Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் மோசமடையும் வேலையற்றோர் பிரச்சனை - கட்டுரை

வடக்கு, கிழக்­கு, ம­லை­யக பகு­தி­களில் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை  உரு­வாக்க வேலைத்­திட்­டங்கள் அவ­சியம்

2018 ஆம் ஆண்டின் இரண் டாவது காலாண்டின் புள்­ளி­ வி­ப ரங்களின் பிர­காரம் 381,834 பேர் வேலையற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதில் இளை ஞர்­களே அதி­க­மாக இருக்கின் றனர். அத்­துடன் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரத் துக்கும் குறை­வான தகு­தியை கொண்­ட வர்கள் 137,615 பேர் வேலை யற்­ற­வர்­க­ளாக உள் ளனர். கல்விப் பொதுத் தரா­தர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகை­மையை கொண்­ட­வர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை யின்றி இருப்­ப­தாக புள்­ளி­ வி­பர திணைக்­க­ளத்தின் தகவல் மூலங்கள் தெரி­வித்­துள்­ளன. அதிலும் 30 வய­துக்கு மேற் பட்டோர் சுமார் 90 ஆயிரம் பேர் வேலை­யற்று இருக்­கின்­றனர்.

veetham-47e5642b2280a7afa7492b67d5c2cef53f26eca3

நாட்டில் 10 இலட்சம் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை புதி­தாக உரு­வாக்­கு­வ­தாக நல்­லாட்சி அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்­தது. வேலை­யின்­மையை குறைப்­பதை நோக்­க­மா­கக்­கொண்டே இந்த வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் 2020 ஆம் ஆண்­டுடன் நிறை­வ­டை­ய­வுள்ள நிலையில் எந்­த­ளவு தூரம் இந்த இலக்கு அடை­யப்­பெற்­றுள்­ளது என்­பதை ஆரா­ய­வேண்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் அர­சாங்கம் பல்­வேறு புள்­ளி­வி­ப­ரங்­களை வெளியி­டு­கின்­றது. ஆனால் உண்­மையில் தற்­போ­தைய சூழலில் வேலை­யின்மை வீதம் எவ்­வாறு உள்­ளது? புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்க என்ன செய்­ய­வேண்டும்? சர்­வ­தேச முத­லீ­டு­களை கவ­ரு­வ­தற்கு என்ன தேவையை பூர்த்தி செய்­ய­வேண்டும் ? யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் வேலை­யின்­மையின் நிலைமை என்ன? அப்­ப­கு­தி­களில் புதிய தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த என்ன செய்­ய­வேண்டும் ? என்­பன தொடர்பில் பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

தற்­போ­தைய நிலை­மையில் வேலை­யின்மை வீத­மா­னது குறைந்த மட்­டத்தில் பதி­வா­கி­யி­ருந்­தாலும் அது இன்னும் சாத­க­மான நிலை­மைக்கு வர­வில்லை. 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்­டா­கும்­போது வேலை­யின்மை வீத­மா­னது 4.6 வீத­மாக பதி­வா­கி­யி­ருந்­தது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீத­மா­னது 4.2 வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. 2010 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் வேலை­யின்மை வீத­மா­னது சுமார் நான்கு வீதம் அல்­லது ஐந்து வீதத்­துக்கு குறை­வா­கவே நீடித்து வரு­கின்­றது. 2013 ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீத­மா­னது 4.4 ஆகவும் 2014 ஆம் ஆண்டில் 4.3 வீத­மா­கவும் 2015 ஆம் ஆண்டில் 4.7 வீத­மா­கவும் 2016 ஆம் ஆண்டில் 4.4 வீத­மா­கவும் பதி­வா­கி­யி­ருந்­த­தாக புள்­ளி­வி­ப­ர­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

அதே­போன்று எண்­ணிக்­கையில் பார்க்­கும்­போது 2018 ஆம் ஆண்டின் இரண்­டா­வது காலாண்டின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 381834 பேர் வேலை­யற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இதில் இளை­ஞர்­களே அதி­க­மாக இருக்­கின்­றனர். அத்­துடன் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரத்­துக்கும் குறை­வான தகு­தியை கொண்­ட­வர்கள் 137615 பேர் வேலை­யற்­ற­வர்­க­ளாக உள்­ளனர். கல்விப் பொதுத் தரா­தர உயர் தரம் மற்றும் அதற்கும் மேல் தகை­மையை கொண்­ட­வர்கள் சுமார் 170 ஆயிரம் பேர் வேலை­யின்றி இருப்­ப­தாக புள்­ளி­வி­பர திணைக்­க­ளத்தின் தகவல் மூலங்கள் தெரி­வித்­துள்­ளன. அதிலும் 30 வய­துக்கு மேற்­பட்டோர் சுமார் 90 ஆயிரம் பேர் வேலை­யற்று இருக்­கின்­றனர்.

இது முழு நாட்­டி­னதும் வேலை­யின்மை வீதம் தொடர்­பான தக­வல்­க­ளாக உள்­ளன. இந்­நி­லையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் ஊவா மற்றும் மலை­யக பிர­தே­சத்­திலும் அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­வ­ரு­கின்­றது. இவை தொடர்­பிலும் கவனம் செலுத்­த­வேண்டும்.

வேலை­யின்மை வீதம் அதி­க­ரிப்­ப­தற்கு பல்­வேறு கார­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. சனத்­தொகை அதி­க­ரிப்பு புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்கும் செயற்­பாடு செயற்­தி­ற­னற்­ற­தாக இருத்தல் முத­லீ­டுகள் அதி­க­ரிக்­காமை பொரு­ளா­தார கட்­ட­மைப்பில் காணப்­ப­டு­கின்ற அடிப்­படை பிரச்­சி­னைகள் சேமிப்பு குறை­வ­டைதல் சிறிய நடுத்­தர வர்த்­தக தொழில் முயற்­சி­யா­ளர்கள் ஊக்­கு­விக்­கப்­ப­டாமை உள்­ளிட்ட பல்­வேறு கார­ணிகள் இதில் தாக்கம் செலுத்­து­கின்­றன.

எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக எமது நாட்டின் ஏற்­று­மதி அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். ஏற்­று­ம­திகள் அதி­க­ரிக்­க­வேண்­டு­மாயின் ஏற்­று­மதி உற்­பத்தி அதி­க­ரிக்­க­வேண்டும். அத்­துடன் உள்­நாட்டு வெளிநாட்டு முத­லீ­டுகள் அதி­க­ரிக்­க­வேண்டும். இவற்­றுக்­கான சூழல் உரு­வா­கும்­போது புதிய தொழில்­வாய்ப்­புகள் அதி­க­ரிக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

 எனவே அர­சாங்கம் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து அதிக முத­லீ­டு­களை கவர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இதற்­காக முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு சாத­க­மான சூழலை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்த விட­யத்தில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் செய்­து­கொள்­ளப்­படும் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் முக்­கி­ய­மா­ன­வை­யாக அமை­யலாம். ஆனால் அவை எமது நாட்­டுக்கு சாத­க­மாக இருக்­க­வேண்டும். அவற்­றினால் அதி­க­ளவு பாதிப்பு எமது நாட்­டுக்கு ஏற்­ப­டாமல் இருக்­க­வேண்டும்.

இதே­வேளை யுத்தம் நடை­பெற்ற வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் வேலை­யின்மை அதி­க­மாக பதி­வா­கின்­றது. இது தொடர்பில் அர­சாங்கம் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கின்றது.

அதா­வது கடந்த 2017 ஆம் ஆண்டில் வேலை­யின்மை வீதம் 4.2 வீத­மாக பதி­வா­கி­யி­ருக்­கும்­போது அதன் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் நிலைமை மிகவும் மோச­மாக உள்­ளது. அதா­வது வட மாகா­ணத்தின் வேலை­யின்மை வீத­மா­னது 7.7 வீத­மாக உள்­ளது. இதுவே அதி­க­மான வீத­மாக பதி­வா­கி­யுள்­ளது. இரண்­டா­வ­தாக கிழக்கு மாகாணம் உள்­ளது. இந்த மாகா­ணத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 6 ஆக அமைந்­துள்­ளது. இந்த இரண்டு மாகா­ணங்­க­ளி­லேயே அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் பதி­வா­கி­யுள்­ளது.

ஏனைய மாகா­ணங்­களில் வேலை­யின்மை வீதம் குறை­வா­கவே உள்­ளது. மாவட்­டங்­களை எடுத்து நோக்­கும்­போது யாழ்ப்­பாண மாவட்­டமே மிக மோச­மான நிலையை எதிர்­கொண்­டுள்­ளது. இந்த மாவட்­டத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 10.7 வீத­மாக காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வது அதி­கூ­டிய வேலை­யின்மை நிலவும் மாவட்­ட­மாக 6.6 வீதத்­துடன் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் உள்­ளது.

அதே­போன்று அதற்­க­டுத்த மூன்­றா­வது இடத்தில் வேலை­யின்மை கூடிய மாவட்­ட­மாக 6.4 வீதத்­துடன் திரு­கோ­ண­மலை மாவட்டம் காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்தில் வேலை­யின்மை வீத­மா­னது 6.1 வீத­மாக காணப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் யாழ்ப்­பாணம் மட்­டக்­க­ளப்பு கிளி­நொச்சி மற்றும் திரு­மலை ஆகிய மாவட்­டங்­களில் அதி­க­ளவு வேலை­யின்மை வீதம் நில­வு­கின்­றது.

எனவே இந்த நிலைமை குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­த­வேண்டும். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் அதி­க­ள­வான முத­லீ­டு­களை செய்து அங்கு தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். இது தொடர்பில் அண்­மையில் இலங்­கையின் பொரு­ளா­தார நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்­டி­ருந்த உலக வங்கி போருக்குப் பிந்­திய காலப்­ப­கு­தியில் உறு­தி­யாகக் கால்­ப­தித்­துள்ள இலங்கை தற்­போது எதிர்­கா­லத்தை நோக்­கிய பார்­வையைச் செலுத்­து­வ­துடன் வறு­மையை முடி­விற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கான ஒவ்­வொரு வாய்ப்­புக்­க­ளையும் தழு­விக்­கொள்­ள­வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

அத்­தோடு புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­துடன் நெகழ்­வுத்­திறன் கொண்ட வலு­வான பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும் என்றும் உலக வங்கி தெரி­வித்­தி­ருந்­தது.

அந்­த­வ­கையில் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வ­தற்­கான அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளையும் தழு­விக்­கொள்ள அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். அத­னூ­டா­கவே வேலை­யின்மை பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடியும். அத்­துடன் நாட்டின் உற்­பத்தி பொரு­ளா­தா­ரத்தை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் தேவைப்­ப­டு­கின்­றன.

அதா­வது ஏற்­று­மதி செய்­யக்­கூ­டிய பொருட்­களை உற்­பத்தி செய்யும் நிலைமை அதி­க­ரிக்­க­வேண்டும். அதற்­கேற்­ற­வா­றான முத­லீ­டு­களை கவ­ர­வேண்டும். ஏற்­று­மதி வரு­மா­னத்தைப் பொறுத்­த­வரை எமது நாடு இன்னும் மந்த கதி­யி­லேயே செயற்­பட்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது. ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை பெருந்­தோட்ட உற்­பத்­திகள் ( தேயிலை ரப்பர் ) மற்றும் கைத்­தொழில் உற்­பத்­தி­க­ளி­லேயே நாங்கள் தங்­கி­யுள்ளோம். பெருந்­தோட்ட உற்­பத்­தி­களில் தேயிலை பிர­தா­ன­மா­கவும் கைத்­தொழில் உற்­பத்­தி­களில் ஆடை உற்­பத்­திகள் பிர­தா­ன­மா­கவும் உள்­ளன.

இந்­நி­லை­யில் கடந்த 10 வரு­டங்­களை நோக்கும் ஏற்­று­மதி வரு­மானம் படிப்­ப­டி­யாக அதி­க­ரித்து வந்­துள்­ள­போ­திலும் இன்னும் போது­மான வரு­மா­னத்தை நாடு பெற­வில்லை என்றே தெரி­கின்­றது. எனவே தற்­போ­தைய சூழலில் ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

மேலும் சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக முயற்­சி­யா­ளர்­களை பலப்­ப­டுத்தும் வகை­யி­லான திட்­டங்­களும் விரைந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். இத­னூ­டாக கணி­ச­மா­ன­ளவு தொழில்­வாய்ப்­புக்­களை அதி­க­ரிக்க முடியும். தற்­போ­தைய சூழலில் சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக முயற்­சி­யா­ளர்கள் பாரிய சிக்­கல்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர். அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கண்டு அவர்­களை பொரு­ளா­தார ரீதியில் பலப்­ப­டுத்த வேலைத்­திட்­டங்கள் அவ­சி­ய­மாகும். எனவே அர­சாங்கம் என்ற ரீதியில் பலப்படுத்த வேலைத்திட்டங்கள் அவசியமாகும். எனவே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

https://www.tamilnaatham.org/2018/10/unemloment-in-north-east.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.