Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டசபை இடைத் தேர்தல் Live: 18 தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழà®à®®à¯

தமிழக சட்டசபை இடைத் தேர்தல் Live: 18 தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு

மினி சட்டசபை தேர்தல் என வர்ணிக்கும் அளவுக்கு, இன்று ஒரே நாளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப் பதிவு லோக்சபா தேர்தலைப்போலவே காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் விவரம்: பூந்தமல்லி (தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர், ஒசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), நிலக்கோட்டை (தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை (தனி), ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), பரமக்குடி (தனி), சாத்தூர், விளாத்திகுளம் ஆகியவைதான் அந்த சட்டசபை தொகுதிகளாகும்.

இந்த தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பான உடனடி அப்டேட்களுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். மினி சட்டசபை தேர்தல் என இடைத் தேர்தல் கருதப்படுகிறது.

Apr 18, 2019 6:55 AM தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் காலை 7 மணிக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்

Apr 18, 2019 4:47 AM சட்டசபை இடைத் தேர்தலில் 10 தொகுதிகளையாவது ஆட்சியை தொடர அதிமுக வெல்வது கட்டாயம்.

தமிழக ஆட்சியை தீர்மானிக்கப்போகும் தேர்தல் என்பதால் கடும் எதிர்பார்ப்பு.

சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியாகும்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-assembly-by-election-2019-live-updates-347238.html

 

##################      #####################    ##########################

 

EVM machines not working in some of the constituencies in TN

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறு.. வாக்குப் பதிவு பாதிப்பு!

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்கை செலுத்தி வருகின்றனர்.

மதுரையை தவிர்த்து வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. எனினும் பெரும்பாலான தொகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது.

இதனால் வாக்குப் பதிவில் பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம், குமரியில் மூன்று இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி, சுசீந்திரம், லாயம் ஆகிய இடங்கிளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது போல் நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், பொள்ளாச்சி கோட்டூர் சாலை, நெல்லை கோடீஸ்வரன் சாலை, சென்னை அண்ணா நகர் மேற்கு ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் வாக்காளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/evm-machines-not-working-in-some-of-the-constituencies-in-tn-347254.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®¨à¯à®¤à®¿à®°à®®à¯ à®à¯à®³à®¾à®±à¯

மின்னணு இயந்திரங்கள் பழுது.. சரியில்லாத ஏற்பாடுகள்.. தமிழகம் முழுவதும் குவியும் புகார்கள்

தமிழகத்தில் முதல் முறையாக வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக செய்யப்பட்டுள்ளது. மக்கள் வாக்களிக்க ஆர்வமாக இருந்தாலும் போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், தமிழகத்தில் வாக்கு சதவிகிதம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதேபோல் நாடு முழுக்க 95 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. தேர்தல் தொடர்பாக சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்து இருக்கிறது.

பேருந்து கூட இல்லை: இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். ஆனால் போதிய பேருந்து இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். போதிய பஸ்கள் இல்லாததால் மக்கள் மேற்கூரைகளிலும், படிக்கட்டுகளிலும் வாக்களிக்க பயணம் செய்யு நிலை ஏற்பட்டது. எந்த தேர்தலிலும் மக்கள் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டது கிடையாது.

எந்திரம் கோளாறு:  அதேபோல் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதாலும் மக்கள் வாக்களிக்க முடியவில்லை. தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பூத் ஏஜென்ட்:  அதேபோல் இந்த தேர்தலில் சரியான பூத் ஏஜென்ட்கள் நியமனம் செய்யப்படவில்லை. யார் பூத் ஏஜென்ட், எங்கே நிற்கிறார் என்று எந்த வழி காட்டுதலும் வழங்கப்படவில்லை. இதனால் வாக்களிக்க செல்லும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் 

முதல்தடவை:  தமிழகத்தில் முதல்முறை ஒரு தேர்தல் இவ்வளவு மோசமாக நடந்து வருகிறது. வேண்டும் என்ற ஏற்பாடுகளை சரிவர செய்யாமல் புறக்கணித்து இருக்கிறார்களா என்றும் கூட கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் பணிகள் சரியாமல் நடக்காமல் இருப்பது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2019-preparations-for-the-polling-in-tamilnadu-is-the-best-at-the-worst-347265.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

à®à®¨à¯à®¤à®¿à®°à®¾ தà¯à®°à¯à®¤à®²à¯

சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்திலும் பிரச்சனை.. ஈவிஎம்களில் கோளாறு.. என்ன நடக்கிறது?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்தில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேலை செய்யாமல் பிரச்சனை செய்து வருகிறது.

இன்று லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கிறார்கள்.

ஆந்திரா தேர்தல்:  ஆந்திராவில் தேர்தல் நடந்த போது மொத்தம் 89,000 வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு வேலை செய்யாமல் பிரச்சனை செய்தது. பல முக்கிய இடங்களில் இந்த பிரச்சனை நடந்தது. ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறு தேர்தல் நடத்த இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.

à®à®¯à®¨à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯ à®à¯à®³à®¾à®±à¯

இயந்திரங்கள் கோளாறு அதேபோல் இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் வாக்களித்தால் , யாருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவிற்கு செல்கிறது என்றும் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இது தொடர்பாக அவர் திமுக தலைவர் ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார். பிற மாநில தேர்தலிலும் இப்படி நடக்க வாய்ப்புள்ள்ளது என்று அவர் கூறி இருந்தார்.

பà¯à®°à®¿à®¯ பிரà®à¯à®à®©à¯

பெரிய பிரச்சனை:  இதோ அவர் எச்சரித்தது போலவே தற்போது பெரிய அளவில் தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யாமல் போய் இருக்கிறது. முக்கியமான தொகுதிகள் பலவற்றில் இன்னும் வாக்குபதிவே தொடங்காத நிலை ஏற்பட்டு இருப்பதால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

à®à®à¯à®à®®à¯

அச்சம்:  இது மக்களிடையே கோபத்தை உண்டாக்கி உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் இப்படி வேலை செய்யாமல் போகிறது. இந்த பழுதுக்கு காரணம் என்ன. இதன் பின் சந்திரபாபு நாயுடு சொன்னது போல ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று பல கேள்விகளை மக்கள் எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2019-evms-are-not-working-in-tn-as-chandrababu-naidu-warned-before-347262.html

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.