Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடிகுண்டு பயங்கரம் தப்பித்த மாணவர்கள்!

Featured Replies

வெடிகுண்டு பயங்கரம் தப்பித்த மாணவர்கள்!

அணுகுண்டு ஒன்று விமானத்தில் இருந்து போடப்பட்டது போன்ற பேரதிர்வு. காதுகளைப் பிளந்து கொண்டு சென்ற அந்தச் சத்தம் கேட்டு "குய்யோ முய்யோ' என்று மக்கள் அலறியடித்து ஓடினார்கள்.

பிய்ந்த சதைகள் மரத்தின் கிளைகளிலும், சாலைகளிலும் சிதறிக் கிடந்ததைப் பார்த்து ஸ்பாட்டிற்கு சென்ற அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கலங்கி நின்றனர்.

ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்ட அந்தப் பயங்கர வெடி விபத்தில் விழுந்தது ஏராளமான சடலங்கள்.....! பலரும் காயம் அடைந்து கடுமையான உயிர் போராட்டத்தில் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனத்திலிருந்து கடந்து சென்றால் கூட்டேரிப்பட்டு என்ற கிராமம். அதற்கு அருகில் உள்ள சென்டூர் கிராம மக்கள், காலையில் யார் முகத்தில் விழித்தார்களோ...? 7ஆம் தேதி காலை சுமார் 11.40 மணி இருக்கும்... அங்குள்ள பஸ் நிலையத்தில் ஒரு வெள்ளை நிற அம்பாஸிடர் கார் வந்து நின்றது.

அப்போது டிக்கியில் ஏதோ புகை கிளம்ப, வண்டியிலிருந்து மூவர் அதை அணைப்பதற்கு மல்லுக்கட்டிக் கொண்டு இருந்துள்ளார்கள். அதோடு அந்தப் புகையை அணைக்க உதவலாம் என்று கருதி, பஸ் நிலையத்தில் காத்திருந்த மக்களும் காரை நோக்கி ஓடியிருக்கிறார்கள். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில்... டமால், டுமீல் என்று கார் வெடித்துச் சிதறிய பயங்கரச் சத்தம் அப்பகுதியையே போர்க்களம் போல் மாற்றியது.

எங்கு பார்த்தாலும் புகை மண்டலம். புகையை அணைக்கப் போனவர்களில் 16 பேரின் உயிர், அந்த ஸ்பாட்டிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறி அணைந்தது. சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் படு காயமடைந்தார்கள்.

வெடிமருந்தில் தீக்கிரையாகிய ஜீப்பில் மிஞ்சிய எஞ்ஜின். சம்பவ இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் கிடந்தது.

அதில் பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை உயரலாம்.

பால்ரஸ், ஜெலட்டின் குச்சிகள் போன்றவை ஆங்காங்கே தமிழகத்தில் "சீஸ்' பண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வெடி விபத்து அத்தனை பேரையும் குலை நடுங்க வைத்தது. முதலில் ஸ்பாட்டில் இருந்தவர்கள் "பாம் ப்ளாஸ்ட்' என்று கூறிய தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. உடனே மைலம் ஒன்றியத்தில் உள்ள இந்தக் கிராமத்திற்கு வந்தார் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம்.

அவர் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென்று "இன்னொரு குண்டு வெடிக்கப் போகிறது' என்று வதந்தி பரவ, முன்னாள் அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் "டென்ஷனாகி' பின்வாங்கினர். பிறகு அப்படியேதும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு மீட்புப் பணிகள் தொடங்கியன. உயரதிகாரிகள் அனைவரும் ஸ்பாட்டிற்கு விரைந்தனர்.

அம்மாவட்ட எஸ்.பி. பெரியய்யா, டி.ஐ.ஜி. வன்னியப் பெருமாள் ஆகியோர் முகாமிட்டனர். சென்னையிலிருந்து டி.ஜி.பி. முகர்ஜி சம்பவ இடத்திற்கு வந்தார். அதே போல் கூடுதல் டி.ஜி.பி. இன்சார்ஜாக இருக்கும் சவானி, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. நாஞ்சில் குமரன் ஆகியோரும் ஸ்பாட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். "வெடித்தது கேஸ் சிலிண்டரா? வெடிகுண்டா?' என மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டிருந்தார்கள்.

கார் நின்ற இடத்தில் பெரும் பள்ளம் விழுந்திருக்கிறது. அருகில் நின்ற புளியமரம் சாய்ந்திருக்கிறது. வெடித்தபோது கார் 15 அடி உயரத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டதாக வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கூறியுள்ளார்கள்.

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணியிலும், காயமடைந்தோரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் பணியிலும் கடகடவென ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே "காரில் யாரும் இருந்தார்களா? அல்லது வெறும் காராக நிறுத்தப்பட்டிருந்ததா?' என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். இறந்தவர்களில் இருவர் காரிலிருந்தவர் என்றும், அதில் ஒருவர் டிரைவர் என்றும், இன்னொருவர் அந்த டிரைவருக்கு உதவிகரமாக இருந்தவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி காரில் வெடிபொருள்கள் இருந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது போலீஸ். விழுப்புரம் மாவட்ட எக்ஸ்ப்ளோஸிவ்ஸ் அúஸôசியேஷன் தலைவராக இருக்கும் மணலிப்பட்டு சேகர் என்பவருக்குச் சொந்தமான வெடி பொருள்கள்தான் இந்தக் காரில் இருந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அந்தச் சேகர் வெடிபொருள்கள் வைத்திருப்பதற்கு லைசென்ஸ் பெற்றவர். தென் ஆலப்பாக்கம் என்ற இடத்தில் வெடி மருந்து குடோவுனே வைத்திருப்பதாகவும் தகவல். தற்போது காரின் பாகங்கள் ஏதும் கிடைக்காத அளவிற்கு "சுக்குநூறாக' உடைந்து சிதறி விட்டதாம்.

ஸ்பாட்டிற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திடம் பேசினோம். ""அந்தக் கிராமமே ஷாக்கில் இருக்கிறது. நான் ஸ்பாட்டிற்குப் போன போது அங்கே காலும், கைகளும் தனித்தனியாகக் கிடக்கும் கொடூரக் காட்சியைப் பார்த்தேன்.

அருகில் தலை மட்டும் தனியாகக் கிடந்தது. காரின் பார்ட்ஸ் எதையுமே அருகில் பார்க்க முடியவில்லை. அந்த இடத்தில் பஇண 3333 என்ற நம்பர் ப்ளேட் மட்டும் கிடந்தது. அங்கிருந்து 70 மீட்டர் தொலைவில் காரின் எஞ்சின் தூக்கி வீசப்பட்டிருந்தது. வெடித்த இடத்தில் இருந்து 15 மீட்டருக்கு முன்னால் டாட்டா சுமோ போய்க் கொண்டிருந்துள்ளது.

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சென்றபோது, வெடிவிபத்தில் சேதமடைந்த கார்கள்.

அந்த ஹீட்டிலும், அதிர்ச்சியிலும் அந்தச் சுமோவில் போனவர்கள் அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள். அங்கு சுமார் 30 லிருந்து 40 மீட்டர் தொலைவில் அரசு நடுநிலைப்பள்ளி இருக்கிறது. நான் அமைச்சராக இருந்த போதுதான் ஆரம்பப் பள்ளியாக இருந்ததை நடுநிலைப்பள்ளியாக உயர்த்தினேன்.

அங்கு சுமார் 200 மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். இன்று மட்டும் ஸ்கூல் இருந்திருந்தால் அந்த மாணவர்கள் அனைவரும் உயிரிழந்து இருப்பார்கள். ஏனென்றால் அந்த ஸ்கூலில் உள்ள புதிய கட்டிடத்தின் இரும்புக் கதவே வெடிகுண்டு அதிர்ச்சியில் முறுக்கிக் கொண்டு நின்றதைப் பார்த்தேன்.

இது ஏதோ ஜெலட்டின் குச்சிகள் என்று தோன்றவில்லை. பெரிய அளவிலான வெடிமருந்துகள் என்றே தோன்றுகிறது'' என்றார் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்! இது ஒருபுறமிருக்க... டாக்டர் ராமதாஸýம் ஸ்பாட்டிற்குச் சென்று, "இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சிதுறை அமைச்சர் ஸ்டாலின், முன்னால் முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரும் வந்தார்கள்.

இதற்கிடையே இந்த வெடிபொருள்களை ஏற்றி வந்த கார், சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் ஆலப்பாக்கத்தில் இருந்து வந்து மெயின் ரோட்டில் ஏறியிருக்கிறது. அங்குதான் சேகரின் வெடிபொருள் குடோன் இருப்பதாகவும் தகவல்.

இவர் சென்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு வேலை செய்தார் என்று அ.தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் வேறு சிலரோ, ""சேகருக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை. யார் பவர்ஃபுல்லாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து கொள்வார்'' என்கிறார்கள்.

"அளவுக்கு அதிகமான வெடிபொருளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு ஏன் வந்தார்கள்?' என்ற கேள்விக்கு விடை தேடி விசாரணை செய்து கொண்டிருக்கிறது போலீஸ்.

f_13blast2m_eceb6a9.jpg

வெடிமருந்தில் தீக்கிரையாகிய ஜீப்பில் மிஞ்சிய எஞ்ஜின். சம்பவ இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் கிடந்தது.

நன்றி தினமனி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.