்பு பிழைத்துவிட்டது.

புலிகள் தமது திட்டமிட்ட செல்நெறியில் செல்கின்றனர். புலிகளின் திட்டத்தில் அரச படையினரால் குறுக்கீடு செய்ய முடியவில்லை. புலிகள் தமது பிரதான இலக்கை நோக்கியதாக முன்னேறிக் கொண்டேயுள்ளனர். புலிகள் தமது திட்டத்தில் தோல்வியடையவில்லை. அரசு தனது திட்டத்தில் தோல்வியடைந்ததினால் புலிகளுக்கு வெற்றி என்று கூற முடியும். நிலங்களை மீட்பது மட்டும் போரின் வெற்றியை தீர்மானிக்காது. எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்துவதும், பிடித்த நிலத்தை தொடர்ந்து பாதுகாப்பதும்தான் நிலையான வெற்றியாகும்.

நன்றி

ஈழமுரசு

இன்று, நேற்றல்ல கடந்த 20 வருடங்களிற்கும் மேலாக சிறீ லங்காஅரசின் இராணுவ மூலோபாயங்கள் தோல்வியடைந்து வந்திருக்கின்றது, எதிர்காலத்திலும் தோல்வியடையும்.

விரைவில் தமிழீழப் பகுதிகளைவிட்டு தமது காடையர் படைகளை சிறீ லங்கா அரசு வாபஸ் பெறுவதே அனைவருக்கும் நல்லது. கூலிப்படைகள் விடுதலைப் போராளிகளை ஒருபோதும் நிரந்தரமாக வெற்றி கொள்ள முடியாது.

200,000 கூலிப்படைகளை வைத்து சிறீ லங்கா அரசு பணம், பொருள், நேரம், மனித உயிர்களை விரயம் செய்யாமல், ஏதாவது உருப்படியான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவது அனைவருக்கும் நல்லது.

உதாரணமாக, சிறீ லங்கா கடற்படையை மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தலாம், சிறீ லங்கா இராணுவத்தை பயன்படுத்தி வயல், தோட்டம், துப்பரவுப் பணிகள் செய்யலாம்...

சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவதுபோல் இதுவரை நடந்த யுத்தங்களில் படையினர் நகர்த்தப் பட்டுக்கொண்டிருக்கின்றனர். இப்படியே நகர்த்திக்கொண்டிருந்தால் ஆட்டம் முடியப்போவதில்லை. புலிகள் சரியான தருணத்தில் சடுதியாக காய்களை வெட்டி வீழ்த்த வேண்டும். அதுவே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்.

  • தொடங்கியவர்

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். என்ற பழமொழி எல்லோருமே அறிந்ததொன்றுதான். இது தொடர்ந்து சோர்வடையாமல் செயற்படும் போது சாதனைகளைப் படைக்கலாம் என்பது பொருள். இந்தப் பழமொழிக்கு எதிர்மறையான கருத்தை என்னவென நான் உணர்கிறேன் என்றால் அடிமேல் அடிவாங்கினாலும் அம்மி நகரும்.

இங்கு நான் அம்மியெனக் குறிப்பிட்டது சர்வதேசத்தை. சர்வதேசத்தை ஒரு போராட்ட சக்தி தனது வழிக்கு அழுத்தங்களின் மூலம் கொண்டுவருவது சாத்தியமற்றதொன்று. ஆகவே தன்மீது விழும் அடிகளையும் அழுத்தங்களையும் தாங்கிக் கொண்டு சார்தேசமான அந்த அம்மியை எமது பக்கம் நகர்த்துவதற்கு எமது தலைமை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்தக் காலம் கனியும்வரை பொறுமை மிகத் தேவை.

இங்கேதான் இலங்கையரசின் மூலோபாயத்தின் தோல்வி வெளிப்படையாகத் தெரியவரும். அதுவரை அரச படைகளின் நில ஆக்கிரமிப்புகள் தொடரும். தோல்விகளை அவர்கள் உணரமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.