Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரும் சர்வதேசமும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலும் சர்வதேச அழுத்தங்களும்.
-வ.ஐ.ச.ஜெயபாலன்


கேள்வியும் பதிலும்.
.
Segudawood Nazeer தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விகரக் சிங்ஹ அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரும் சர்வதேச சமூகம் தமிழர்களின் இறுதி யுத்த கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் ,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆதரவு போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஏன் என்று தெரியவில்லை.
.
Jaya Palan Segudawood Nazeer நண்பா, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு பேரழிவுக்கு பின்னர் மூன்றாம் உலகின் எந்த சிறுபான்மையினமும் இத்தனை விரைவாக நிமிர்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக சொந்த சின்னத்தில் தேர்தல் வென்று குறிப்பிடத்தக்க நிலத்தையும் மீட்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியமைக்கு வழிவத்த அரசியல் வெளி சிங்கள அரசுகள் விட்டுதந்ததல்ல. அந்த அரசியல் வெளி இலங்கை தமிழர்கள் மீண்டும் நிமிர்ந்தமையாலும்  வர்களை ஆதரித்து சர்வே தேசமும் இந்தியாவும் புலம்பெயர்ந்த தமிழர்களும் சர்வதேச தமிழ் சமூகமும்  இலங்கை அரசுக்கு உருவாக்கிய அழுத்தங்களும்தான் காரணம்.   இன்னும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகமான   வடகிழக்கில் சீனாவை இறங்க விடாமல் தடுத்து வைத்திருபதில் பெரும்பங்கு சர்வதேச சமூகத்துக்குரியதல்லவா?.

2006ல் கொசோவோ பாணியில் படிப்படியாக வடகிழக்கு மாகாணங்கள் விடுதலைபெற பாலசிங்கமும் சர்வதேச சமூகமும் ஏற்பாடு செய்த வழிமுறைகளை பிரபாகரன் ஏற்றிருந்தால் இன்று விடிந்திருக்கும். கருணா அன்ரன் பாலசிங்கத்தின் திட்டத்தை ஆதரித்ததாக உறுதிப்படுத்தாத தகவல்கள் உள்ளது. . 
.
இறுதி யுத்தத்தில் மூன்றாவது நாடு ஒன்றிடம் சரணடையுமாறு அமரிக்கா உட்பட மேற்கு நாடுகள் கோரியது. அதன் அடிப்படையில் உள்வந்து சரணடைகிறவர்களை பொறுபெடுக்கவும் வாய்பிருந்தது.  ஆனால் சிலர் இந்தியாவில் காங்கிரஸ் தோற்கும் கொஞ்சம் பொறுங்கள் என கொடுத்த தவறான சமிக்ஞையே யுத்தத்தின் முடிவை மாற்றி எழுதியது. இந்தியாவுக்கும் பிரபாகரன் மரணத்துடன் யுத்தத்தை நிறுத்தி பிரபாகரனில்லாத புலிகளை அங்கீகரிக்கும் சூழல் இருந்ததாக சொல்லப்படுகிறது.                                                                                            
 .                                                                                                                      
 மகிந்த சீனாவின் பலத்தில் சர்வதேச அழுத்தங்களை நிராகரித்து சரணாகதிவரைக்கும் கொன்று குவித்தார். இன்று மகிந்தவுக்கும் இலங்கை இராணுவத்தினர் சிலருக்கும் இது தொடர்பான சர்வதேச கெடுபிடிகள் இல்லையென்று சொல்கிறீங்களா? இன்று சீனா வடகிழக்கிற்க்கு மாகாணங்களுள் கால்வைக்கமுடியாமல்  தமிழர் எதிர்ப்பால் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் வெளியே நிறுத்தப்படவில்லையென்று நினைக்கிறீர்களா?                                                                           
.                                                                                                             
பிரபாகரன் போராட வேண்டிய தருணத்தில் உறுதியாக போராடியமைதான் தமிழர் இந்துசமுத்திரத்திலும் சர்வதேச அரசியலிலும் கவனிக்கபடும் சக்தியாக நிமிர்ந்தமைக்கும்  தமிழர் சர்வதேச ரீதியான கவனத்தையும் இலங்கையின்  இரண்டாவது தரப்பாக அங்கீகாரத்தையும்  பெற்றமைக்குகம் அடிப்படைக் காரணம்.  தமிழரின் பின்னடைவுக்கும் வீழ்ச்சிக்கு போரை நிறுத்த வேண்டிய தருணங்களில் போரை நிறுதுவது பிரபாகரனுக்கு இயாலாதிருந்தமைதான்   காரணம். 1097ல் இருந்து - 2006 வரைக்கும் அன்ரன் பாலசிங்கமும் பாலகுமாரனும் போர்களை வெற்றிகரமாக நிறுத்திவைத்து அரசியல்  செய்யவல்ல சூழல்களை உருவாக்கினர். ஆனால் துரதிஸ்ட்ட வசமாக தலைமை போரை நிறுத்துவது ஆபத்து என கருதியது. .   

சுடுகாட்டு சாம்பரில் இருந்து பீனிக்ஸ் பறவையாக தமிழர் உயிர்த்தெழுவதற்க்குக் காரணம் தமிழரின் சொந்த பலமும் புலம்பெயர்ந்த தமிழரின் பலமும் உலகதமிழரின் ஆதரவும்   இந்தியாவும் மற்றும் சர்வதேசநாடுகளும்   இலங்கை அரசுக்குக் கொடுத்துவரும் அழுத்தங்களும்தான் நண்பரே.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.