Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயாதீனமான நீதித்துறை ; ஜனநாயகத்துக்கான தஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீனமான நீதித்துறை ;    ஜனநாயகத்துக்கான தஞ்சம்

  அமீர் அலி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் அவரது கூட்டத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சதிமுயற்சியினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஜனநாயகம் அழிவின் விளிம்பில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் காப்பாற்றப்பட்டது.

a_li.jpg

அமைதியாக ஆனால் தீர்க்கமான முறையில் பொதுமக்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பும் நீதித்துறையின் குறிப்பாக பெருமதிப்புக்குரிய  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சுயாதீனமான செயற்பாடுகளும் சேர்ந்தே அவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாத்தன. நீதித்துறையின் மீதான ஜனாதிபதியின் வெறுப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தரங்குறைத்து அவர் வெளியிட்ட கருத்தின் மூலமாக வெளிவெளியாகத் தெரிந்தது.

அதாவது தனக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இடையிலான தகராறை அவர் கிராமத்து விகாரையொன்றின் பிக்குவுக்கும் சிரேஷ்ட பௌத்த பிக்குவுக்கும் இடையிலான தகராறு போன்று ஒப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.அவரது ஒப்பீடு உச்சபட்ச கண்டனத்துக்குரியதாகும்.சட்டத்தின் கடுஞ்சிக்கல்கள் குறித்து எந்தளவுக்கு அறியாமைகொண்டவராக ஜனாதிபதி இருக்கிறார் என்பதை அது காட்டுகிறது.

அரசியலமைப்புப் பேரவையை  மலினப்படுத்துவதன் மூலமாக ஜனாதிபதி சிறிசேன நீதித்துறை மீதான தனது அவமதிப்பை ஆபத்தான ஒரு மட்டத்துக்குக் கொண்டுசெல்கின்றார். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தன்னால் விதந்துரைக்கப்பட்டவர்களை அங்கீகரிக்குமாறு அரசியலமைப்புப் பேரவையை அவர் நிர்ப்பந்திக்கிறார்.இந்த விடயத்தில் அவர் தற்போதைய அதிகாரப்போட்டியில் தன்னுடன் சேர்ந்து தோல்வி கண்டவரான மகிந்த ராஜபக்சவுடன் கூட்டாகச் செயற்படுகின்றார் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

சதி முயற்சிகளின் குகையாக ஜனாதிபதியின் அலுவலகம் மாறிவிட்டதா?  தனது விருப்பத்துக்கேற்ற முறையில் மாத்திரமே  காரியங்கள் நடக்கவேண்டும் என்றும் தனது செயற்பாடுகளுக்குக் குறுக்கே யாரும் வரக்கூடாது என்று நினைக்கும் ஜனாதிபதி அதறக்கு இசைவாக தனக்கு சர்வாதிகார அதிகாரங்கள் வேண்டும் என்று ஆசைப்படுகின்றார் என்பதுமிகவும் தெளிவானது. அவர் ஜனநாயகத்துடனும் அதன் அரசியலமைப்பு ரீதியான பாதுகாவலருடனும்  மோதல்போக்கில் சென்றுகொண்டிருக்கிறார்.சுயாதீனமான நீதித்துறையே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு கடைசிமுடிவான கோட்டையாகும்.ஜனநாயகத்தின் கடைமுடிவான புகலிடமும் நீதித்துறையேயாகும்.

எனவே ஜே.ஆரின் ' பொல்லாங்கான பிள்ளையான ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப்பதவி அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்கப்படும்வரை நாட்டு மக்கள் மெத்தனமாக இருக்கமுடியாது.ஜனநாயகத்துக்கான போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்து  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) எடுத்திருக்கும் நிலைப்பாடு சிறிசேனவின் சூழ்ச்சித்தனமான வியூகங்களை எதிர்க்கின்ற சகலரினாலும் ஆதரிக்கப்படவேண்டியதாகும்.ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி பரிவாரங்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சகல சிறுபான்மையினங்களினதும் பிரதிநிதிகளும் அந்தப் பணியை நிறைவேற்ற ஜே.வி.பி.யின் பின்னால் அணிதிரளவேண்டும்

.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்தபின்னர் மாத்திரமே நாடு அடுத்த தேர்தல்களுக்குச் செல்லவேண்டும்.இல்லாவிட்டால், பைத்தியக்காரன் ஒருவன் ஜனாதிபதியாக வருவது குறித்து லங்கா சமசமாஜ கட்சியின் காலஞ்செனற  தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரா விடுத்திருந்த எச்சரிக்கை சாத்தியமாகக்கூடிய ஆபத்து தொடர்ந்து இருக்கவே செய்யும்.

ஜனாதிபதியின் முன்னைய செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழுந்தது. நீதித்துறையை மலினப்படுத்துவதற்கு அவர் முன்னெடுக்க எத்தனிக்கின்ற இரண்டாவது வியூகத்தினால் மீண்டும் பொருளாதாரம் கீழ்நோக்கிப்போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.அரசியல் உறுதிப்பாடின்மையை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஜனாதிபதி தொடர்ந்து ஈடுபடுவாரேயானால், பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போகும்.இலங்கை திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும்.

அதனால், அதன் வாய்ப்புகள் நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டில் வௌநாட்டு முதலீட்டாளர்களும் வர்த்தகத்துறையினரும் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதி சிறிசேன மற்றும் அவரது கூட்டுச்சதிகாரர்களின் கீழ் இப்போது எதிர்நோக்கப்படுவதைப் போன்ற இருப்பு அச்சுறுத்தலை ஜனநாயகம் முன்னர் ஒருபோதும் எதிர்நோக்கியதில்லை.

ஜனநாயகம்  இல்லாமல் போகுமேயானால் பொருளாதாரமும் அதனுடன் சேர்ந்து போய்விடும்.ஜனாதிபதியைப் பதவிநீக்குவதற்கு அரசியல் குற்றப் பிரேரணை கொண்டுவருவது குறித்து ஏற்கெனவே பேச்சுக்கள் கிளம்பியிருந்தன.இன்னொரு பொருளாதார நெருக்கடியை அவர் தோற்றுவிப்பாரேயானால், அரசியல் குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுவதற்கான சாத்தியங்கள் மேலும் பலமாக அதிகரிக்கும்.

இன்னொரு ஆபத்து குறித்து நாம் முக்கியமாக கவனத்தில் எடுக்கவேண்டியிருக்கிறது.அதாவது நாட்டில்  இன்னொரு இனவாத இரத்தக்களரி ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி / ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எதற்கும் துணிந்த அரசியல்வாதிகள் முயற்சிக்கக்கூடும்.ஏற்கெனவே விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை சம்பந்தனும் ஹக்கீமும் அவர்களது சகாக்களும் பணயமாக வைத்திருப்பதாக ராஜபக்ச ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் அபத்தமானது. 

அவ்வாறு பேசுவதன் மூலமாக மகிந்த ராஜபக்ச கும்பல் தற்போதைய நெருக்கடியை தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்துகின்றார்கள் என்றும் அவர்களின் இந்த தந்திரத்துக்கு விக்கிரமசிங்க அரசாங்கம் பலியாகிக்கிடக்கிறது என்றும் சிங்கள மக்களுக்குக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.சிறுபான்யமயினத்தவர்கள் ராஜபக்சவுக்கு எதிராக திரும்பிய காரணத்தினால்தான் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார் எனபதை எவரும் மறந்துவிடலாகாது. இப்போது கூட அந்தச் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக கடுமையான வன்மத்தை  அவர் கொண்டிருக்கிறார்.  வெற்றியைத் தங்களுக்குக் கொண்டுவரும் என்று  ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நம்புவார்களேயானால் இந்த இனவாதத் துருப்புச்சீட்டை அவர்கள் பயன்படுத்தத் தயங்கப்போவதில்லை.

அண்மைய அரசியல் நிகழ்வுப்போக்குகளினால் விரக்திக்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி சிறிசேனவும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தான் ஜனாதிபதியாக வருவதற்கு உதவக்கூடியது என்று கருதுவாரேயானால், இந்த இனவாதப்போக்கை பெரிதும் வரவேற்கக்கூடும்.இத்தகைய கெடுதியான வியூகங்களை அம்பலப்படுத்தவும் தற்போதைய போராட்டம் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் அனுகூலங்களைக் கொண்டுவருவதற்கானதல்ல.

மாறாக எதிர்காலத்தில் சர்வாதிகாரியாக மாறக்கூடியவர்களின் கைகளில் தேசம் வீழ்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கானதே என்று மக்கணை நம்பச்செய்யவும் உறுதியான பிரசாரங்களை ஜே.வி.பி.முடுக்கிவிடவேண்டும்.இது விடயத்தில் ஜே.வி.பி.யில் இருக்கக்கூடிய உறுதியானதும்  அர்ப்பணிப்புச் சிந்தையுடையதுமான தேசபக்த தலைமைத்துவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பைச் செய்யுமாக இருந்தால் கட்சியின் கடந்த காலம் குறித்து இன்னமும் சிலரால் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டில் ருந்து விடுபட்டுக்கொள்ளமுடியும்.

 

http://www.virakesari.lk/article/46901

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.