Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள்

Featured Replies

நம்பிக்கை இழந்துவரும் தமிழ் மக்கள்

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஐ.நா. பொதுச் செய­லாளர் மற்றும் ஐ.நா.மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் ஆகி­யோரை சந்­தித்து பேச­வுள்ளார். ஜனா­தி­ப­தியின் இந்த சந்­திப்பு பெரும் எதிர்­பார்ப்பை தோற்­று­வித்­துள்­ளது. தனது உரை எந்­த­வ­கை­யான விமர்­ச­னத்­துக்­குள்­ளான போதும் அது தொடர்பில் தான் கவலை கொள்­ளப்­போ­வ­தில்லை எனவும் ஜனா­தி­பதி ஏலவே தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக இலங்கைப் படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை நீக்கும் யோச­னை­களை ஜனா­தி­பதி முன்­வைப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் ஏலவே ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்ட விட­யங்­களை சரி­யான வகையில் நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் வெறு­மனே கால அவ­கா­சத்தைக் கோரி சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்றி வரு­வ­தாக தமிழ் தரப்­புகள் தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளன. முன்­னைய அரசும் இதே பாணியில் சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய உறுதி மொழி­களை நிறை­வேற்­றாமல் இழுத்­த­டித்து வந்­தது. இதனால் சர்­வ­தேச ரீதியில் இலங்கை மிகுந்த அப­கீர்த்­திக்கு உள்­ளான நிலையை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.

எவ்­வா­றெ­னினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பொறுப்­பேற்ற நல்­லாட்சி அரசு, இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குற்­றச்­சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் காலப்­போக்கில் முன்­னைய அர­சுக்கு எந்­த­வ­கை­யிலும் சளைத்­த­தில்லை என்ற போக்­கி­லேயே இந்த அரசும் நடந்து கொள்­வ­தாக தமிழ் தரப்பு சுட்­டிக்­காட்டி வரு­கின்­றது. குறிப்­பாக போர்க் குற்­றங்­களை நியா­யப்­ப­டுத்தும் அல்­லது நிரா­க­ரிக்கும் போக்­கையே அர­சாங்கம் கொண்­டுள்­ள­தா­கவும் இதன் மூலம் பாதிக்­கப்­பட்ட தமி­ழ­ருக்கு எந்­த­வித நியா­யமும் பிறக்­கப்­போ­வ­தில்லை எனவும் தமிழ் மக்கள் கூறு­கின்­றனர்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்கள் விடு­விப்பு விவ­காரம் மிகவும் மந்த கதியில் நடந்­து­வரும் அதே­வேளை, காணா­ம­லாக்­கப்­பட்டோர் மற்றும் சிறைச்­சா­லை­களில் வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பவை தொடர்ந்தும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத நிலையே இருந்து வரு­வ­தாக பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்கள் மிகுந்த கவலை வெளி­யிட்­டுள்­ளனர்.

 குறிப்­பாக தமிழ் அர­சியல் கைதிகள் விசா­ர­ணைகள் இன்றி வரு­டக்­க­ணக்கில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­பதன் மூலம் அவர்­களின் எதிர்­காலம் மாத்­தி­ர­மன்றி அவர்­களில் தங்­கி­யி­ருப்­போரின் நிலை­மையும் மிகவும் பரி­தா­பத்­துக்­குள்­ளாகி வரு­வதை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சிந்­திப்­ப­தாக தெரி­ய­வில்லை என்­பதும் தமிழ் மக்­களின் குற்­றச்­சாட்­டாக இருந்து வரு­கி­றது. வெறு­மனே ஐ.நாவிலும் ஜெனீவா மனி­த­வு­ரிமை பேர­வை­யிலும் இலங்கை அர­சாங்கம் நொண்டிச் சாட்­டுக்­களை கூறி காலத்தை கடத்தி சர்­வ­தேச சமூ­கத்தை ஏமாற்றி வரு­கின்­றதே தவிர இதய சுத்­தி­யுடன் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­யான வகையில் அணுகத் தவ­றி­யுள்­ளது என்­பதும் தமிழ் மக்­களின் குற்­றச்­சாட்­டாகும்.

வெறு­மனே காலத்தை கடத்திப் பிரச்­சி­னை­களை ஆற­விட்டு அதன்­மூலம் போர்க்­குற்­றச்­சாட்­டுகள் உட்­பட அனைத்து வித­மான குற்­றச்­சாட்­டு­களில் இருந்தும் தப்­பிக்­கொள்ளும் யுக்­தி­யையே இலங்கை அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கி­றது. இதன்­மூலம் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் நியாயம் கிடைக்கப் போவ­தில்லை என மிகுந்த விரக்­திக்­குள்­ளா­கின்­றனர்.

இத­னி­டையே, அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லை­யி­லுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் 8பேர் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்­

கி­ழமை முதல் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கடந்த 9வருட கால­மாக சிறைச்­சா­லையில் தண்­டனை அனு­ப­வித்து வரும் நிலையில் தம்மை விடு­விக்­கு­மாறு கோரியே இக்­கை­திகள் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். தம்­மீ­தான வழக்கு விசா­ர­ணைகள் திட்­ட­மிட்டு காலந்­தாழ்த்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதே­வேளை, உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களின் விடு­தலை மற்றும் அர­சியல் தீர்வு உள்­ள­டங்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்­பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். குறிப்­பாக அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து ஜனா­தி­ப­திக்கு விளக்­க­ம­ளித்­துள்ள எதிர்க்­கட்சித் தலைவர் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகளை விரை­வாக விடு­தலை செய்­யப்­பட வேண்­டிய அவ­சி­யத்­தையும் அவர் எடுத்துக் கூறி­யுள்ளார்.

இது தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்ளார். அந்தக் கடி­தத்தில், 'வட மாகா­ணத்­துக்கு நீங்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்ட பல தரு­ணங்­களில் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை குறித்து நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­க­ளித்­தி­ருந்­தீர்கள். வழக்­குகள் தாக்கல் செய்­யாமல் போது­மான சாட்­சி­யங்கள் இல்­லா­த­வரை உடன் விடு­தலை செய்­வ­தா­கவும் வாக்­க­ளித்­தி­ருந்­தீர்கள். எனினும் அவை இற்­றை­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இரா­ணுவப் போர் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக கட்­டாய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­வ­ரும்­போது மேற்­படி தமிழ் சிறைக்­கை­தி­களை பகடைக் காய்­க­ளாக பயன்­ப­டுத்­தவே அவர்கள் சம்­பந்­த­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்­காது தாம­திக்­கின்­றீர்­களோ என எண்ணத் தோன்­று­கி­றது. எனினும் உங்கள் மீதான நம்­பிக்­கையை இன்­னமும் நாம் இழக்­க­வில்லை. நீங்கள் உங்கள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வீர்கள்' என்று நம்­பு­கிறேன் எனத் தெரி­வித்­துள்ளார்.

இதே கோரிக்­கையை மன்னார் பிர­ஜைகள் குழுவின் தலைவர் அருட்­தந்தை எஸ்.ஞான­பி­ர­காசம் அடி­க­ளாரும் முன்­வைத்­துள்ளார். அவர் இது தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கையில், கைதிகள் சுக­யீ­ன­முற்­றுள்ள போதும் அவர்­க­ளுக்கு கைவி­லங்­கி­டப்­பட்டே சிகிச்­சைகள் வழங்­கப்­பட்­டன. அதனை அவர்கள் எமக்கு துய­ரத்­துடன் வெளிப்­ப­டுத்­தினர். அவர்கள் தங்­களை விடு­தலை செய்­யா­வி­டினும் புனர்­வாழ்­வ­ளிக்­கவா­வது அனுப்­பு­மாறு கோரு­கின்­றனர். எனவே அவர்­களின் கோரிக்­கையை சாத­க­மாக பரி­சீ­லித்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதி மற்றும் அமைச்­சர்கள் வட­ப­கு­திக்கு விஜயம் செய்யும் சந்­தர்ப்­பங்­களில் வழங்கும் உறுதி மொழி­களை பின்னர் நிறை­வேற்ற தவ­று­வதே தமிழ் மக்கள் அவர்கள் மீதான நம்­பிக்­கையை இழப்­ப­தற்கு பிர­தான கார­ண­மாக அமை­கின்­றது. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்­வேறு கஷ்­டங்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும் மத்தியிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

அது மாத்திரமன்றி யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலைமைகளே தொடர்கின்றன. இது தொடர்பான ஆணைக்குழு மீதும் மக்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை. அரசின் செயற்பாடுகள் யாவும் வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருப்பதாக தமிழ் மக்கள் மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டேனும் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க இதய சுக்தியுடன் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மாறாக அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடித்து வருமானால் அது அரசின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழப்பதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.