Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஏப்ரல் 06, 2007

நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் மத்திய அரசின் சார்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.ஆண்டனியிடம் இதுகுறித்து கேட்டால், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசின் அமைச்சர் போல பதிலளிக்கிறார்.

இந்த நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள், 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சண்முகவேல் என்ற மீனவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/06/fishermen.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவரைக் கொல்வதன் மூலம் இலங்கை தனது இந்தியாவுடனான கூட்டுரோந்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது. இந்தியாவை இந்த வகையில் பணியவைப்பதில் ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறது. ஏனென்றால் அந்தோணியும் கடற்படைத்தளபதியும் இலங்கைக்குச் சார்பாகவே பேசுகிறார்கள். எப்படியாவது இலங்கைத் தமிழர்களை இதில் சம்பந்தப்படுத்திவிடவே இருவரும் முயல் கின்றனர். இந்திய புலனாய்வுத்துறையின் விளையாட்டும் இதே அடிப்படையிலேயே அமைந்துள்ளது. யார்யார் தற்போது இலங்கையால் பணத்திற்கு வாங்கப்பட்டுள்ளர்களோ தெரியாது. இந்தக் காலத்தில் எதுவும் நடக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டுத் தமிழனின் உயிர்தான் இதற்கெல்லாம் பகடைக்காயாகப் பயன்படுகிறது.

அடுத்த கிழமை நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தில்

1.காயமடைந்தவருக்கு 300 000 ரூபாயை *** அரசு வழங்கும்

2.மானிய முறையில் உயிர் காப்பு கவசம் வழங்கப்படும்

3.எல்லைகலை அறிய மிதக்கும் விளக்கு மிதக்கவிடப்படும்

4.விசை படகுடன் கூடிய காவல் பிரிவு உருவாக்கப்படும்

5.ஹெலிக்கப்டர் வசதி உருவாக்கப்படும் துத்துகுடி விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்ப அனுமதிக்கப்படும்

*** **** *****

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய மத்திய அரசும் இணைந்தே இச்சம்பவம் நடப்பது போன்று தெரிகிறது.

நேரடியாக கடல் ரோந்தில் இறங்கினாள் புலிகளையும் தமிழ்நாட்டுடனும்

பகைத்துக்கொள்ளவேண்டிவரும் என்பதால் முதலில் மீனவர்களை பலிகொடுத்து

பின்னர் மீனவர்களுக்கான பாதுகாப்பு என்ற போர்வையில் இந்திய கடல்படை

களத்தில் இறங்கப்போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.