Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

_16902_1538513981_gfdgfhc.jpg

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக எம்.வை.சலீம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவளை மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வெற்றிடத்திற்காக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்விட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை எனவும் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையையும். சம நல்லிணக்கத்தையும் நல்லாட்சியையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.battinaatham.net/description.php?art=16902

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆளுநரின் திடீர்ச் செயலால் அதிர்ச்சியில் தமிழர்கள்; பாதிக்கப்பட்ட தமிழ் பெண் அதிகாரி!

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் திடிரென மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை தேர்தலை இலக்காகக் கொண்டு மேற்படி பதவிகள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்களை இவை ஏற்படுத்தியுள்ளன.

இந்த பதவி மாற்றங்களில் தகுதிவாய்ந்த சிரேஸ்ட நிலை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகாரிகள் மட்டத்தில் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படும் பதவிகள் மற்றும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதுடன் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பதவிகளில் நியமிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பிற்கு வருகைதந்த கிழக்கு மாகாண ஆளுநர் மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் உள்ளுராட்சி திணைக்களங்களிலும் உள்ள அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றக் கடிதங்களை வழங்கியுள்ளார். மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த நிகழ்வு இலங்கையின் நிர்வாக சேவைகள் குறித்த பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுயாதினத்தன்மைகள் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தகுதியான அதிகாரிகளை நிராகரித்த ஆளுநர்!

அன்றைய தினம் ஆளுநரால் வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் தகுதிவாய்ந்த தமிழ் அதிகாரிகளை நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டு புறக்கணிக்கின்றதா என்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நியமனத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் இலங்கையிலேயே முதலிடத்தில் உள்ளவரும் தற்போது திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளராக இருக்கும் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை புறந்தள்ளி மூன்றாவது நிலையில் இருக்கும் மன்சூர் அவர்களை புதிய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக ஆளுநர் நியமித்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளராக இருக்கும் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களை நியமனம் தருவதாக அழைத்து அவரை நீண்ட நேரம் நியமனங்கள் வழங்கப்பட்ட மண்டபத்திற் வெளியே காத்திருக்கவைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதனால் இலங்கையின் கல்வி நிர்வாக சேவையில் முதலாம் தரத்தில் இருக்கும் சிரேஸ்ட்ட தமிழ் பெண் அதிகாரி ஒருவரை தனது கனிஸ்ட நிலை அதிகாரிகளுக்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்தப்பதவியில் சுமார் எட்டு வருடங்களாக நிசாம் அவர்கள் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அவர்களுக்கே அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நிசாம் அவர்களின் காலம் கிழக்கு தமிழர்களின் கல்வி அபிவிருத்தியில் ஒரு இருண்டகாலமாகவே இருந்ததாகவும் அதேநிலை மீண்டும் தொடரவே வாய்ப்புள்ளதாக மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொதுச் சேவை ஆணைக் குழுவிற்குள் ஊழலா?

19 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அரச நியமனங்கள் மற்றும் இடம்மாற்றங்களை வழங்கும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஆணைக்குழு துஸ்பிரயோகம் செய்கின்றதா அல்லது ஆணைக்குழுவை அதிகாரத்தில் உள்ளவர்கள் வழிநடத்துகின்றார்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற இரண்டு நியமனங்களில் பொதுச் சேவை ஆணைக்குழு நடந்து கொண்ட விதம் அது யாரோ ஒரு தரப்புக்கு சார்பாக செயற்படுவது தெரியவந்துள்ளது.

கச்சேரியின் உள்ளக கணக்காய்வாளர் நியமனம் மற்றும் மாவட்ட போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற மீள் நியமனங்கள் தற்போது நடைபெற்றுள்ள நியமனங்கள் என அனைத்தும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் உண்மைத் தன்மையையும் சுயாதீன செயற்பாட்டையும் கேள்வி குறியாக்கி உள்ளது.

கிழக்கு மாகாண நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட திடீர் மாற்றங்கள்!

கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக எம்.வை.சலீம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன்.

மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வெற்றிடத்திற்காக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவ்விட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் தடவை எனவும் தெரியவருகின்றது.

இதே நேரம் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய நிசாம் அவர்கள் கிழக்கு மாகாண சிரேஸ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமையையும். சம நல்லிணக்கத்தையும் நல்லாட்சியையும் மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் சார்பாக உள்ள சிரேஸ்ட்ட அதிகாரிகள் மட்டும் ஏன் இந்த நியமனங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

இதே நேரம் இது குறித்து இன்று நடைபெறும் வடகிழக்கு அபிவிருத்தி செயலணியில் கேள்வியெழுப்ப உள்ளதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

https://www.ibctamil.com/srilanka/80/107031?ref=home-imp-parsely

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.