Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் வெண்புறா பணியகம் மீது சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம்

Featured Replies

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் பலி- 4 பேர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் (வயது 32)

அம்பலவன்பொக்கனையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஆனந்தராசா (வயது 45)

மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அமிர்தலிங்கம் அறிஞன் (வயது 27)

கண்ணகி நகர் விசுவமடுவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிற்றம்பலம் தர்மசேனன் (வயது 29)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

ஆனால் சிறிலங்கா படைத்தரப்பானது, தங்களது வானூர்திகள் முல்லைத்தீவில் உள்ள கடற்புலிகளின் தலைமையகத்தை தாக்கியழித்துள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது

tamilwin.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்குடியிருப்பில் கடற்புலிகளின் தளம் என்று சிங்கள அரசு கதை விடுகின்றது. ஆனால், புதுக்குடியிருப்பில் இருந்து கடற்கரை, குறைந்தது 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. தகவல் நம்பக் கூடியதாக இல்லை.

ஆனால், கிளிநொச்சி அழிவின் பின்னர், புதுக்குடியிருப்புத் தான் அரசாங்க அலுவலகங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. சொல்லப் போனால், பொதுமக்கள் சனநடமாட்டம் உள்ள இடம். இதனால் தான் இப்படி இலக்குகளைத் தெரிவு செய்கின்றதா?

[Wednesday April 04 2007 09:18:58 AM GMT] [யாழ் வாணன்]

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்புலிகளின் தலைமையகம் மீது இன்று பிற்பகல் 1.10 மணியளவில் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் அந்தத் தளம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

கடற்புலிகளின் தலைமையகத் தளத்தில் இருந்த எரிபொருள் களஞ்சியம் இந்த விமானக் குண்டுவீச்சின்போது தீப்பற்றி சுவாலைவிட்டு எரிந்ததாகவும், அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாகவும், தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மின்னஞ்சல் வழியாகத் தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், இன்று பிற்பகல் ஒரு மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு மிக் ரக குண்டு வீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும், இதன்போது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த விமானக் குண்டுத் தாக்குதலையடுத்து, குடியிருப்பு நகரப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுவதாகவும், அப்பகுதியல் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் விடுதலைப் புலிகள் இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி கடந்த வாரம் நள்ளிரவு வேளையில் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த வாரம் முழுதும் விமானப்படையினர் வன்னிப்பிரதேசத்தின் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாகவே புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில இன்றைய விமானக்குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்புலிகளின் தலைமையகம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள அதேவேளை, மக்கள் குடியிருப்புக்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பக்கசார்பற்ற தரப்பிலிருந்து தகவல்கள் எதனையும் பெறமுடியவில்லை.

bbc.com

நன்றி : தமிழ் வின்

இந்த சம்பவம் வெளினாடுகளின் ஊடகங்களுக்கு ஆதாரப்படங்களுடன் முழுவிபரத்துடன் அறிவிக்கபடவேண்டும்.

இனி பார்த்துக்கொண்டு இருக்காமல் ஒட்டுமொத்த வல்லூருகளும் அழிக்கப்படவேண்டும். அல்லது அழிவுகளும் மக்கள் இல்லாத

சிதைவடைந்த இடங்களே மிகுதியாக இருக்கப்போகிறது....... மிருகங்களுக்கு யுத்தம் ஒன்றே புரியும் மொழி......

உலகனாடுகளை கொண்டுவந்து யுத்தத்தில் மாட்டிவிட்டு தான் வேடிக்கை பார்க்க ஓடித்திரிகிறார் நரியார்.....ம்.........

தேவையற்ற காலம் போக்கல் எதிரிக்கு வசதியாக இருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 04-04-2007 23:30 மணி தமிழீழம் [மயூரன்]

வெண்புறா பணியகம் மீதே விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன - செல்வி

சிறீலங்கா விமானப் படையினரின் மிக் விமானங்கள் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள வெண்புறா பணியகம் மீதும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளதாக விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பணியகப் பேச்சாளர் செல்வி அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெண்புறா பணியகம் மீது தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக சிறீலங்கா அரசாங்கம் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக செல்வி தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா கடற்படைச் பேச்சாளர் அஜந்தா சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்தது போன்று அங்கே கடற்புலிகளின் தளங்கள் ஏதும் கிடையாது எனவும் அங்கே கண்டிவெடியால் உறுப்புக்களை இழந்த மக்களுக்கு செயற்கை உறுப்புக்களைப் பொருத்தும் வெண்புறா தொண்டர் நிறுவனத்தின் பணியகமே அங்கு இருந்ததாகத் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக கண்ணிவெடி தினமான இன்று செயற்கை உறுப்புக்களைப் பொருத்தும் வெண்புறா மீது தாக்குதலை நடத்தியிருப்பது சிறீலங்கா அரசாங்கம் இத்தினத்தை எவ்வாறு மதிக்கின்றது என்பதை காட்டுகின்றது எனவும் செல்வி மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

யாராவது லண்டனைச் சேர்ந்த வெண்புறா மூர்த்தி அவர்கள் CNN ற்கு கொடுத்த பேட்டியை கேட்டீர்களா?

சிலவேளைகளில், இந்தப் பேட்டியின் காரணமாக கொதிப்படைந்ததாலேயே, வெண்புறா அமைப்பை பழிவாங்கும் வகையில் வெண்புறா அமைப்பு அலுவலகம் மீது சிறீ லங்கா அரசினால் கோழைத்தனமான முறையில் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கக்கூடும்.

சிறீ லங்கா விமானங்கள் ஒரு ஊகத்தில் குண்டு எறிவது போல், இதுவும் ஒரு ஊகம் தான்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் விடுதலைப் புலிகள் இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி கடந்த வாரம் நள்ளிரவு வேளையில் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த வாரம் முழுதும் விமானப்படையினர் வன்னிப்பிரதேசத்தின் மீது குண்டுத்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாகவே புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில இன்றைய விமானக்குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிபிசியின் குள்ளநரித்தனத்தைப் பாருங்கள். கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான தாக்குதலால் தான், சிங்கள இராணுவம் புதுக்குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தியதாக தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு முதல் சிங்கள இராணுவம் குண்டு வீசிப்படுகொலை செய்த நவாலி முதல் இன்றுவரையிலான தமிழ்மக்களின் படுகொலைகளுக்கு என்ன காரணம் கூறப்போகின்றது?

தமிழ்மக்கள் மீது சிங்கள விமானப்படை கொலைவெறியாட்டம் போட்டதால் தான், புலிகள் கட்டுநாயக்கா மீது தாக்கினார்கள் என்று ஏன் இது நியாயப்படுத்தவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.