Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் புதிய உத்தியாக வெடிகுண்டு அங்கிகளுடன் போராளிகள்: நா.தமிழன்பன்.

Featured Replies

யாழில் புதிய உத்தியாக வெடிகுண்டு அங்கிகளுடன் போராளிகள்: நா.தமிழன்பன்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் வெடிகுண்டு அங்கிகளுடன் ஊருவியுள்ளனர் இப்போராளிகள் சோதனையிடப்பட்டால் எதிரியையும் அழித்து தம்மையும் அழிக்கும் புதிய உத்தியை அவர்கள் அங்கு அறிமுகப்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்காப்பு வெடிகுண்டு அங்கியை வெடிக்க வைத்து படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வீரச்சாவைத்தழுவிய லெப். அறிவுமகன் மற்றும் கப்டன் பிரியதர்சன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் நா.தமிழன்பன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"எம்முடைய பெரும்பலமான கரும்புலிகள் வெடிகுண்டு அங்கியை அணிந்து கொண்டு எதிரியின் இலக்குக்குகாக காவல் இருப்பார்கள். அவர்கள் ஒருநாள், இரண்டு நாள், மூன்று நாள் அல்ல பல ஆண்டுக்களுக்கும் காவல் இருந்து அந்த இலக்கு சரி வந்தவுடன் அவர்கள் தங்கள் குண்டுகளை வெடிக்க வைத்து எதிரியை அழித்து வீரச்சாவடைந்த சம்பவங்களை நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

பல சம்பவங்களை நாம் கேள்விப்படவில்லை. அந்த வகையில் யாழ்ப்பாண குடாநாட்டிலும் அவ்வாறான சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கரும்புலித் தாக்குதல்களும் நடைபெற்றிருக்கின்றன. வெடிமருந்து அங்கியை வெடிக்க வைத்து கரும்புலிகளாக தங்களை ஆக்கிக்கொண்டு எதிரியை அழித்த சம்பவங்களும் ஏராளமாக உண்டு.

தற்போது, தற்காப்பு வெடிகுண்டு அங்கித் தாக்குதல் நடைபெறுகின்றது. தற்காப்பு வெடிகுண்டு அங்கியை அணிதல் என்பது கரும்புலிக்கு ஒப்பானது அல்ல. ஆனால் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக சயனைட் குப்பியை கடித்து எதிரிக்கு இழப்பில்லாமல் சாகிற சாவை விடவும் ஒரு பெறுமதியான சாவாக மாற்றி ஒரு பாரிய வரலாற்று நிகழ்வாக இந்த தற்காப்பு வெடிகுண்டு அங்கி அறிமுகமாகியிருக்கிறது.

இந்தப் போராளிகள் தற்காப்பு வெடிகுண்டு அங்கியினை வயிற்றிற்கும் நெஞ்சிற்கும் இடையில் கட்டி இருப்பர். இதில் ஒரு ஆழியை இயங்கு நிலைக்கு கொண்டுவர வேண்டும். அந்த கணத்தில் வெடிக்க வைக்கிற ஆழியை அந்த இடத்தில் வெடிக்க வைக்க வேண்டும். அவர் சாதாரணமாய் இருந்து கொண்டு சாவை அணைத்து எதிரியை அழிக்கமுடியாது. அதற்கு தன்னை பயிற்சிக்குள்ளாக்க வேண்டும்.

இன்று, கப்டன் பிரியதர்சனை எடுத்துக் கொண்டால் பிரியதர்சன் ஒரு சிறப்பான போராளி. யாழ்ப்பாண குடாநாட்டிற்குள் பணியாற்றிவர். யாழ்ப்பாண குடாநாடு என்பது நாற்பதாயிரம் இராணுவத்தினது செறிவான களமுனை. அங்கு எமது மக்கள் எப்படி வாழ்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்குள்ளே எதிரியின் அச்சுறுத்தலுக்குள்ளே மனக்குழப்பத்துடனும் அடுத்த கட்டம் என்ன செய்கின்றது, என்ன நடக்கப்போகின்றது என்கின்ற கேள்விக்குறியுடனும் தான் யாழ்ப்பாண மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கு போராளிகளுக்கு மட்டும்தான் சாவல்ல, சாதாரண மக்களுக்குமே சாவு தான். சாவு எப்போது வரும் என்று தெரியாது, எப்படி வரும் என்று தெரியாது. அந்த வகையான நெருக்கடிகளுக்குள் வாழ்கின்ற மக்களின் மனங்களில் முதலாவதாக இடம்பிடிக்க வேண்டும். மக்களின் மனங்களில் இடம்பிடித்தால் தான் போராளி அங்கு தங்கி நிற்கலாம். மறைந்து வாழலாம். மறைந்து வாழ்வதற்கு இடம்கொடுக்கிற அந்த மக்களை காக்க வேண்டும். அந்த மக்களை காக்க வேண்டும் என்று சொன்னால் அவர் எந்தக்கட்டத்திலும் எதிரியிடம் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது.

உயிருடன் எதிரியிடம் பிடிபட்டு விட்டால் தன்னுடன் சேர்ந்து சங்கிலித்தொடராக இருக்கின்ற ஆதரவாளர்கள், போராளிகள் எனப் பாரிய இழப்புக்கள் ஏற்படும். அப்படியான இழப்புக்கள் கடந்த காலத்தில் நடைபெற்றிருக்கின்றது. இந்த இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தற்காப்பு வெடிகுண்டு அங்கியை அணிந்து கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஒரு போராளி உன்னதமானவன். தான் ஒரு போராளி, களத்தில் களமாடும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது ஒரு எறிகணை வீச்சுக்கு இலக்காகியோ அல்லது வான் தாக்குதலிற்கு இலக்காகியோ அல்லது எதிர்பாராத சம்பவத்திற்கு இலக்காகியோ சாவடைவது என்பது கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கின்றது.

எமது சத்தியப்பிரமாணத்தில் நாம் உடல், உயிர், ஆன்மா அனைத்தையும் அர்ப்பணித்து போராடுவோம் என்று சொல்கின்றோம். அந்த அர்ப்பணிப்பின் உச்சமாக உயிரை துறக்கின்றோம். அந்த உயிரை துறக்கும் போது சண்டையில் சாவதற்கும் இரகசியக் காப்பில் இரகசியம் காக்கப்பட வேண்டும் என்று சாவதற்கும் வித்தியாசம் உண்டு.

தன்னை தற்கொடையாக்குவதற்கு தயாராக இருக்கின்ற அந்த போராளி அந்த சாவை மேலும் பெறுமதியாக்குவதற்காக மக்களில் பற்றுக்கொண்டு மக்களை காக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தை வளர்க்க வேண்டும். அவற்றை எல்லாம் காக்க வேண்டும் என்பதற்காக குப்பியை கடித்த போராளி இன்னுமொரு படி உயர்வாக வெடிமருந்து அங்கியோடு நிற்கவும் முடிகின்றது.

ஆனால் யாழ். குடாநாட்டிற்குள் வாழ்கின்றவர்கள் நெருக்கடிகளுக்குள் வாழ்பவர்கள். நெருக்கடி என்று சொன்னால் எந்த நேரம் எது நடக்கிறது என்று தெரியாது. அவர் அந்த உடல் அங்கியை களைந்து குளிப்பது என்றால் கூட அதற்கான அவகாசம் இல்லை. ஒரிடத்தில் இருந்து உணவு அருந்துவது என்றால் கூட அவகாசமில்லை.

யாழ்ப்பாண தரையமைப்பில் காடுகள் இல்லை. மறைந்து வாழ முடியாது. மரங்கள் இல்லை. மக்களிற்குள்ளே தான் மறைந்து வாழ வேண்டும். எதிரி எங்கு நிற்பான் எவ்வாறு தாக்குவான் என்று தெரியாது.

எந்தக் கணத்திலும் அவர் தன்னை பத்திரப்படுத்தி பாதுகாத்து தன்னை சரியான முறையில் நகர்த்தினால் தான் தன்னுடைய செயற்பாடுகளில் வெற்றியைப் பெறலாம். எதிரியை தாக்கியழிக்கலாம்.

எதிரியை தாக்கியழிக்க வேண்டும் என்று சொன்னால் தொடர்ச்சியாக அங்கே இயக்கம் நிற்கவேண்டும். இயக்கம் நிற்க வேண்டும் என்று சொன்னால் மக்களை காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் தன்னை இன்னுமொரு படி உயர்வாய் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்குள்ளே இந்த உன்னதமான போராளிகள் வரவேண்டும்.

எமது பிரியதர்சனைப் பொறுத்த வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்தில் தற்காப்பு அங்கியை வெடிக்கவைக்க முயற்சிக்கும் போதே எதிரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு அடைகின்றான். ஆனால் அறிவுமகனைப் பொறுத்தவரையில் அவன் ஒரு படி உயர்வு.

முதலாவது சாவு பிரியதர்சனின் சாவு இப்படி போகின்றது. தற்காப்பு அங்கியால் எதிரியை அழிக்க முடியாத கட்டம் வரும் போது அடுத்த கட்ட வளர்ச்சியாக அறிவுமகன் எதிரியை அழிக்கின்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறார். அந்த சாவுக்குள் ஒரு பெரிய பயனை பெற்றிருக்கின்றார். அவர் சாதாரணமாய் இருந்து கொண்டு சாவை அணைத்து எதிரியை அழித்திருக்கின்றார். அதற்கு தக்கபடியாக பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார

Edited by யாழ்வினோ

என்ன தியாகம் தன் உயிரை மாய்க்க சயனைட்டுடனும் வெடிபொருள் அங்கியுடனும் நித்தமும் கடமைசெய்யும் எம்முயிரிலும் மேலான வீரர்களை நினைத்து பெருமையடவதோடு எம்நிலைகண்டு வெட்கி தலைகுனிகின்றோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தியாகம் தன் உயிரை மாய்க்க சயனைட்டுடனும் வெடிபொருள் அங்கியுடனும் நித்தமும் கடமைசெய்யும் எம்முயிரிலும் மேலான வீரர்களை நினைத்து பெருமையடவதோடு எம்நிலைகண்டு வெட்கி தலைகுனிகின்றோம்

வெற்றிச் செய்தி சொல்லவிட்டால், யாழ் களத்தில் போராளிகளின் துன்பமும், தியாகமும் தெரியாமல் கதைக்கின்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? வெற்றிக் சொல்லை மட்டும் கேட்டு இன்புறுவதற்கு அது விளையாட்டல்ல. நம் வாழ்க்கை. வீரனாகக் களமிறங்காவிட்டாலும் பரவாயில்லை. அவ்வீரனின் வெற்றிக்காக ஆவது, துணை நிற்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.