Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

ஜெனி­வாவில் அமைந்­துள்ள  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட  ஐந்து நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. ஏற்­க­னவே இலங்கை  அர­சாங்கம்   தீர்­மானம் எடுத்­துள்­ளதன் பிர­காரம் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்கும் பட்­சத்தில் இலங்கை தொடர்­பான 40/1 என்ற இந்தப் புதிய பிரே­ரணை வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­படும்.  

ஒரு­வேளை ஏதா­வது  ஒரு உறுப்­பு­நாடு  எதிர்ப்பு தெரி­வித்தால்  பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை மனித உரிமை  பேர­வைக்கு ஏற்­படும். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டா­விடின்  ஐ.நா. மனி­த உ­ரிமை பேர­வையின் 47 உறுப்பு நாடு­க­ளி­னதும் ஏகோ­பித்த ஆத­ர­வுடன்  இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­படும். இந்­த­நி­லையில்  இந்தப் புதிய பிரே­ரணை எதனை வலி­யு­றுத்­து­கி­றது. அத­னூ­டாக மக்­க­ளுக்கு கிடைக்­கப்­போகும் நன்மை என்ன? பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை வைக்கும் அள­வுக்கு  இந்த பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­ற­னவா  என்­பது தொடர்பில் தற்­போது அனைத்துத் தரப்­பி­னரும் ஆர்­வ­மாக இருக்­கின்­றனர். உண்­மையில்  2015 ஆம் ஆண்டு  இலங்கை அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட  30/1 பிரே­ர­ணையே  இம்­முறை மீண்டும் இரண்டு வரு­ட­கால  நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது.  

இந்தப் பிரே­ரணை ஏற்­க­னவே 2017ஆம் ஆண்டு 34/1 என்ற   பெயரில்  2019 ஆம் ஆண்­டு­வ­ரை­யான காலப்­ப­கு­தி­வரை நீடிப்­புக்­குட்­பட்­டது. தற்­போது  மீண்டும்  இரண்­டு வ­ரு­ட­கால நீடிப்­புக்கு உட்­ப­டு­கின்­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்கம்   எவ்­வாறு 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தப்­போ­கின்­றது என்­பதை சர்­வ­தேசம் கண்­காணிப்பு செய்­வ­தற்­கான ஆணை  இந்தப் பிரே­ரணை நிறை­வே­று­வதன் மூலம் கிடைக்­கின்­றது. 

புதிய பிரே­ர­ணையில்  நான்கு செயற்­பாட்டுப் பந்­திகள்  உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.  அதா­வது   இலங்­கையும் ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை பேர­வையும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென்று இந்த செயற்­பாட்டு பந்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன. அதே­போன்று உண்­மையைக் கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், இழப்­பீடு வழங்­குதல் உள்­ளிட்ட செயற்­பா­டு­களில்  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையும் இலங்கை அர­சாங்­கமும் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென இந்த செயற்­பாட்டு பந்­திகள் மேலும் வலி­யு­றுத்­து­கின்­றன. 

அதே­போன்று  எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு பிரே­ரணை அமு­லாக்கம் தொடர்­பான இடைக்­கால அறிக்­கையை  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் வெளி­யிட வேண்­டு­மென்றும் 2021 ஆம் ஆண்டு அது தொடர்­பான முழு­மை­யான அறிக்­கையை வெளி­யி­ட­வேண்­டு­மென்றும்  இந்த 40/1 என்ற புதிய  பிரே­ர­ணையின் செயற்­பாட்டு பந்­திகள்  சுட்­டிக்­காட்­டு­கின்­றன. 

அது­மட்­டு­மன்றி  இலங்கை  இந்தப் பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது தொடர்பில்   ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் தொடர்ந்து கண்­கா­ணிக்­க­வேண்டும் என்றும்   இந்த புதிய பிரே­ரணை   நான்கு செயற்­பாட்டு  பந்­திகள் ஊடாக வலி­யு­றுத்­து­கின்­றது. அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட  30/1 என்ற பிரே­ரணை   முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே இந்த புதிய பிரே­ர­ணையை   கொண்­டு­வ­ர­வேண்­டிய தேவை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது தொடர்பில்  தமிழ் பேசும் மக்கள் மத்­தியில் முரண்­பா­டான கருத்­துக்கள் நில­வு­கின்­றன.  தமிழ் பேசும் மக்­களின் பிர­தி­நி­தி­களைப் பொறுத்­த­வ­ரையில் ஒரு­த­ரப்­பினர் இவ்­வாறு இரண்­டு­ வ­ரு­ட­காலம் நீடிக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் இல்லை என்றும் நேர­டி­யா­கவே இந்த விவ­கா­ரத்தை   ஐக்­கி­ய நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்­டு­செல்ல வேண்டும் என்றும் கூறி­வ­ரு­கின்­றனர். அதே­போன்று கால நீடிப்பு வழங்­கப்­ப­டு­வதன்  ஊடா­கவே சர்­வ­தேச மேற்­பார்­வையை  ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் என்றும்  எனவே  அது முக்­கி­ய­மா­னது என்றும் மற்­று­மொரு தரப்­பினர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். 

உண்­மையில்  இந்த   சர்­வ­தேச மேற்­பார்வை என்­பது  இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும்.  காரணம் பாதிக்­கப்­பட்ட மக்கள் இது­வரை நீதியைப் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.  யுத்தம் முடி­வ­டைந்து 10 வரு­டங்கள் கடந்தும் இன்னும் இந்த மக்கள்  நீதி கிடைக்­காமல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  எனவே  சர்­வ­தேச மேற்­பார்­வையை ஏற்­ப­டுத்தி மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிப்­பதே தற்­போ­தைய நிலை­மையில் மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இலங்கை விவ­கா­ரத்தை  ஐக்­கி­ய­நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்­டு­செல்ல வேண்­டு­மென ஒரு­த­ரப்­பினர் கூறு­கின்­றனர். ஆனால் இந்த விவ­காரம்  ஐக்­கி­ய­ நா­டுகள் பாது­காப்பு சபைக்கு கொண்டு செல்லும் பட்­சத்தில் அங்கு நிரந்­தர உறுப்­பு­ரி­மை­யையும் வீட்டோ அதி­கா­ரத்­தையும் கொண்­டுள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள்  இலங்கை தொடர்­பான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வி­டாமல்  தடுத்­து­விடும்.

எனவே  சர்­வ­தேச மேற்­பார்­வையின் ஊடாக  முடி­யு­மா­ன­வரை  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்­வதே தற்­போ­தைய சூழலில் பொருத்­த­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.  பாதிக்­கப்­பட்ட மக்கள் உண்­மையை அறிந்­து­கொள்­வ­தற்­கான உரி­மையைக் கொண்­டுள்­ளனர். அதனை யாரும் மறுக்க முடி­யாது. ஆனால் அதற்­கான சந்­தர்ப்­பங்கள் யதார்த்த ரீதியில் எவ்­வாறு  காணப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்டும்.  இந்த கால நீடிப்பு குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்    எம்.ஏ. சுமந்­திரன் ஜெனி­வாவில் தற்­போது பிரித்தானியா உள்­ளிட்ட நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள  பிரே­ர­ணையை திருத்­து­வ­தற்கு  முற்­பட்டால் அது இலங்­கைக்கு சாத­க­மாக போய்­விடும். அதனை பயன்­ப­டுத்தி இலங்­கையும் திருத்­தங்­களை செய்­து­விடும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அதே­போன்று 34/1 தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கா­விட்டால் இலங்கை தொடர்­பாக கேள்வி கேட்­ப­தற்­கான அதி­காரம்  மனி­த­ உரிமை பேர­வைக்கு கிடைத்­தி­ருக்­காது. அத் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­மை­யா­லேயே தற்­போது இலங்கை தொடர்­பாக கேள்வி கேட்­ப­தற்கும் அது குறித்து அறிக்­கைகள் சமர்ப்­பிப்­ப­தற்­கு­மான தேவை ஏற்­ப­டு­கின்­றது. ஏற்­க­னவே மூன்­றரை வரு­டங்­க­ளுக்குள் சில­வற்­றை­யா­வது செய்­வ­தற்கு   காரணம் இந்த மேற்­பார்­வை­யே­யாகும். இந்த மேற்­பார்வை நீடித்தால் தான் இன்­னமும் செய்­யாமல் இருக்க கூடிய பல விட­யங்­களில் சில விட­யங்­க­ளை­யா­வது செய்ய வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­படும் என்றும்   கூட்­ட­மைப்பின் பேச்­சாளர்  சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

இவ்­வாறு  பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­ப­டு­வதன் ஊடாக நிச்­ச­ய­மாக முன்­னேற்­றங்கள் நிக­ழத்தான் வேண்டும். காணா­மல் போ­னோரின் அலு­வ­லகம் சம்­பந்­த­மான செயற்­பா­டு­களில் முன்­னேற்றம் இருக்கும் என்று நம்­பு­கின்றோம்.  உண்­மையை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஆணைக்­குழு நிய­மிப்­ப­தற்­கான சட்­ட­வ­ரைபு ஒன்றை தயா­ரித்­தி­ருப்­ப­தாக சொல்­கி­றார்கள். அது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். பத்து வரு­டங்­க­ளாக நாம் சொல்­லி­வ­ரு­கின்ற ஒரு கூற்று உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் என்­ப­தாகும். . அந்த உண்­மையின் அ­டிப்­ப­டை­யி­லேயே நீதி செய்­யப்­ப­ட­வேண்டும் எனவும் சுமந்­திரன் எம்.பி. குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

அந்த வகையில் பாதிக்­கப்­பட்ட மக்கள்   தமக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில் சர்­வ­தேச மேற்­பார்வை என்­பது எந்­த­ள­வு­தூரம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதை  சுமந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.  இந்த விட­யத்தில் அர­சாங்­கமும்   தமது பிர­ஜை­க­ளுக்­கான நீதியை  நிலை­நாட்டும் செயற்­பாட்டில் அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­டு­வ­தற்கு  முன்­வ­ர­வேண்டும். சர்­வ­தேசம் இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­து­கின்­றது. அதேபோன்று  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட தனது பிரஜைகளுக்கான  நீதியை  பெற்றுக்கொடுக்கவேண்டியது  இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

தற்போது இரண்டாவது  தடவையாக 2015 ஆம் ஆண்டு பிரேரணை  நீடிக்கப்படுகின்றது. எனவே இந்த இரண்டு வருடகாலப்பகுதியிலாவது இந்த மக்களின் பிரச்சினைக்கு  தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்படவேண்டும்.  காணாமல் போனவர்களுக்கு  என்ன நடந்தது என்ற  உண்மை கண்டறியப்படவேண்டும்.  காணிகள் விடுவிக்கப்படவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். இழப்பீடுகள் வழங்கப்படுவது அவசியம். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில்   அரசாங்கம்  பாரிய பொறுப்புக்களை  கொண்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.  

 

http://www.virakesari.lk/article/52369

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.