Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்]

கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு

வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர்.

வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சிறீலங்காப் படையினரின் இந்தத் திட்டத்தை முற்கூட்டியே அறிந்துகொண்ட விடுதலைப் புலிகள், கடற் பரப்பில் இருந்த மணல் திட்டுகளில் பதுங்கி இருந்துள்ளனர்.

தாக்குதல் நடத்தச் சென்ற சிறீலங்காப் படையினர் மீது, கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூன்று படையினர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து தாக்குதல் நடத்தச் சென்ற சிறீலங்காக் கடற் படையினர் தப்பிச் சென்றதாக குடாநாட்டில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவித்தலையும் வெளியிடவில்;லை.

சிறீலங்கா கடற் படையினரால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று மாலை பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்.

pathivu

மனித கேடயங்களை போரில் பயன்படுத்துவதுல் சிறீ லங்கா பேரினவாத அரசு விரைவில் ஏதாவது சாதனைகள் கூட செய்யலாம்.

எதிர்காலத்தில் தமது மிக். கிபீர் போர்விமானங்களிற்கு தாக்குதல் செய்யும்போது ஆபத்து என்றால் அதனுள் கூட தமிழ் மக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்து பறப்பில் ஈடுபடலாம்.

மனிதக் கேடயங்களே சிறீ லங்கா ஆக்கிரமிப்பு படைகளின் வெற்றியின் இரகசியம்!

மனிதக் கேடயங்களினுள் வாழும் மகிந்து அண்ணாச்சி வாழ்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.