Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் தொடர்ந்தும் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றம் :

October 2, 2018

mullaitheevu.jpg?resize=675%2C504

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி எல் வலயம் ஊடாக தொடர்ந்தும் காணிகள் கைப்பற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இதனை கூறியுள்ளார். அத்துடன் இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு கடிதத்தை நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளைய தினம் மாலை வடக்கு,கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது இக் குடியேற்றம் தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்து, அது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி எல் வலயத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தெற்கில் இருந்து சிங்களவர்களை அழைத்து வந்து குடியேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்ட போது, அப்படி எதுவும் நடக்காது ஜனாதிபதி வாக்குறுதியளித்தாக கூறிய சுமந்திரன் மீண்டும் அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அவர்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது மட்டுமல்லாது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/98029/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வனவள திணைக்களம் அபகரித்த 100 ஏக்கர் நிலத்தை மீட்க பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்ககேண்டும்

October 3, 2018

1 Min Read

IMG-59066047ee82b3c29a4a4374151aa59b-V.j

முல்லைத்தீவு- செம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை வனவள திணைக்களம் வன பகுதியாக அறிவித்துள்ளது. இதனால் விவசாயத்தை நம்பியிருக்கும் தாம் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் மக் கள்  பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்ககேண்டும் எனவும் கேட்டுள்ளனனர்.  செம்மலை கிழக்கு புளியமுனை கிராமத்தில் 1972ம், 1976ம் ஆண்டுகளில் சுமார் 340 குடும் பங்களுக்கு மேட்டு நில பயிர்ச்செய்கைக்காக தலா 2 ஏக்கர் வீதம் 680 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1983ம் ஆண்டு போர் காரணமாக மக்கள் அந்த பகுதிகளிலிருந் து  வெளியேற்றப்பட்டதன்  பின்னர் மீண்டும் 2015ம் ஆண்டு தமது விவசாய நிலங்களுக்கு சென்றிருந்த நிலையில் வனவள திணைக்களத்தினால் மக்கள் தடுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி வனவள திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது.

இதனையும் மீறி மக்கள் தங்கள் காணிகளுக்குள் சென்று விவசாயம் செய்த நிலையில் அப்போதும் வனவள திணைக்களத்தினால் மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குறித்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது செம்மலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் காசிநாதபிள்ளை பாஸ்கரன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

340 குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வீ தம் காணிகள் வழங்கப்பட்டது. இந்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் விவசாயம் செய்து வந்த நிலையில் 1983ம் ஆண்டு போர் காரணமாக நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.

மீண் டும் 2015ம் ஆண்டு எங்களுடைய விவசாய நிலங்களுக்கு சென்று நாங்கள் கச்சான் விதைக்க முயன்றபோது வனவள திணைக்களம் எம்மை விரட்டியடித்தது. பின்னர் வனவள திணைக்களத்தின் எதிர்ப்பையும் மீறி காணிகளை துப்புரவு செய்து கடந்தவருடம் கச்சான் விதைத்தோம்.

அதேபோல் இந்த வருடமும் கச்சான் விதைப்பதற்காக எங்களுடைய காணிகளை துப்புரவு செய்ய முயன்றபோது வனவள திணைக்களம் எங்களை தடுத்துவருகின்றது. காணிகளுக்குள் சென்றால்  கைது செய்வோம்  என அச்சுறுத்துகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.  தொடர்ந்து கிட்டினன் சிவபதி என்ற விவசாயி கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் விவசாயம் செய்த காணிகள் போர் காரணமாக நாங்கள் வெளியேறிய பின்னர் எங்களுடைய நிலங்களில் நின்ற ஒரு சில காட்டு மரங்களை வைத்துக் கொண்டு அவை வன பகுதி என வனவள திணைக்களம் கூறுகிறது.

இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. வருடத்தில் 3 மாதங்கள் செய்யப்படும் கச்சான்(நிலக்கடலை) செய்கையினை நம்பியே எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது. அதனையும் தடுத்து நிறுத்தினால் நாங்கள் என்ன செய்வது? இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் கச்சான் விதைக்கவேண்டும். அ ந்தபோகம்  முடிந்தால்  அதற்கு பின்னர் செய்ய முடியாது.  இந்நிலையிலேயே மாகாணசபை  உறுப்பினர் து.ரவிகரனை அழைத்து நிலமைகளை காண்பித்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கூறுகையில்,

மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் எமது மக்களின் வயல் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் மக்களுடைய விவசாய நிலங்களை வன பகுதியாக அடையாளப்படுத்தும் செயற்பாட்டை வனவள திணைக்களம் செய்து வருகின்றது.

இவ்வாறு சிறுக சிறுக மக்களுடைய விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதாலேயே ஒட்டுமொத்தமாக முல்லைத்தீவு மாவட்டம் வறுமை யில் 2ம் இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றது என்றார்.

IMG-8c6cd1f7bf40271b02405c2afba8e09f-V.j  IMG-e368a73cafdc511708f6935cea9910eb-V.j

 

http://globaltamilnews.net/2018/98146/

  • கருத்துக்கள உறவுகள்

3_AB75_FF1-_CA60-4_E49-8_E98-_BB683_BD02

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.