Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒதியமலைப்படுகொலையை நினைவுகூறும் நினைவுத் தூபி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒதியமலைப்படுகொலையை நினைவுகூறும் நினைவுத் தூபி!

November 30, 2018

குளோபல் தமிழ் செய்தியாளர்….

Othiyamalai.jpg?resize=800%2C600

ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணி நிறைவுபெற்று வருகின்றது. எதிர்வரும் 2ஆம் திகதி இப் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் அடிப்படையில் இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா வடக்கில் உள்ள ஒதியமலைப்படுகொலை 02.12.1984ஆம் ஆண்டு இலங்கை அரச படைகளால் நடாத்தப்பட்டது. இதன்போது 32 அப்பாவிப் பொதுமக்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். கிராமத்தில் வைத்து அப்பாவி மக்கள் துடிதுடிக்க வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நிகழ்வு அந்த மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை உருவாக்கியிருந்தது.

இதேவேளை இப் படுகொலையின் தொடர்ச்சியாக இந்த மக்கள் ஒதியமலையில் இருந்து துரதப்பட்டுள்ளனர். ஒதியமலையை சுற்றியுள்ள கிராமங்கள் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றங்களால் சூழப்பட்ட பகுதியாகும். மீள்குடியேற்றத்தை தொடர்ந்து தமது கிராமத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி ஒன்றை அமைக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டு வந்தனர்.

இப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களை வருடா வருடம் ஒதியமலை மக்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர். எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி, இப் படுகொலையை நினைவுரும் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னெடுப்பதுடன் மக்களின் ஆத்ம சாந்திக்கான வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

புகைப்படம் – துரைராசா தமிழ்ச்செல்வன்

 

http://globaltamilnews.net/2018/105206/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒதியமலை படுகொலை – நினைவு தூபி திறந்து வைப்பு…

December 3, 2018

நினைவு தூபி திறந்து வைத்து இடம்பெற்ற ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

IMG_6486.jpg?resize=800%2C533

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களில் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நினைவு தூபி திறந்துவைக்கும் நிகழ்வும் நேற்றுஇடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் அதிகாலை வேளையில் கலந்துரையாடலுக்கென அழைத்து சென்று ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து ஈவிரக்கமின்றி சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களது 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியின் திறப்புவிழா நிகழ்வும் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழாவும் இடம்பெற்றது.

IMG_6511.jpg?resize=800%2C533

முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கந்தசாமி அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா முன்னாள் வடமாகானசபை உறுப்பினர்களான ப சத்தியலிங்கம் ஜி ரி லிங்கநாதன் து ரவிகரன் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலன் நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயசுதாகர் செந்தூரன் கரைதுரைப்ப்று பிரதேச சபை உறுப்பினர் சி லோகேஸ்வரன் முன்னாள் ஒதியமலை கிராம அலுவலர் வி அருளானந்தம் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

நிகழ்வில் முதலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களது 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா திறந்து வைத்தார்

தொடர்ந்து குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒதியமலை கிராமத்தை சேர்ந்த க சிவபாதம் கி இராசலிங்கம் பொ தேவராசா வீ தில்லைநடராசா த சதாசிவம் இ பரமலிங்கம் கா கணபதிப்பிள்ளை த வேலுப்பிள்ளை த சிவஞானம் த சுப்பிரமணியம் கோ கணபதிப்பிள்ளை க பொன்னம்பலம் த காசிப்பிள்ளை ச சண்முகசுந்தரம் க கனகையா அ ஜெகநாதன் நா சின்னையா சி இராசேந்திரம் வே சிதம்பரபிள்ளை வே சந்திரன் ச மோகநாதன் க சிவசிதம்பரம் ச சபாரத்தினம் ந நவரத்தினம் க சின்னையா நா கேதீஸ்வரன் சி இராசையா ச ரவீந்திரன் க தர்மலிங்கம் க செல்வராஜா அ கெங்காதரன் ச நடராசா ஆகிய 32 பேரினுடைய உற்றார் உறவினர்கள் வருகைதந்து அப்வர்களுக்கு மாலை சூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்

நினைவுரைகளை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்று பின்னர் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

IMG_6479.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/105518/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.