Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்!

26.jpg

முத்துப்பாண்டி யோகானந்த்

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் உலகிற்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்களின் விற்பனையை டிஜிட்டலுக்கு மாற்றிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பலசரக்குக் கடைகளில் தொடங்கி ஹோட்டல்கள் வரை பெரும்பாலான இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைக் கையாளத் தொடங்கிவிட்டனர். மக்களாகிய நாமும் கிரெடிட் / டெபிட் கார்டு இருக்கும் தைரியத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதை விரும்புவதில்லை. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு கிரெடிட் / டெபிட் கார்டை எடுத்து ஸ்வைப்பிங் மெஷினில் உரசிவிட்டுக் கடந்து சென்றுவிடுவோம்.

வாட்ஸ்அப்பில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவைப் பார்த்தவர்கள் இனி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவே யோசிக்கத் தொடங்குவர். அந்த அளவிற்கு நூதனமான முறையில் நமது பணத்தை கொள்ளையடிக்கும் தொழில்நுட்பம் ஒன்று நம்மைச் சுற்றி உலா வந்து கொண்டிருக்கிறது.

நமக்குத் தெரியாமலேயே நம் அனுமதியின்றி நமது கிரெடிட் கார்டிலிருக்கும் பணத்தை ஒருவர் திருடினால் எப்படி இருக்கும்? அதைத்தான் அந்த வீடியோவில் மருந்துக்கடை ஊழியர் ஒருவர் நமக்குச் செய்து காட்டுகிறார். அதில் அவர் கடையில் உள்ள ஸ்வைப்பிங் மெஷினில் தொகைக்கான எண்ணைச் செலுத்திவிட்டு, வாடிக்கையாளர் ஒருவரின் கிரெடிட் கார்டை நோக்கி அந்த இயந்திரத்தை எடுத்துச் செல்கிறார். அப்போது எந்த ஒரு அறிவிப்பும் இன்றி உடனே பணம் எடுக்கப்பட்ட ரசீது ஒன்று அந்த ஸ்வைப்பிங் இயந்திரத்திலிருந்து வெளியே வருகிறது. OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லின் துணையின்றியே இவையனைத்தும் நடக்கிறது. இப்படி 2000 ரூபாய் வரையிலான பணத்தை எடுக்க முடியும் என்றும் அவர் அதில் கூறுகிறார்.

சென்னையில் முடிசூரைச் சேர்ந்த தனியார் மருந்துக்கடை ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. காண்போரை அதிர்ச்சியில் உறையவைக்கும் இந்த வீடியோ முதலில் உண்மைதானா, அல்லது வாட்ஸ் அப் வதந்திக்காகப் பரப்பப்பட்டதா என்று ஆராயத் தொடங்கினேன்.

26a.jpg

முதலில் SBI வங்கியின் மேலாளர் ஒருவருக்கு இந்த வீடியோவை ஃபார்வார்டு செய்து, இந்த வீடியோவில் காட்டப்படுவது உண்மைதானா, இதுபோல திருடுவது சாத்தியம்தானா என்று அவரிடம் கேட்டதற்கு, "நிச்சயம் சாத்தியம். அதில் கூறியதுபோல ஆன்லைனில் 2000 ரூபாய் வரை பர்ச்சேஸ் செய்யும் சிலருக்கு OTP கடவுச்சொல் வராது. அதனை எங்களிடம் வந்து ஆக்டிவேட் செய்த பிறகே அவர்களுக்கு மீண்டும் அந்த சேவை வழங்கப்படும். அந்த வீடியோவில் காட்டப்படும் மருந்துக்கடை போன்று நாம் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் இவ்வகை மோசடிகளைக் கையாள வாய்புகள் மிகவும் குறைவே. காரணம் இப்படி பணம் எடுக்கப்படும்போது இங்கிருந்து எந்த அக்கவுண்டுக்கு பணம் பரிமாறியிருக்கிறது என்ற விவரம் தெரிந்துவிடும். அதனால் பெரும்பாலும் அவர்கள் இந்த வேலையைச் செய்ய யோசிப்பார்கள்" என்று கூறித் தெம்பேற்றினார். "இருப்பினும் வேண்டும் என்றே மோசடி செய்யும் நோக்கில் போலியான அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்கூட நம்மைச் சுற்றி இருக்கலாம். எதற்கும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்ற பீதியையும் கொளுத்திப் போட்டார்.

இந்தப் பிரச்சினைக்குத் தொழில்நுட்ப ரீதியிலான காரணத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு இணையத்தில் தேடியபோது, வெளிநாடுகளில் NFC எனப்படும் இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைய திருட்டுகள் நடந்திருப்பது தெரியவந்தது.

26b.jpg

அது என்ன NFC?

நம் மொபைலில் உள்ள வைஃபை, ப்ளூடூத் போல RFID, NFC ஆகியவையும் வயர்லெஸ் தொழில்நுட்பம்தான். RFID (radio-frequency identification) தொழில்நுட்பத்தை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஷாப்பிங் மால் அல்லது சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை பில்லிங் செய்கையில் RFID கருவியில் ஸ்கேனிங் செய்வர். அது தானாக அந்த பொருளைப் பற்றிய தகவல்களை நமக்குத் தந்துவிடும். இதிலிருந்து வந்ததுதான் Near-field communicationஎனப்படும் இந்த NFC.

26c.jpg

NFC கொண்ட இரு கருவிகளைக் குறைந்தபட்சம் 4 சென்டி மீட்டர் தூரத்தில் அருகருகே எடுத்துச் செல்லும்போது ரேடியோ அலைகளின் மூலம் அங்கே தகவல்கள் பரிமாற்றம் நடந்திருக்கும். இது வைஃபை, ப்ளூடூத்தை விட வேகமானது என்பதால் தற்போது ஸ்மார்ட்போன்களில் இந்தத் தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஸ்வைப்பிங் மெஷின்களில் இந்தத் தொழில்நுட்பம் இருப்பது சற்று ஆபத்தானதுதான்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் டெலிகிராஃப் ஊடகத்தில் வெளியான ஒரு செய்தியில் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கி மோசடிகளில் செக் மோசடிகளைக் காட்டிலும் `வேவ் அண்ட் பே ' எனப்படும் இவ்வகை மோசடிகளே அதிகமாக நடந்திருப்பதாகச் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. சரி, இதற்கான தீர்வுகளைப் பார்ப்போம்.

தீர்வு-1:

வாட்ஸ் அப்பில் வெளியான அந்த வீடியோவில் உள்ள கார்ட் ஸ்வைப்பிங் மெஷினில் NFCயின் குறியீடு ஒன்று இருக்கிறது. அதன் அருகே `Tap to Pay' என்ற வாசகமும் உள்ளது. அவர்கள் செயல்முறையில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டிலும்கூட இந்த NFCயின் குறியீடு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆக இந்த NFCயின் குறியீடு கொண்ட கார்டுகளை மட்டுமே அந்த NFC இயந்திரத்தால் வாசிக்க இயலும் என்பதை இதன் மூலம் நம்மால் உணர முடிகிறது. எனவே நமது கிரெடிட் / டெபிட் கார்டில் NFCயின் குறியீடு இருந்தால் உடனடியாக நமது வங்கியை அணுகி அதனை சாதாரண கார்டாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தீர்வு-2:

26d.jpg

வெளிநாடுகளில் இதற்கெனப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாலட்களை மக்கள் பயன்படுத்திவருகின்றனர். அந்த வால்ட்கள் எந்த விதமான ரேடியோ கதிர்களையும் தனக்குள் அனுமதிக்காது என்பதே அதன் முக்கிய சிறப்பம்சமாகும். இவ்வகை அம்சம் ஒருசில பிராண்டட் வால்ட்களில் மட்டுமே இருப்பதால் அதன் விலையும் அதிகமாகவே இருக்கிறது.

தீர்வு-3:

குறைந்த விலையில் ரேடியோ கதிர்களை எதிர்க்கும் வால்ட்களை நாம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? என்ற வீடியோவை தியாஜோ என்பவர் அவரது யூட்யூப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். சிவப்பு நிறம் இயற்கையாகவே இத்தகைய கதிர்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. எனவே சிவப்பு நிறத்திலான காகிதத்தை நம் வால்ட்திற்குள் வைத்து பயன்படுத்துவதன் மூலம் இந்த மோசடிகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்று கூறுவதுடன் அதற்கான சோதனையையும் அவர் செய்து காண்பிக்கிறார்.

 

 

https://minnambalam.com/k/2018/11/21/26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.