Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமராஜா சினிமா விமர்சனம்

Featured Replies

Master.jpg

சீமராஜா சினிமா விமர்சனம்

 
விமர்சகர் மதிப்பீடு 3 / 5
வாசகரின் சராசரி மதிப்பீடு3 / 5
 
நடிகர்கள் சிவகார்த்திகேயன்,சமந்தா,சிம்ரன்,நெப்போலியன்,சூரி,லால்,யோகிபாபு
இயக்கம் பொன்ராம்
 
 
 
 
கரு: ராஜவம்சத்தை சேர்ந்த சீமராஜா தனது ராஜ கௌரவத்தை மீட்டெடுக்க முயல்வது தான் ’சீமராஜா’ படத்தின் கரு.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களுக்கு பிற்கு சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்துள்ள மூன்றாவது படம் ’சீமராஜா’.

வழக்கம் போல நகைச்சுவை காட்சிகள் மிகவும் தரமாக தயாராகியுள்ளது. டீச்சராக வரும் சமந்தாவின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும்படியான இருக்கும் நிலையில், சிம்ரனின் கதாபாத்திரம் தெறிக்க விடுகிறது.

மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் லால் இருந்தபோதிலும், ’சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் - சிம்ரன் காம்போ தான் பிரதானம். இதற்கிடையில் சூரி அடிக்கும் லூட்டிகளும் ரசிக்க வைக்கின்றன.

பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் இதுவரை வெளிவந்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’ படங்கள் வரிசையில் ‘சீமராஜா’வும்இணையும் என எதிர்பார்க்கலாம்.

https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/seemaraja-movie-review-rating-in-tamil/moviereview/65791841.cms

  • தொடங்கியவர்

சீமராஜா திரை விமர்சனம்

சீமராஜா திரை விமர்சனம்

 

சீமராஜா திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.

அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.

முதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.

அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.

படத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.

இதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.

லால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.

ஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி.

சிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.

பல்ப்ஸ்

வலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.

 

 

https://www.cineulagam.com/films/05/100962?ref=home-imp-parsely

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: சீமராஜா

கார்திகேயன் மற்றும் சமந்தாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA
   
திரைப்படம் சீமராஜா
   
நடிகர்கள் சிவகார்த்திகேயன், சமந்தா,கீர்த்தி சுரேஷ், சிம்ரன், சூரி, நெப்போலியன், மொட்டை ராஜேந்திரன், லால்
   
இசை டி. இமான்
   
ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியன்
   
இயக்கம் பொன்ராம்
   
   

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - சூரி - பொன்ராம் கூட்டணி இணைந்திருக்கும் மூன்றாவது படம்.

தென் தமிழ்நாட்டில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனின் இளைய வாரிசு சீமராஜா (சிவகார்த்திகேயன்). இந்த ஜமீன் குடும்பத்திற்கு எதிராக அந்த ஊரில் செயல்பட்டுவருகிறான் காத்தாடி கண்ணன் (லால்).

இருவருக்கும் இடையில் அவ்வப்போது மோதல் நடந்துவருகிறது. இதற்கிடையில் ஜமீன் பிரித்துக்கொடுத்த நிலங்களை, கண்ணனின் தூண்டுதலால் அங்கிருக்கும் விவசாயிகள் மொத்தமாக ஒரு வட இந்திய நிறுவனத்திற்கு விற்க முயல்கிறார்கள்.

சீமராஜாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA

இதை எதிர்க்கும் சீமராஜாவின் தந்தை (நெப்போலியன்) அவமானத்தில் இறக்கிறார். இதற்கு நடுவில் சீமராஜா காதலிக்கும் சுதந்திரச்செல்வி (சமந்தா) காத்தாடி கண்ணனின் பெண் என்றும் தெரியவருகிறது.

சீமராஜா தந்தையின் மரணத்திற்கு காரணமான அவமானத்தை நீக்கினாரா, காதலியை திருமணம் செய்தாரா என்பது மீதிக் கதை.

தமிழ் சினிமாவில் பல முறை பார்த்துப் பழகிப்போன ஒரு வழக்கமான பாணியில், வழக்கமான கதையைக் கொடுத்திருக்கிறது சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி.

சீமராஜாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA

கதாநாயகன் குடும்பம் ஊரிலேயே பெரிய குடும்பமாக இருக்க, வில்லன் அந்தக் குடும்பத்தை அவமானப் படுத்தும் கதை எத்தனை படங்களில் வந்துவிட்டது?

கடைசியில் பார்த்தால் நாயகன் காதலிக்கும் பெண் வில்லன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பது இன்னும் பழைய பாணி.

கதாநாயகியை சீண்டிச் சீண்டி காதலிக்க வைப்பது, கதாநாயகனுக்குத் துணையாக ஒரு காமெடியன் இருப்பது என எல்லாவற்றிலும் ஒரு பழைய வாடை. ஏன், பாடல்கள்கூட ஏற்கனவே பல படங்களில் கேட்டதுபோலவே இருக்கிறது.

சீமராஜாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA

இதையெல்லாம் மீறி, ஒரு ஜாலியான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் பொன்ராம். அதற்கு சிவகார்த்திகேயன் - சூரி ஜோடி கைகொடுக்கிறது.

கதாநாயகன் என்ன வேண்டுமானாலும் செய்வார், எத்தனை பேரை வேண்டுமானலும் அடிப்பார், எந்தப் போட்டியிலும் ஜெயிப்பார் என்று மனதைத் தேற்றிக்கொண்டால், அவ்வப்போது சூரியின் நகைச்சுவையோடு படம் ஜாலியாகவே நகர்கிறது.

சீமராஜாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA

இப்படியாக படம் போய்க்கொண்டிருக்கையில் திடீரென சென்டிமென்டாக, 14ஆம் நூற்றாண்டிற்குப் போய், மாலிக்காஃபூர், அலாவுதீன் கில்ஜி, வில்முனை வியூகம் என திகைப்பூட்டுகிறார்கள்.

தனியாக பார்க்கும்போது இந்தப் பகுதி நன்றாக இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஜாலி திரைப்படத்திற்குள் இந்தப் பகுதி ஒட்டவில்லை.

இலங்கை இலங்கை

அதேபோல விவசாயம், நிலம் பற்றிய உபதேசங்கள், பஞ்ச் வசனங்கள் படத்திற்குப் பொருந்தவில்லை.

சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சில காட்சிகளில் வரும் கீர்த்தி சுரேஷ், லால் (இதே மாதிரியான வில்லன் பாத்திரத்தில் லால் இன்னும் எத்தனை படம் நடிப்பாரோ?) என எல்லோருக்குமே ஊதித்தள்ளக்கூடிய வேடம்தான்.

சீமராஜாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA

படத்தில் வில்லியாக மீள்வரவு அளித்திருக்கும் சிம்ரன், நன்றாகத்தான் நடிக்கிறார். ஆனால், அவருக்கு டப்பிங்கில் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் பேச்சு வழக்கும் சுத்தமாகப் பொருந்தவில்லை.

இலங்கை இலங்கை

எல்லாப் பாடல்களுமே கேட்கும்படியாக இருக்கின்றன. "வாரேன்.. வாரேன்.. சீமராஜா", "மச்சக்கன்னி" பாடல்கள் அட்டகாசம். ஆனால், முன்பே சொன்னதைப் போல பாடல்கள் எல்லாமே முன்பே கேட்டதுபோலவே இருக்கின்றன.

சீமராஜாபடத்தின் காப்புரிமைSEEMA RAJA

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம், படமாக்கம்தான். வழக்கமான கூட்டணி, வழக்கமான கதை என்பதால் வழக்கம்போல எடுக்காமல், மேக்கிங்கில் பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார் பொன்ராம்.

சிவகார்த்திகேயன் படத்திற்குப் போனால், கவலையின்றி சிரித்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களை ஏமாற்றாத படம்.

https://www.bbc.com/tamil/india-45509172

 

 

 

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

 
டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja
 

முன்னொரு காலத்தில், எதிரிகளிடம் போரிட்டு தன் மண்ணைக் காக்கும் மன்னன், கடம்பவேல்ராஜா. அதேபோல், இந்தக் காலத்திலும் எதிரிகளிடமிருந்து தன் மண்ணைக் காக்க போராடுகிறார் மாடர்ன் மன்னன் `சீமராஜா.' பராக்... பராக்!

சீமராஜா விமர்சனம்

85,000 ஏக்கர் பரப்பளவுகொண்ட சிங்கம்பட்டி சமஸ்தானம். ஜமீன்தார் ஆட்சிமுறை ஒழிப்புக்குப் பின், மலையளவு சொத்துகள் மடுவளவு குறைந்து சமஸ்தான குடும்பத்தின் மினுமினுப்பு மங்கிப்போகிறது. அக்காலத்தில் பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கிய பரம்பரையில் வந்த ராஜாவோ இன்று டிராக்-டிஷர்ட்டோடு சுசுகி பைக்கில் ஊர் சுற்றுகிறார், ராணியோ கையில் விளக்கமாற்றோடு முறைவாசல் செய்கிறார். ஆனாலும், ஊர் மக்களுக்கு ராஜா ராஜாதான்! மரியாதை மங்காமலே இருக்கிறது. சிங்கம்பட்டியின் பக்கத்து ஊரான புளியம்பட்டியில் பெரும்புள்ளியாக இருக்கிறார் `காத்தாடி' கண்ணன். காற்றாலை அமைக்க `காத்தாடி' கண்ணன் சிங்கம்பட்டியில் காலூன்ற முயல, சிங்கம்பட்டி சமஸ்தானம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படத்தின் மையக்கதை. இதற்கிடையில், சீமராஜாவின் பார்வை சீமராணியின் பக்கம் திரும்புவது, சிம்ரன் சேலையிலேயே சண்டியர் கட்டு கட்டுவது, யோகிபாபு ஒற்றைப் பாடலுக்கு வருவது, சூரி சிக்ஸ் பேக்ஸ் வைப்பதென திரைக்கதையில் என்னென்னமோ நடக்கிறது.

 

 

சீமராஜா, கடம்பவேல்ராஜா எனும் இருவேடங்களில் சிவகார்த்திகேயன். ஜாலி,கேலி சீமராஜாவாக மனதில் சௌகர்யமாக அமர்கிறவர், கடம்பவேல் ராஜாவாக அமரும்போதுதான் போர்வாள் குத்துகிறது. வீரதீர புஜபல பராக்கிரம மாஸ் ஹீரோவாக உருவெடுக்க, அத்தனை வித்தைகளையும் படத்தில் இறக்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பன்ச் வசனம் பேசுவதிலும் நன்றாகவே ட்யூன் ஆகியிருக்கிறார் என்பது தெரிகிறது. சீமராஜாவின் ஜோடி `சிலம்ப செல்வி' சுதந்திர செல்வியாக சமந்தா. கிடைத்த இடங்களில் நன்றாகவே நடிப்பை நிரப்பியிருக்கிறார். சில இயக்குநர்களோடு சேரும்போது மட்டும் சூரியின் ஹியூமர் சென்ஸ் ஆசம்மரக்காயா! பொன்ராமின் முந்தைய படங்களைப்போலவே இதிலும் சூரியின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது அவருக்கும் நமக்குமே ஆறுதல். 

 

 

சீமராஜா

காமெடி டிபார்ட்மென்ட்டில் நம்மை கவனிக்க வைக்கும் இன்னொருவர் `பனானா' பவுன்ராஜ். ' பத்து பைசா பீடிக்கு ஆசைப்பட்டு...' என பவுன்ராஜ் சொல்லும் ஃப்ளாஷ்பேக்குக்கு சிரிப்பில் அதிர்கிறது அரங்கம். வில்லி காளீஸ்வரியாக சிம்ரன். சிம்ரன்... என்னம்மா சிம்ரன் இது? வழக்கம்போல் ஹைப்பர் ஆக்டிவ் உடல்மொழியோடு ஹைபிட்சில் வசனம் பேசும் வில்லன் வேடத்தில் லால். அவரும் சிம்ரனும் கத்திக்கத்தி பன்ச் பேசியே காதுக்குள் காற்றாலையை சுற்றவிடுகிறார்கள். நெப்போலியன் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களுக்குத் தரபட்ட கதாபாத்திரத்தை நன்றாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். 

வாழ்ந்துகெட்ட ஜமீன் குடும்பம் என்றவுடன் இறங்கி கலாய்த்து தள்ளாமல், அதைக் கவனமாக, கூடவே கொஞ்சம் யதார்த்தமாகக் கையாண்ட விதம் பாராட்டுதலுக்குரியது பொன்ராம். அவரின் சமஸ்தானத்துக்கு உட்பட்ட காமெடி ஏரியாவில் நன்றாகவே ஆட்சி செய்திருக்கிறார். பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் காட்சி, மல்யுத்தத்துக்குத் தயாராகும் காட்சியென பல இடங்களில் நம்மை மறந்து சிரிக்க முடிகிறது. ஆனால், தன் ஏரியாவான காமெடியையும் விட்டுத்தர முடியாமல், சிவாவுக்கு ஏற்ற ஆக்‌ஷன் பேக்கேஜையும் கட்டித் தர முடியாமல் பொன்ராம் தடுமாறியதை உணர முடிகிறது. கமர்ஷியல் படத்தில் பில்டப் காட்சிகள் அவசியம்தான். ஆனால், அளவுக்கு மீறி திரும்பத் திரும்ப வரும் ஸ்லோமோஷன் காட்சிகளும் மாறவே மாறாத தீம் மியூசிக்குகளும் தரையில் காலை ஓங்கி தட்டினால் கைக்கு பறந்து வரும் ஆயுதங்களும் சலிப்பைத் தருகின்றன. படத்தின் எதிர்பார்ப்புக்கு வார் சீக்வென்ஸும் ஒரு முக்கியக் காரணம். அது சூப்பரா, சுமாரா என்று விமர்சிப்பதற்கு முன், முதலில் அந்தக் காட்சிகள் தேவைதானா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. 

 

 

சிவகார்த்திகேயன் - சமந்தா

இமானின் இசையில் பாடல்கள் எல்லாம் எங்கேயோ கேட்ட ரகம். 'அரைச்ச மாவையே அரைச்சாலும் அதுக்கு வேணும் தனித்திறமை' என்பதெல்லாம் சரிதான். அதைக் கேட்க எங்களுக்கு பொறுமையும் வேண்டுமல்லவா? டிராக்கை மாற்றுங்கள் இமான், ப்ளீஸ்! பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு பலே! வண்ணம் குழைத்து பிரமாண்டம் சேர்த்திருக்கிறது. ஃபிளாஷ்பேக் சண்டைக்காட்சிகள் மற்றும் திருவிழா காட்சிகள் இரண்டிலும் முத்துராஜின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இன்னும் கத்தரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன். 

ஆக்‌ஷன், காமெடி என சீமராஜாவின் இரட்டைக் குதிரை  சாரட் இருவேறு துருவங்களுக்குப் பாய்கிறது. திரைக்கதை கடிவாளத்தைக் கொண்டு அதை வசப்படுத்தியிருக்கலாம் பொன்ராம்!  

https://cinema.vikatan.com/movie-review/136808-seemaraja-movie-review.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.