Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரன் ஏமாற்றப்பட்டாரா?; இன்று மட்டக்களப்பு செல்கிறார்!

November 6, 2018
45318227_2340499245979998_79482886915484

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அண்மையில் கட்சி தாவி, மஹிந்த அணயை ஆதரிப்பாக அறிவித்துள்ளார் சதாசிவம் வியாழேந்திரன் எம்.பி. மட்டக்களப்பில் அவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் மட்டக்களப்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

கட்சி தாவியதால் மட்டக்களப்பில் அவருக்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தனக்கு நெருக்கமானவர்களை இன்று மந்திராலோசனைக்காக அழைத்துள்ளார்.

இதேவேளை, கட்சி தாவ வைக்கப்பட்டு தம்மை ஏமாற்றி விட்டார்கள் என வியாழேந்திரன் தரப்பு உணர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வியாழேந்திரன் தரப்பிலிருந்த சிலர் இது குறித்து ஓரளவு வெளிப்படையாக தமது அதிருப்தியை பதிவுசெய்துள்ளதாக, அவர்களிற்கு நெருக்கமான தரப்புக்களிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

இப்படியான அரசியல் டீல்களில், பேசப்படும் பணத்தை முழுமையான கொடுப்பதில்லை என்பதையும், பகுதி பகுதியாக தரப்படுவதாக சொல்லப்பட்டாலும், முதலாவது தவணைக்கு பின்னர் பனம் வழங்கப்படுவதில்லையென்பதையும் எற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இப்படியான சம்பவமொன்றே வியாழேந்திரன் தரப்பிற்கும் நடந்திருக்கலாமென கருதப்படுகிறது.

இதேவேளை, சுதந்திரக்கட்சியில் இருந்த மஹிந்த எதிர்ப்பாளரான துமிந்த திசாநாயக்க அண்மையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

துமிந்த திசாநாயக்கவை அமைச்சராக பதவியேற்க வைத்தால்- சு.கவில் உள்ள அதிருப்தியணி தலைவரே அமைச்சராகி விட்டார், இனி யாரும் கட்சி தாவ மாட்டார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கலாமென மைத்திரி, மஹிந்த அணி திட்டமிட்டதாக தெரிகிறது. எனினும், பதவியேற்றுவரை துமிந்த அதற்கு சம்மதிக்கவில்லையென்று சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பெரும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டே அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என நேற்று முன்தினம் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியை உறுதிசெய்யும் விதமான தகவலொன்றை தமிழ்பக்கமும் பெற்றிருக்கிறது. துமிந்த திசநாயக்க பதவியேற்றதற்கு மறுநாள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதானியொருவரை சந்தித்து பேசியிருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு என்னவென்பதை அறிந்து கொள்ளவே துமிந்த அந்த சந்திப்பை விரும்பியதாக தமிழ்பக்கத்திற்கு தகவல் தந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் இறுதியில், “நான் இப்பொழுது அமைச்சராக்கப்பட்டுள்ளேன். எனது உண்மையான முடிவை சேம்பரில்தான் காட்டுவேன்“ என கூறியதாக தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

துமிந்த திசநாயக்க தற்போது நாட்டைவிட்டு வெளியேறி சென்று விட்டதாக செய்திகள் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/22328/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.