Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களவை தேர்தல் 2019 : தமிழகத்தில் ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
தேர்தல்படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் விஞ்யான் பவனில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கட்டம் வாக்குப்பதிவு தேதி தொகுதிகள் மாநிலங்கள்
1 ஏப்ரல் 11 91 20
2 ஏப்ரல் 18 97 13
3 ஏப்ரல் 23 115 14
4 ஏப்ரல் 29 71 9
5 மே 6 51 7
6 மே 12 59 7
7 மே 19 59 8

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் : மார்ச் 19

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை : மார்ச் 27

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச் 29

மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடைபெறும்.

ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது என்று சுனில் அரோரா தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தை நினைத்து பெருமைப்படுவதாக பிரதமர் மோதி ட்வீட் செய்துள்ளார்.

வாக்காளர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களின் தகவல்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை

ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தராகண்ட், அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா ஹவேலி, டாமன் டய்யு ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான், திருபுரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

அசாம் மற்றும் சத்தீஸ்கரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேலும், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

ஐந்து கட்டங்களாக ஜம்மு காஷ்மிர் மாநிலத்திலும், ஏழு கட்டங்களாக பிகார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.

இலங்கை

பத்திரிகைகள், தொலைக்காட்சி, பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் வரவிருக்கும் மக்களவை தேர்தல் பற்றிய பேச்சே அதிகமாக தென்படுகிறது. அரசியல் தலைவர்கள் நடத்தும் பேரணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருத்துக்களும்-எதிர்கருத்துக்களும், குற்றச்சாட்டுகளும் அதற்கு பதில்களும் என தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. இருப்பினும், தேர்தல் எப்போது நடைபெறவிருக்கிறது? என்றே அனைவராலும் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு இன்று பதில் கிடைத்துள்ளது.

வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறது. இம்முறை தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பல ஊகங்களுக்கு இன்று தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல்

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, அந்த ஆண்டு மார்ச் ஐந்தாம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 16 ம் தேதி தொடங்கி, மே 13 வரை 5 கட்டங்களாக நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் மே 16 அன்று வெளியானபோது பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது, பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவானது. பா.ஜ.க மட்டும் 282 தொகுதிகளில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெறும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக, வேட்பு மனுவைத் திரும்பப் பெறும் தேதி மற்றும் வாக்குப்பதிவு தேதிக்கு இடையில் குறைந்தபட்சம் 14 நாட்கள் இருக்குமாறு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை முடிவு செய்யும்..

இது தவிர, தேர்தல் அறிவிப்பு மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இடையில் 7 நாட்கள் இடைவெளி இருக்கும்.

பொதுத்தேர்தல் அறிவிப்பும், அதற்கான நடைமுறையும்படத்தின் காப்புரிமை Reuters

நாடாளுமன்ற தொகுதிகள் மொத்தம் எத்தனை?

நமது அரசியலமைப்பு சாசனத்தின்படி, நம் நாட்டில் அதிகபட்ச நாடாளுமன்றத் தொகுதிகள் 552 இருக்க முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது நம் நாட்டின் மொத்த மக்களவை தொகுதிகள் 545. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடைபெறும்.

இதைத் தவிர, ஆங்கிலோ-இந்திய சமூக மக்களுக்கு மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால், அவர் இரண்டு பேரை நியமிக்கலாம்.

மொத்த மக்களவைத் தொகுதிகளில் 131 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவை, அவற்றை தனித் தொகுதிகள் என்று அழைக்கிறோம். அந்த 131 தொகுதிகளில் பட்டியல் சாதிகளுக்கு 84 தொகுதிகளும், 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடி மக்களுக்கு எனவும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது இந்த தனித் தொகுதிகளில் முறையே, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மட்டுமே போட்டியிட முடியும்.

பொதுத் தேர்தலில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அறுதி பெரும்பான்மை பெறுவதற்கு சில தொகுதிகள் குறைவாக இருந்தால், பிற கட்சிகளிடம் இருந்தோ, சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் கூட்டணி வைத்தும் ஆட்சி அமைக்கலாம்.

தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகோ அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஒரு அரசியல் கட்சி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை பெறும் அந்தஸ்து பெற, மொத்த மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 10%, அதாவது 55 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மை பெற்றது, ஆனால் தற்போது பாரதிய ஜனதா கட்சியிடம் 268 மக்களவை எம்.பிக்கள் மட்டுமே இருக்கின்றனர். அதற்கு காரணம், இடைத் தேர்தல்களில் பா.ஜ.க சில தொகுதிகளை இழந்தது.

பி.எஸ். எடியூரப்பா மற்றும் பி. ஸ்ரீராமுலு போன்ற சிலர், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர், இதனால் அந்த தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதால், பா.ஜ.க அரசு ஆபத்து இல்லாமல் இருக்கிறது.

பொதுத்தேர்தல் அறிவிப்பும், அதற்கான நடைமுறையும்படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய தேர்தல் நடைமுறை எதை அடிப்படையாகக் கொண்டது?

இந்திய ஜனநாயக அமைப்பு பிரிட்டிஷ் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே நாளில் நடைபெறும். வாக்குப்பதிவன்று மாலையே கருத்துக் கணிப்புக்கள் வெளியாகும். அதே நாள் இரவில் வாக்குகள் எண்ணப்பட்டு, அடுத்த நாள் காலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுவிடும்.

ஆனால் இந்தியாவில் அப்படி நடைபெறுவதில்லை. வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளின்படி, பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும்போது, இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்புதான், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படலாம். இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு சில நாட்களுக்கு பிறகு, வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை காலையிலிலேயே தொடங்கிவிடும்.

தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்ட சமயத்தில், தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளி வருவதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு முடிவுகள் மாலைக்குள் தெளிவாக தெரிய வந்துவிடுகிறது.

https://www.bbc.com/tamil/india-46997928

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.