Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கும் தெற்கு

Featured Replies

ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கும் தெற்கு `

" வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்!' என் றொரு கிண்டல் பேச்சு வழக்கு வடக்கில் உள்ளது. ஏதோ ஒன்றைக் கேட்க, வேறு ஏதோ ஒன்றுக்குப் பதில் சொல்வதை இப்படி விமர்சிப்பார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனை என்னவென்று கேட்டால், வேறு ஏதோ பதில் தரு கின்றனர் அரசின் அமைச்சர்கள். சிறுபான்மையின ரான தமிழர்களுக்கு உரிய அதிகாரங்களை எவ்வளவு தூரத்துக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதே பிரச்சினை. அதைத் தெளிவுபடுத்துவதை விடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றுக் குப் பதில் தெரிவிக்க வேண்டிய நிறைவேற்று அதி காரமுடைய பிரதமரைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சி முறையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது யோசனையில் பிரதிபலிக்கும் என்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன.

இலங்கையைச் சிங்களவர்கள் எப்படி ஆட்சி செய்யப்போகின்றார்கள் நிறைவேற்று அதி கார ஜனாதிபதி முறை மூலமா அல்லது நிறைவேற்று அதிகாரப் பிரதமர் முறை மூலமா என்பதல்ல சர்ச்சை, தமிழர் தாயகத்துடன் எவ்வளவு தூரத்துக்கு அதிகாரத்தைப் பங்கிட அவர்கள் தயார் என்பதுதான் கேள்வி. அதற்குத் தெளிவான பதில் ஆட்சித்தரப் பில் இருந்து இன்னும் வரவேயில்லை. "ஒற்றையாட் சிக்குள் அதிக அதிகாரப் பரவலாக்கல்' என்ற உப்புச் சப்பற்ற ஈழத்தமிழர்களால் ஏற்கனவே நிராகரித்து ஒதுக்கப்பட்ட பழைய பல்லவியையே சு. க. செய லாளர் ஒப்புவித்திருக்கின்றார்.

ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டம் சுமார் ஆறு தசாப்தகால நீண்ட நெடிய கொந்தளிப்பான வரலாற்றைக் கொண்ட தாயினும் அது ஆயுத வழிக்குத் திரும்பியது எழுபது களின் கடைசியில்தான். அதன் பின்னர் 1985இல், ஈழத் தமிழர்களின் மிதவாதத் தலைமைகளும் தீவிரவாதத் தலைமை களும் ஒன்றிணைந்து ஏகோபித்து தங்களின் இறுதியான, உறுதியான கோரிக்கையை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தின. அதற்கான அரங்காகத் திம்புப் பேச்சுகள் அமைந்தன. அங்கு தமிழர் தரப்பு தமது தீர்க்கப்படவேண்டிய அபிலாஷைகளுக்கு அடிப்படையாக முன்வைத்த மூலக் கோட்பாடுகள் நான்கு. அவை வருமாறு:

*தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள் என்பதை அங்கீகரித்தல்.

* தமிழர்களுக்கு இனம் காணக்கூடிய தனித் துவமான தாயகம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள் ளுதல்.

*தமிழர் தேசத்துக்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

* சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடி யுரிமை மற்றும் அடிப்படையான உரிமைகள் உள் ளன என்பதை ஏற்றுக்கொள்ளல்.

இந்த நான்கில் மலையகத் தமிழர் தொடர் பான நான்காவது விடயத்தை மட்டும் சிங்களம் அப்போதே (1985இல்)ஏற்றுக் கொண்டது. குடியுரி மைப் பிரச்சினைக்கு இப்போது ஓரளவு தீர்வும் காணப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஏனைய மூன்று மூலக் கோட்பாடு களையும் கொழும்பு அரசு அப்போது நிராகரித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் முதல் இரு கோரிக்கைகளையும் எழுத்தில் ஒப்புக் கொண்டது இலங்கை. (தமிழர்கள் தனித்துவமான இனம் என்றும் வடக்கும், கிழக்கும் அவர்களின் பூர் வீகத் தாயகம் என்றும், அந்த ஒப்பந்தத்தின் ஆரம்ப ஷரத்துகள் தெளிவாகக் கூறுகின்றன.)

அதன் பின்னர், சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து, 2002 டிசெம்பரில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒஸ்லோ இணக்கத்தின் அடிப்படையில் ஈழத்தமி ழர்களின் மூன்றாவது பிரதான கோட்பாடான சுய நிர்ணயஉரிமைக் கோரிக்கையும் இலங்கை அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டது.""உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய'' தாங்கள் இணங்குவதை இலங்கை எழுத்தில் அங்கு ஒப்புக் கொண்டதன் மூலம் "சுயநிர்ணயம்' தொடர்பான தமிழர்களின் மூன்றாவது கோட்பாடும் சிங்களத்தால் ஏற்கப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இணைந்த ஒரு நிர்வாக அமைப்பாக இருந்த தமிழர் தாயகத்தை வடக்கு, கிழக்கு என்று பிரித்து, தமிழர்களின் மூலாதாரக் கோட்பாடுகள் மூன்றையும் அடியோடு நிராகரித்து, சமஷ்டி ஆட்சி முறைத் தீர்வையும் புறந்தள்ளி, ஒற்றையாட்சித் தத் துவத்தைக் கெட்டியாகக் கட்டிப்பிடித்து நிற்பதன் மூலம் அமைதித் தீர்வுக்கான வாய்ப்பை முற்றாகவே சீர்குலைத்து சன்னதமாடுகிறது மஹிந்த அரசு.

கடந்த இரண்டரை தசாப்தகாலக் கொடூரப் போருக்கு மத்தியில், இலங்கை அரசு, தான் ஏற்றுக் கொண்ட தமிழர்களின் மூலாதாரக் கோட்பாடுகள் மூன்றையும் இப்போது மீளவும் நிராகரித்ததன் மூலம், மீண்டும் பழைய இடத்துக்கே வந்து நிற்கின்றது. அமைதித் தீர்வு முயற்சியில் தென்னிலங்கைச் சிங்களம் ஆக்கபூர்வமான நிலையில் முன் நகரப் போவதேயில்லை. அது"சுற்றிச் சுற்றி சுப்பரின் கொல் லைக்குள்ளே' நிற்கின்றது. அதை விட்டுவிலகி, தென்னிலங்கை வரவே மாட்டாது. பரந்த சிந்தனையுட னும், விசால நோக்குடனும், உயர்ந்த விட்டுக்கொடுப் புடனும், தெளிந்த புரிந்துணர்வுடனும் செயற்படும் அரசியல் தீர்க்கதரிசனமும், இனப்பிரச்சினையை சமரசமாகத் தீர்க்கும் நடுநிலைப் போக்கும் கொண்ட தலைமை தென்னிலங்கையில் இல்லவே இல்லை. அங்கு அத்தகைய தலைமை இனிமேலும் உருவாகும் வாய்ப்பில்லை. பௌத்த சிங்கள மேலாண்மைச் செருக்கிலும், இராணுவ அதிகார மமதையிலும், அடக்கியாளும் திமிரிலும் மூழ்கிக் கிடக்கும் தென் னிலங்கை ஆட்சியாளர்களால் சிறுபான்மையினரின் அபிலாஷைகளைப் புரிந்துகொள்வதோ, அவர்களுக்கு நீதி செய்வதோ இயலாத காரியம். அதைத் தான் வரலாறு எமக்குக் காட்டி நிற்கிறது.

இதுதான் சிங்களத்தின் போக்கும் நிலையும் என்றால் அமைதித் தீர்வுக்கு வாய்ப்பே இருக்காது."மயிலே, மயிலே இறகு போடு!' என்று காத்திருப் பதில் அர்த்தமில்லை என்பது தமிழர்களுக்கு எப் போதோ நன்கு புரிந்துவிட்டது. ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்ற ஆளும் தரப்பின் தீர்வு யோசனைத்திட்டம் அதை மீள ஒரு தடவை தமிழர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. அவ்வளவே.

uthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை விவகாரத்தில் இனிமேல் யாரும் மண்டையைப் போட்டுக்குழப்பத் தேவையில்லை, எங்க தலைவர் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துப் பல காலமாகிவிட்டது மிகுதி செயல் வடிவம் கொடுப்பதில் தான் தங்கியுள்ளது.

நாலுகால்களில் நின்ற சிங்களம் இன்று ஒற்றைக் கால்களில் நிற்கத் தொடங்கி விட்டது. அந்தக் காலையும் ஆட்டங்காண வைத்தால் முகம் குப்புற விழ வேண்டியது தான்.அதுவும் சீக்கிரம் நடக்கும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.