Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்?''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்?'' - இலங்கையிலிருந்து கவிஞர் தீபச்செல்வன்

 
``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்?'' - இலங்கையிலிருந்து கவிஞர் தீபச்செல்வன்

டந்த ஞாயிறன்று உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடியிருக்க, இலங்கையில் பெரும் துயரம் நடந்தது. கொழும்பு நகரின் தேவாலயம் ஒன்றில் குண்டுகள் வெடித்து மக்கள் துடிதுடித்து இறந்தனர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இறந்தோர் எண்ணிக்கை 350-ஐக் கடந்துவிட்டது. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்களைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து இலங்கையில் வசிக்கும் கவிஞர் தீபச்செல்வனிடம் கேட்டோம்.  

இலங்கை

தீபச்செல்வன்"இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளன. இன்னமும் குண்டுவெடிப்பின் பீதியிலிருந்து மக்கள் மீளவில்லை. எந்தச் சூழல் ஏற்படக் கூடாது என்று ஈழத் தமிழ் மக்கள் போராடினார்களோ, அதுதான் எங்கும் சூழ்கின்றன. துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் ஆலயங்களிலிருந்து பள்ளிகள் வரை காவல் நிற்கின்றனர். பாடசாலைகள் யாவும் ஒரு வாரமாக மூடப்பட்ட நிலையில் உள்ளன. தமிழர்களின் பகுதியில் போர்க்காலத்தில் இருந்த சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு பெரும் அசௌகரியங்களின் மத்தியில் வாழும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

கம்பகாவில் நேற்றும் ஒரு குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன நடந்தது எனக் காவல்துறை ஆராய்ந்து வருகிறது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என எல்லாப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. மக்கள் கடுமையான அச்சமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இந்தக் குண்டு தாக்குதல்கள் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும், ஏன் இலங்கை அரசு தடுக்கவில்லை என்ற கேள்விதான் தமிழ் மக்களிடம் ஏற்படுகிறது. இந்தத் தாக்குதலில்களில் 70 சதவிகிதம் இலக்கு வைக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தாம். இதனால்தான் இலங்கை அரசு பொருட்படுத்தாமல் இருக்கிறதா? வடக்கு கிழக்கில் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள ராணுவத்தைக் குவித்து காவல் காக்கின்ற அரசால், கொழும்பின் பெரிய தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை நீக்கினால், பயங்கரவாதம் தோன்றிவிடும் என்று ஈழ மக்களை ராணுவச் சூழலில் தள்ளிய அரசு, பயங்கரவாதத்தின் கோரத்தை இப்போதுதான் பார்த்திருக்கிறது.

இலங்கை

இலங்கையின் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் விடுதலைப் புலிகள் பல தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அப்பாவி பொதுமக்களை அவர்கள் ஒருபோதும் இலக்கு வைத்ததில்லை. இறுதி யுத்த காலத்தில்கூட கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் புலிகள் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். பொதுமக்களைத் தாக்குகிற நிபந்தனையை ஒருபோதும் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கொழும்பு கட்டுநாயக்கா விமான தளத்தை புலிகள் தாக்கி அழித்தபோது பல ஆயிரம் பேர் வரும் விமான நிலையத்தில் பொதுமக்கள் ஒருவர்கூட சிறிய பாதிப்புக்குள் உள்ளாக்கப்படவில்லை.

 

ஆனால், ஈழ மக்களின் பகுதியில் குண்டுகளைக் கொட்டிவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறது. செஞ்சோலையில் பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டார்கள். கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தைப் பார்க்கும்போது நவாலி தேவாலயம்தான் நினைவுக்கு வருகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்திருந்தால், இப்படி ஒரு நிகழ்வு இடம்பெற்றிராது. அவர்கள் தமிழர்களுக்கு மாத்திரமல்ல, சிங்களவர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்திருப்பார்கள். எவ்வளவு பெரிய வீரத்தை உலக நாடுகளின் துரோகக் கூட்டால் அழித்தது சிங்கள அரசு?

பயங்கரவாதம், பயங்கரவாதம் என்று ஈழ தமிழ் இனத்தை ஒடுக்கி அழித்து வந்த இலங்கை அரசின் முன்னால், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் வந்து நிற்கிறது. இலங்கை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவடைந்துள்ளமையால்தான் சர்வதேச தீவிரவாதிகள் இதைப் பயன்படுத்தி இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் சொல்லியிருக்கிறார். சிங்களவர்கள், தமிழர்களின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும், முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதை இந்தச் சர்வதேச தீவிரவாத தாக்குதல் அனுபவம் ஏற்படுத்தியிருக்கிறது. சில குறிப்பிடத்தக்க குழுவால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் தமிழர்கள் எவரும் முஸ்லிம்மீது வெறுப்பைக் கொட்டக் கூடாது என்ற விடயத்தில் இளைஞர்கள் தெளிவாய் உள்ளனர்."

https://www.vikatan.com/news/world/156023-why-the-sri-lankan-govt-was-not-ready-to-face-this-issue-asks-poet-deepaselvan.html?fbclid=IwAR3m4cIRkxLfO2J66pXXdm7d5gsiKdYwDHtEim-fVbcqUbITll69XNE4WWM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.