Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீறுகிறார் தமிழ்ச்செல்வன்

Featured Replies

மீண்டும் குண்டு மழை பொழிய குருதிநதி பெருக்கெடுத்து ஓடுகிறது ஈழத்துத் தெருக்களில். வான் புலிகளின் விமானத் தாக்குதல் உலகின் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைத்திருக்க, அதிர்ச்சியுடனும், மிரட்சியுடனும் திகிலடைந்து போயிருக்கிறது இலங்கை ராணுவம். இதன் தொடர்ச்சியாக இராமேஸ்வரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் நவீன ரேடார் கருவிகளை வைத்து இந்திய அரசு இருபத்தி நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் நம்முடைய கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தார்.

‘‘இலங்கை ராணுவத்தினர் ஒவ்வொரு முறை எமது மக்களின் மீது கொடூரமான விமானத் தாக்குதல்களை நடத்திய போதும், கொழும்புவில் இருக்கும் அவர்களது ‘கட்டுனயக்க’ விமானப் படைத் தளத்திலிருந்தே விமானங் களைக் கொண்டு வந்து குண்டு வீசுகிறார்கள். செஞ்சோலையில் குழந்தைகளைக் கொன்றது, வாகரை, சம்பூர் என்று எத்தனையோ தாக்குதல்களை சந்தித்தோம். நீண்ட காலம் பொறுத்திருந்தோம். எவ்வளவோ சமாதான சமிக்ஞைகளை இலங்கை அரசுக்குக் கொடுத்தோம், எதையுமே ஏற்றுக் கொள்ளாத சிங்கள அரசு எமது மக்களை ஈவிரக்கமில்லாமல் கொலை செய்வதிலேயே குறியாக இருந்தது.

எமது மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாகவும் ஒரு எச்சரிக்கையாகவுமே இந்த வான்படைத் தாக்குதலை மேற்கொண்டோம். இது எமது மக்களுக்கும் புலிகளுக்கும் கிடைத்த அபாரமான வெற்றி. இந்த வான்படைத் தாக்குதல் ஒரு துவக்கம்தான்..’’ என்கிற சுப.தமிழ்ச்செல்வனின் குரலில் உறுதியும் மகிழ்ச்சியும் தொனிக்கிறது.

‘‘வான் வழித் தாக்குதலை நடத்தி முடித்து விட்டு, ‘இந்தத் தாக்குதலை நடத்தியது நாங்கள்தான்...’ என்று அதனை உரக்கச் சொல்லி, உங்களின் இணைய தளங்களில் செய்தி வெளியிட்டிருக்கி றீர்கள். ‘செய்தியினூடே வெளியிடப்பட்டுள்ள படங்களில் இருக்கின்ற விமானங்களைக் கொண்டு இந்தத் தாக்குதலை நடத்த முடியாது’ என்று சில ராணுவ பயிற்சியாளர்கள் கூறுகிறார்களே? அப்படியானால் நீங்கள் பயன்படுத்திய விமானங்கள் நவீனரக விமானங்களா? அதை வெளியே காட்டாமல் வேறு விமானத்தைக் காட்டியது ஏன்?’’

‘‘தாக்குதலுக்கு என்ன விமானத்தைப் பயன்படுத்தினோம், எப்படிப் பயன்படுத்தினோம், அதன் தொழில்நுட்ப மற்றும் தாக்குதல் தந்திரங்கள் என்ன என்பது மாதிரியான எந்த தகவல்களையும் ஒருபோதும் நாங்கள் யாருக்கும் தெரிவிப்பதில்லை. இது ஒரு வரலாற்று ரீதியான வெற்றி அவ்வளவுதான். அதேபோல, விமானத்தை வைத்துத் தாக்குதல் நடத்தியதை நாங்கள் வெளியுலகுக்குச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருந்ததாலேயே அதனை வெளியே சொன்னோமே தவிர, வெற்று விளம்பரங்களுக்காக அதனை சொல்லவில்லை என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ, விடுதலைப்புலிகளை அடக்கி ஒடுக்கி விட்டோம் என்பது போன்றதொரு மாயையைத்தான் தொடர்ந்து இலங்கை அரசும் ராணுவமும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அப்பாவி மக்களை கொன்று போட்டு வீரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். இதே நிலை தொடரக்கூடாது. என்பதற்காகத்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறோம். இதன் பிறகாவது அரசும் இராணுவமும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நிறைய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்...’’

‘‘உலக நாடுகளில் உங்களை பயங்கரவாத இயக்கமாகத் தான் சித்திரித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, இப்படி வான்வழித் தாக்குதலெல்லாம் நீங்கள் நடத்திக் கொண்டிருந்தால், அது உலக நாடுகள் மத்தியில் உங்கள் மீதான பதட்டத்தைத்தானே அதிகரிக்கச் செய்யும்?’’

‘‘உலக நாடுகள் எமது படைகளைப் பார்த்து பதட்டப் படவேண்டிய அவசியமில்லை. நாங்கள் இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட எம் மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோமே தவிர, எங்கள் போராட்டம் சர்வதேச பயங்கரவாதமல்ல. எமது இலக்கு எமது மக்களை அழிக்கும் எதிரிகளிடமிருந்து காப்பதுதானே தவிர, அப்பாவி மக்களை கொல்வது இல்லை. எமது உணர்வு பூர்வமான தீரமிக்க போரை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் பேசுவதும் தவறான கண்ணோட்டமாகும். ஆகவே, எங்கள் போராட்டத்தில் பயங்கரவாதம் என்பதெல்லாம் ஒருபோதும் கிடையாது. இது உலக நாடுகள் அனைத்துக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். நாங்கள் நினைத்திருந்தால், கடைசியாக நடந்த வான்வழித் தாக்குதலின்போதுகூட பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதலை நடத்தியிருக்கலாம். அப்படிச் செய்யவில்லையே. ராணுவ தளம் இருக்கும் இடத்தைத்தான் குறிவைத்தோம். இதெல்லாம்தான் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது... அப்படி இருக்கும்போது, எங்களை உலக நாடுகள் எப்படி பயங்கரவாத இயக்கமாகப் பார்க்க முடியும்?’’

‘‘புலிகளுக்காக பால்ரஸ் குண்டுகளையும், இரும்புக் குண்டுகளையும் தமிழகத்தில் இருந்து கடத்துவ தாக தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் ஆயுதங்களைக் கடத்த தமிழகத்தை தளமாகப் பயன்படுத்துகிறீர்கள்?’’

‘‘தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவம் புரிகிற கொடுமை களுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டு வருகிற ஆதரவுப் போக்கை கொச்சைப்படுத்துகிற விதமாக திட்டமிட்டுப் பரப்புகின்ற பொய்ப் பிரச்சாரமாகத்தான் இதனை நாங்கள் பார்க்கிறோம். எம்மைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருந்து ஆயுதங்களையோ, வெடிமருந்துகளையோ கடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எமக்குத் தேவையான ஆயுதங்கள் எம்மிடமே போதுமான அளவில் இருக்கின்றன.

தமிழரின் தாயகப் பகுதிகள் முழுக்க உணவுப் பொருட்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் என சகல பொருட்களும் தடை செய்யப்பட்டதன் விளைவு, அங்கே மக்கள் பட்டினியிலும் நோயிலும் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள

தமிழ்ச்செல்வன் அழகாகப் பதில் கூறி பலரின் சந்தேகங்களை நீக்கி இருக்கின்றார், இணைப்பிறகு நன்றி!

இங்கு தமிழ்ச்செல்வனின் கீழ்வரும் கூற்று கவனிக்கத்தக்கது....

நவீன ரக ஆயுதத் தொழில் நுட்பத்தில் நாங்கள் பல மைல்கற்களைக் கடந்துவிட்டோம் என்பதை இந்த நேரத்தில் பணிவுடன் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படி இருக்கும்போது, பால்ரஸ், ஈயக்குண்டுகள் போன்றவற்றை யெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதமாக கடத்துகிறார்கள் என்று சொல்லி, தங்களுடைய அறியாமையால் எங்கள் வளர்ச்சியை யாரும் சிறுமைப்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்....’’

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. போதியளவு ஆயுதங்கள் எங்களிடம் இருக்கிறது இந்தியாவில் இருந்து கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை, அடுத்ததாக எங்களது படகோட்டிகள் நன்கு திட்டமிட்ட முறையில் பயிற்றுவிக்கப் பட்டவர்கள், ஆகவே கைது செய்யப்பட்டவர்கள் எங்கள் போராளிகள் இல்லை, அப்படியென்றால் என்ன நடக்கின்றது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் என்ன நடக்கின்றது?

தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு நாடகம் நடக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.