Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

’சுமந்திரனின் முதலைக் கண்ணீர்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’சுமந்திரனின் முதலைக் கண்ணீர்’

Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, மு.ப. 07:00 Comments - 0

நிறைவடைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக் காப்பாற்றும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டுள்ளாரெனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி, சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டுமென்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்வோமெனவும் சுமந்திரன் கூறியமை, முதலைக் கண்ணீர் விடும் செயலுக்கு ஒப்பானதென்றும் குறிப்பிட்டுள்ளது.  

பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி, முடிந்தால், ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு - செலவுத் திட்ட இறுதி வாக்களிப்பின் போது, எதிராக வாக்களித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசுவாசமாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடந்து காட்டட்டுமெனக் கோரியுள்ளது.  

கிளிநொச்சி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அரசியல் பயிலரங்கை நேற்று (31) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, தமிழ் மக்கள் கூட்டணியின் அருந்தவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமது கட்சியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன் கலப்பு நீதிமன்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்தைத் திரிபுபடுத்தி, சுமந்திரன் எம்.பி, சில ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்திருப்பது வேடிக்கையான விடயமெனவும் இது முதலைக் கண்ணீர் வடிக்கும் செயற்பாட்டுக்கு ஒப்பானதெனவும் தெரிவித்தார். 

இலங்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை, சட்ட ரீதியாக அமைக்க முடியாதென்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே, நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீனக் குழுவை ஓர் உதாரணமாக விக்னேஸ்வரன், சனிக்கிழமை (30) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.  

“அறிக்கையில், எந்தவோர் இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை போன்றதொரு குழுவை அமைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடவில்லை” என்றார்.  

“இலங்கையில், உள்நாட்டில் அமைக்கப்பட்ட உள்ளக ஆணைக்குழுவான உதலாகம விசாரணை ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டதே பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவாகும். சர்வதேச தராதரங்கள் மற்றும் விதி முறைகளுக்கு அமைவாக இந்த உள்ளக ஆணைக்குழு செயற்படவில்லையென பகவதி தலைமையிலான குழு அதனைக் கலைத்தமை, இலங்கையில் ஏன் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் காட்டுகிறதென்பதை விக்னேஸ்வரன் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதில் சுமந்திரனுக்கு என்ன மயக்கம் இருக்கின்றது என்று விளங்கவில்லை” என்றார்.   இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென நீதியரசர் விக்னேஸ்வரன், திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துக்கு இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பில் வட மாகாண சபையில் ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றி இருக்கிறார்” என்றும் அருந்தவபாலன் மேலும் தெரிவித்துள்ளார்.   “பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் சதா உலாவரும் சுமந்திரன், இராணுவத்துக்கும் அரசாங்கத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஐ.நா சபையில் கால நீட்சியை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்து, முற்று முழுதாக இலங்கை அரசாங்கம் அடுத்த 2 வருட காலங்களில் தப்பிச்செல்லும் வகையில் செயற்பட்டுள்ளார்” என்றார்.  

பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவரும்போது அவற்றை உதாசீனம் செய்து இலங்கை அரசாங்கத்தால் கலப்பு நீதிமன்ற பொறிமுறை பிரேரணையில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கால நீட்சியை பெற்றுக்கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறு, மனித உரிமைகள் சபையில் இலங்கையைக் காப்பாற்றிவிட்டு வந்து, சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் குற்றவியல் நீதிமன்றத்துக்குச் செல்லநேரிடுமெனக் கூறுவது வேடிக்கையான விடயமாகும் என்றார்.  

சுமந்திரன், கதை விட்டுவருவதன் பின்னணியை எமது மக்கள் உணர்வார்கள். சர்வதேச விசாரணை எப்போதோ முடிந்துவிட்டது என்று மீண்டும், மீண்டும் விதண்டாவாதம் செய்துவந்த சுமந்திரன் இன்றைய பத்திரிகை ஒன்றில் ‘சர்வதேச விசாரணை’ பற்றி வலியுறுத்தியமை வேடிக்கையான விடயமாகுமெனத் தெரிவித்த அவர், தேர்தலை கருத்தில் கொண்டே சர்வதேச விசாரணைப் பொறிமுறையை சுமந்திரன் தூக்கிப்பிடித்துள்ளார் என்பது சாதாரண மக்களுக்கும் இன்று விளங்கும் என்றார்.   அரசாங்கத்துக்குத் தொடர்ந்து முண்டுகொடுத்து ஆதரவாகச் செயற்பட்டுவரும் சுமந்திரன், இவ்வாறு வேடிக்கையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது விடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அறிந்து இனிமேலாவது செயற்படவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.    

 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சுமந்திரனின்-முதலைக்-கண்ணீர்/150-231529

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் வாக்குக்கான பேச்சு போலதான் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.