Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் மீதான மனித உரிமை மீறலை கட்டுப்படுத்த ஐ.நா. கண்காணிப்பாளர்கள் உடன் வரவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[06 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

* சபையில் சம்பந்தன் வலியுறுத்தல்

-டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கட்டுப்படுத்த இலங்கையரசு தவறிவிட்டதால், உடனடியாக ஐ.நா.கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவேண்டுமென வலியுறுத்திய தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான கிழக்கு மாகாணம் முழு வீச்சில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாகவம் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த இரா. சம்பந்தன் மேலும் கூறியதாவது;

வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதன் காரணமாக சமாதான முயற்சி சிதைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாணங்களும் இணைந்திருப்பதனை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சமாதானம் மலரவேண்டுமாயின், பிரிக்கப்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படல் வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் பிரிக்கப்பட்ட அம் மாகாணங்களை பாராளுமன்றம் மூலமாக மீண்டும் இணைக்க முடியும்.

பிரிக்கப்பட்ட அவ்விரு மாகாணங்களையும் இணைக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு வந்தால் அதற்கு பல கட்சிகள் ஆதரவளிக்கும். இதன்போது ஆளும் தரப்பும் ஆதரவளிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மிகவேகமாக இன்று சிங்கள மயப்படுத்தல் நடைபெற்று வருகிறது. கிழக்கின் பிரதம செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஏனைய பல பதவிகளுக்கும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் 75 சதவீதமானவர்கள் தமிழர்களும், முஸ்லிம்களுமேயாவர். ஆனால், அங்கு நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமானோர் சிங்களவர்களாக உள்ளனர்.

கிழக்கில் மேற்கொள்ளப்படும் இச் சிங்கள மயப்படுத்தல் குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். இச்சிங்கள மயமாக்கலானது இன்னும் சில வருடங்களில் பல மோசமான, பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும்

இவ்வாறே திருகோணமலையின் மாவட்ட அரச அதிபராகவும், ஆளுநராகவும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் வேறு எந்தப் பகுதிகளிலும் இவ்வாறான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் 62 சதவீதமான தமிழ், முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கும் மிகத்தெளிவாக சிங்களமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழர்களின் அரசியலை பலவீனமாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கில் மையப்படுத்தப்பட்டிருந்த அதிகாரங்கள் தற்போது மத்திய அரசின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்குப் பகுதிகள் ஏனைய பகுதிகள் போன்று அபிவிருத்தி செய்யப்படாது திட்டமிட்ட ரீதியில் புறக்கணிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசு உதட்டளவில் மாத்திரமே சேவை செய்கிறது.

அரசின் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் தொடருமென்பதிலும் ஐயமில்லை. இதனால் சமாதானம் மலரும் வாய்ப்பு அருகிச் செல்கிறது.

வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் மல்டிபரல், விமானக் குண்டு வீச்சு மற்றும் மோட்டார் தாக்குதல் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களின் பயிர் நிலங்கள் நாசம் செய்யப்பட்டு, அவர்களின் கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன. இவ்வாறே பொதுமக்களும் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துமுள்ளனர்.

அகதி முகாம்களில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு திரும்பிச் செல்ல மறுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டு, காணாமல் போயுள்ளனர். திருகோணமலை, மூதூர் பகுதியிலும் இவ்வாறான சம்பவங்கள் தொடருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகவே நிவாரண நடவடிக்கைகளும், மீள்குடியேற்றமும் நடைபெற வேண்டும். பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. பல கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இன்று மிக அதிகளவில் மனித உரிமை மீறல் நடைபெற்றுவருகிறது. இச்சம்பவங்கள் சர்வதேசத்தின் அவதானிப்பை பெற்றுள்ளன.

பக்கச் சார்பற்ற முறையில் இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் வெளிக்கொணரப்பட வேண்டும். இந்நிலையில் மனித உரிமை மீறப்படாதிருப்பதை உறுதி செய்வது சர்வதேசத்தின் பெரும் கடமையாகும்.

இலங்கையில் மனித உரிமை மீறலை அவதானிப்பது பூஜ்ஜியமாகவே உள்ளது. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.

மனித உரிமை மீறல், ஆட்கடத்தப்படுதல் பற்றி ஆணைக்குழு நியமித்து, விடயங்களை வெளிக்கொண்டுவர முடியாது. காணாமல் போவதும், வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களும் குறையவில்லை.

இவற்றுக்கு அரசு சரியான பதிலை வழங்கவில்லை. எனவேதான், மனித உரிமை மீறலை கண்காணிக்க உடனடியாக இலங்கைக்கு ஐ.நா. கண்காணிப்பாளர்கள் அவசியம் என்கிறோம்.

யாழ்.குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த வேளையிலேயே மக்கள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.