Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராச்சியில்... வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dead-8-720x450.png

வடமராச்சியில்... வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம்- குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அவ்வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியிலுள்ள வீடொன்றினுள் அதிகாலை 12 மணியளவில் புகுந்த தாக்குதலாளி, வீட்டில் உறக்கத்தில் இருந்த பரம்சோதி ஜெயஸ்ரீ (வயது 66) மற்றும் அவரது மனைவி ப.நிர்மலாதேவி (வயது 53) ஆகியோர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதில் பரம்சோதி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பத்தை தொடர்ந்து  குறித்த தாக்குதலாளி, அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த  தனது மாமனார் மற்றும் மாமியார் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து சென்ற தாக்குதலாளி பின்னர் அப்பகுதிகளில் நடமாடி திரிந்த வேளை அயலவர்கள் மின் குமிழ்களை ஒளிரவிட்ட போது, மின்குமிழ்களை அணைக்குமாறு கூறியுள்ளார். அயலவர்கள் இராணுவம் அல்லது பொலிஸாராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மின்குமிழ்களை அணைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து  இறுதியாக தாக்குதல் நடத்திய வீட்டில் இருந்து சற்று தொலைவிலுள்ள வீடொன்றுக்குள் தாக்குதல் நடத்தும் நோக்குடன் தாக்குதலாளி உட்புகுந்த வேளை, வீட்டார் விழிப்பாக இருந்தமையால்  தாக்குதலாளியை அடையாளம் கண்டு விசாரிக்க முற்பட்ட வேளை தாக்குதலாளி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

அதன் பின்னர் அயலிலுள்ள வீடுகளில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றமை அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் தாக்குதலுக்கு இலக்கானவர்களை  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த தாக்குதலாளி அப்பகுதியை சேர்ந்த தர்சன்  எனவும், அவர் தாக்குதலுக்கு இலக்கான சித்திர வடிவேல் என்பவரின் மகளை திருமணம் முடித்து ஒரு பெண் குழந்தை உள்ளது எனவும், போதை பாவனைக்கு அடிமையானவர் என்பதனால் வீட்டில் குடும்ப தகராறுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தாக்குதலாளி தாக்குதல் மேற்கொள்ளும் போது போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில்  பருத்தித்துறை பொலிஸாருக்கு அதிகாலை 4.30 மணியளவில்  தகவல் வழங்கிய போதிலும் பொலிஸார் காலை 8 மணிக்கே  வருகை தந்தனரென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://athavannews.com/வடமராச்சியில்-வாள்வெட்ட/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.குடத்தனை வாள் வெட்டு – சந்தேக நபர் காவல்  நிலையத்தில் சரண்…

October 30, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Surrenders.png?resize=666%2C485

யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்  நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். குறித்த தாக்குதல் சம்பவத்தை அக்கிராமத்தை சேர்ந்த தர்சன் எனும் நபரே மேற்கொண்டார் என ஊரவர்கள் காவற்துறையினரிடம்  தெரிவித்து இருந்தனர்.

அந்நிலையில் குறித்த நபரை காவற்துறையினர் ர் கைது செய்வதற்காக தேடுதல் நடடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சமயம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை  சந்தேக நபர் பருத்தித்துறை காவல்  நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல்  நிலையத்தில் சரணடைந்த குறித்த நபரிடம் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
  • கருத்துக்கள உறவுகள்

வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்தவர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.unnamed.jpgஇந்நிலையில் காயமடைந்த  நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 54 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அன்றைய தாக்குதலில் மரணமடைந்தவர் ஜெயசிறி நிர்மலா தேவியின் கணவரான 66 வயதுடைய ப.ஜெயசிறி  ஆவர். இதேவேளை தாக்குதல் செய்தவர் பருத்தித்துறை பொலிசில் கடந்த புதன்கிழமை தந்தையால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த 43 வயதுடைய நபர் தொடர்ந்தும் யாழ் போதனா மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் அனுமதிக்கப்டட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/43729

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.