Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பின் 42(4) பிரிவில் மோதும் ரணில் - மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பின் 42(4) பிரிவில் மோதும் ரணில் - மைத்திரி

 

இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று ஆரயப்பட வேண்டியதொன்றாகியுள்ளது. உலகில் எந்தவொரு நாடு ஜனநாயக கோட்பாடுகளை மதித்து அதன் விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்கின்றதோ அந்த நாட்டை நல்லாட்சி என்ற வரையறைக்குள் உட்படுத்தலாம். இதனை ஜனநாயக ஆட்சி முறைமை உடைய நாடுகளுக்கு மாத்திரமல்லாது இலங்கையால் ஒதுக்கப்படுகின்ற சமஷ்டி ஆட்சி முறைமையை கொண்ட நாடுகளையும் கருத்தில் கொள்ள முடியும்.

mihti.jpg

2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரண்டு பிரதான கட்சிகளுமே ஒன்றிணைந்து நல்லாட்சி என்ற சித்தாந்தத்திற்குள் தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கு ஒப்பந்த ரீதியில் முன்வந்தது . இந்த தேசிய அரசாங்கத்தில் தலைமைத்துவத்தை வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சர்வதேச நாடுகள் கௌரவப்படுத்தியதோடு இந்த ஆட்சிமுறைமை அரசியல்சார் நெருக்கடிகளுக்கு முன்னுதாரணம் என்று அடையாளப்படுத்தின .

மூன்று தசாப்தக்கால உள் நாட்டு போரில் இழந்த உயிர்களை தவிர ஏனைய அனைத்திற்கும் தேசிய அரசாங்கத்தின் ஊடாக தீர்வை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை ரணில் - மைத்திரி கூட்டாட்சி  வெளியுலகிற்று ஏற்படுத்தியது. ஆனால் கால போக்கில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இலங்கையே ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் அளவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதமர் நியமனம் அமைந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபாலவின் புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டப்பூர்வமானது என்றாலும் கூட அரசியல் நாகரீகமற்றதாகவே காணப்படுகின்றது. இங்கே ஜனாதிபதியின் அரசியல் தார்மீக தன்மை குறித்த கேள்வியே எழுந்துள்ளது. புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமையும் ஏற்கனவே பதவியிலிருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கியதும் சட்டப்பூர்வமானது என்பதற்கு அரசியலமைப்பின் 42(4) பிரிவையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டுகின்றார்.

அரசியலமைப்பின் அதே சட்டப்பிரிவை சவாலுக்கு உட்படுத்தியே ரணில் விக்ரமசிங்க தானே இலங்கையின் சட்டப்பூர்வமான பிரதமர் என கூறுகின்றார். எவ்வாறாயினும் பதவியிலிருக்கும் பிரதரை சட்டப்பூர்வமாக நீக்குவதற்கான வழிமுறைகளை பின்பற்றவில்லை . மாறாக நிறைவேற்று அதிகாரம் தனது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமையே புதிய நியமனம் உறுதிப்படுத்துகின்றது. இதனூடாக சட்டவாக்குச் சபையின் ஜனநாயக சூழலை நிறைவேற்று அதிகாரம் கலங்கப்படுத்தியுள்ளது என மூத்த அரசியல் அவதானிகளின் குறிப்பிடுகின்றனர்.

மறுப்புறம் 2014 ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முதல் நாள் இரவு எவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ பக்கமிருந்து எதிரணிக்கு தாவினாரோ அதே போன்றதொரு தாவலைத்தான் மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முன்னெடுத்திருந்தார்.

அன்றைய சூழலில் தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்து வெளியேறுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏற்புடையதாகவும் ஏற்றுக்கொள்ள கூடியதுமாகவே அமைந்தது. ஆனால் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவும் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவதற்குமான காரணமாக மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள காரணங்கள் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உயிரச்சுறுத்தல் மற்றும் செயற்பட விடாமை ஆகிய இரண்டு விடயங்களையே மைத்திரிபால சிறிசேன தன்பக்க நியாயமாக கூறுகின்றார். அவ்வாறாயின் பாராளுமன்றத்தில் விஷேட அமர்வையோ அல்லது அமைச்சரவையிலோ இந்த விடயத்தை பேசியிருக்கலாம். மாற்று பிரதமருக்கு அறிவிப்பினை வெளியிட்டு பாராளுமன்றத்தில் தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி பதவியிலிருந்த பிரதமரை முன்னறிவித்தல் எதுமின்றி திடீரென நீக்கியதோடு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவையும் நியமித்துள்ளார்.

இதனை சட்ட ரீதியாக நியாயப்படுத்த அரசியலமைப்பின் 42(4) பிரிவையும் தன்பக்க நியாயமாக உயிரச்சுறுத்தல் மற்றும் செயற்பட விடாமை ஆகிய இரண்டு விடயங்களையும் ஜனாதிபதி முன்வைக்கின்றார். நல்லாட்சி கோட்பாட்டின் கீழ் இந்த இரண்டு விடயங்களையும் கவனத்தில் கொள்ளும் போது வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவராகவே ஜனாதிபதி அடையாளப்படுகின்றார். 

மறுப்புறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரையில் அவரது அரசியல் எதிர்காலம் பற்றி அதிகம் குழப்பங்கள் நிறைந்த சூழலே காணப்படுகின்றது. அவர் பகிரங்கமாக வெளியிட்ட சில கருத்துக்கள் அவரது குழப்ப நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. 

2015இல் அவரைக் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்ட பாரிய கூட்டணி இன்று தகர்ந்துப்போயுள்ளது. வெளிச்சக்திகளின் சதித்திட்டங்களுக்கு பலிக்கடா வானாரா - ஆக்கப்பட்டாரா என்ற கேள்வி தற்போது முற்றாக இல்லாமள் போய் மஹிந்த ராஜபக்ஷவின் முழுமையான பிடிக்குள் சிக்குண்டுள்ளார். இவ்வாறானதொரு நெருக்கடி மிக்க சூழலில் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை நாளை மறுநாள் திங்கட்கிழமை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதனை புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளார். அதே போன்று புதிய பிரதமருக்கே பாராளுமன்றத்தின் ஆசனத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் நியமனத்தினை சட்டத்திற்கு முன் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே தற்போதைய நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

a1a4282f-4934-431c-8fd5-e59f6bbad296.jpg

ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்த ரணில் விக்ரமசிங்கவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் மாத்திரமே ஜனாதிபதியின் புதிய பிரதமர் நியமனம் தொடர்பிலான சிக்கலுக்கு தீர்வை எட்ட முடியும். இதன் போது பெரும்பான்மையை நிரூபிக்கும் விடயத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிப்பெற்றால் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி எதிரணியில் அமர்ந்து விடும். 

ஆனால் ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மைய நிரூபித்தால் மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டு விடும். ஏனெனில் பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது மாறாக ஜனாதிபதிக்கே உள்ளது. இதன்போது மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பாரா ? என்ற கேள்வி வந்து விடும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தன்னை பிரதமாராக நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கோரினால் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் நிறைவேற்று அதிகாரம் செயற்படுமா ? என்பது கேள்வியாகவே உள்ளது.

புதிய பிரதமருக்க எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரனை இரண்டையும் கையாள்வதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. எனவே இலங்கை அரசியலில் தொடர்ந்தும் நெருக்கடியான சூழலே காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும். பன்னாடுகளும் இதனையே தற்போது வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பாராளுமன்றத்தை 16 ஆம் திகதிற்கு முன்னர் கூட்டுவதற்கான எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லை. இந்நிலையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீறப்பட்டுள்ளதா ? அரசியலமைப்பின் 42(4) பிரிவின் தீர்மானிக்கும் சக்தியாக சட்டவாக்குச் சபை காணப்படுகின்றதா ? அல்லது நிறைவேற்று அதிகாரம் அமைந்துள்ளதா ? என்ற கேள்விக்கும் பாராளுமன்றத்தில் அமர்வை நடத்துவதன் மூலமே பதில் கிடைக்கும் .

(லியோ நிரோஷ தர்ஷன்)

 

http://www.virakesari.lk/article/43837

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.