Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக சுதந்திரமும் இலங்கை அரசும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக சுதந்திரமும் இலங்கை அரசும் `

இலங்கையில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், நேரடியான தாக்குதல்கள் என்பவற்றை விவரமாக விளக்கி, வியன்னாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச ஊடக நிலையத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

இலங்கையில் தொடர்ந்தும் ஆபத்துக்கும், நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிவரும் ஊடகச் சுதந்திரம் குறித்து இக்கடிதத்தில் விவரமாக விளக்கியிருக்கின்றார் ரணில்.

இலங்கையின் அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசுக் கட்டமைப்பினாலேயே எவ்வாறு திட்டமிட்டு நுட்பமாக கச்சிதமாக மீறப்பட்டு வருகின்றது என்பதையும், ஊடகங்களின் குரல்வளையை நசித்து அடக்குவதன் மூலம், தனது எதேச்சாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு அதிகார ஆதிக்கம் எவ்வாறு முனைப்பாக நிற்கின்றது என்பதையும் இக்கடிதத்தின் உள்ளடக்கம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஊடக சுதந்திரத்தில் அரச அதிகார ஆதிக்கம் அளவுக்கு மீறி தலையிட்டு அந்த அடிப்படை உரிமையை மோசமாக மீறுகின்றது என்பதை பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச ஊடக அமைப்புகளும் ஏற்கனவே புட்டுக் காட்டி நிற்கின்றன. ஆனாலும் அரசுத் தலைமை அது குறித்து கவனம் கொள்வதாக இல்லை. சிரத்தை காட்டுவதாக இல்லை. தனது அட்டகாசத்தைக் கைவிடுவதாக இல்லை.

என்றாலும், சர்வதேச ஊடக சுதந்திரம் தொடர்பான அமைப்புகள் இது விடயத்தில் மௌனம் காக்கத் தயாராக இல்லை. அரச அதிகாரத்தின் அரூபக் கரங்கள் ஊடக சுதந்திரத்தை விலைபேசிப் புரியும் கொடூரத்தை அம்பலப்படுத்துவதில் அவை உறுதியாக நிற்கின்றன. இந்த வரிசையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் வலிமையான அமைப்பான "சுதந்திர இல்லம்' (ஞூணூஞுஞுஞீணிட் டணிதண்ஞு) எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் அவல நிலையை அம்பலப்படுத்தும் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தத் தீர்மானித்திருக்கின்றது எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த "சுதந்திர இல்லம்' அமெரிக்காவில் மிக முக்கியமான அமைப்பு. அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் பேராபத்து ஏற்பட்ட காலத்தில் 1941இல் இலனோர் ரூஸ்வெல்ட், வென்டல் வில்க்கி போன்றோரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அமைப்பு உலகில் அடிப்படை உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்றவற்றை மதிப்பீடு செய்யும் மதிப்பார்ந்த ஆயமாகக் கருதப்படுகின்றது. இந்த விடயத்தில் இந்த அமைப்பின் கருத்துகளுக்கு அமெரிக்காவின் இரு பிரதான கட்சியினருமே ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக்கட்சியினரும் முக்கிய இடம் கொடுக்கின்றனர்.

இவ்வமைப்பு பல்வேறு நாடுகளில் நல்லாட்சி நிலைமை, அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் பேணப்படுதல் ஆகியன குறித்து வருடாந்தம் வெளியிடும் அறிக்கை, அந்தந்த நாடுகள் தொடர்பாக அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு முக்கிய வழிகாட்டியாக அமைகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த அமைப்பே அடுத்தவாரத்தில், இலங்கை குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட இருக்கின்றது. வழமையாக இந்த அறிக்கை முன்னைய வருட இறுதிவரையான நிகழ்வுகளை மதிப்பீடு செய்து தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். ஆனால் இலங்கையில் ஊடக சுதந்திரம் தற்போது மிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதால் அவை குறித்தும் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருப்பதால் கடந்த வாரம் வரை இங்கு இடம்பெற்ற விடயங்களை உள்ளடக்கி அது வெளியிடப்படும் என அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களில் அரசுத் தலைமையும் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த அரசுக்கு அமெரிக்காவின் "மிலேனியம் சவால் கூட்டுச் செயற்பாட்டுத் திட்டத்தின்' கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் திட்டங்களை நிறுத்த வேண்டும் என இந்த அமைப்பு ஏற்கனவே அமெரிக்கத் தலைமைக்கு சிபார்சு செய்திருப்பதும்

இதை அறிந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தமது அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் என்று தெரிவித்தும், ஆகவே உதவித் திட்டங்களை நிறுத்த வேண்டாம்என்று இறைஞ்சியும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷûக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கின்றார்.

ஆனால் இலங்கை ஜனாதிபதியின் இந்த உறுதி மொழியை நம்பவேண்டாம் என்று தெரிவித்து ஏனென்றால் இதேபோல அவராலும் அவரது அரசாலும் முன்னர் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் செயலுருப் பெறவில்லை என்பதை அம்பலப்படுத்திச் சுட்டிக்காட்டி எனவே அந்த வரிசையில் வெறும் எழுத்தில் வரும் இத்தகைய உறுதி மொழிகளை இனியும் நம்பி உரிய நடவடிக்கைகளை எடுப்பதை ஒத்திப்போடுவது அர்த்தமற்றது என்று "சுதந்திர இல்லம்' ஏற்கனவே அமெரிக்க அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டது என அறியவருகின்றது.

இந்தப் பின்னணியில்தான் மே முதலாம் திகதி இந்த அமைப்பு இலங்கை குறித்து வெளியிடக்கூடிய புதிய அறிக்கை, அம்பலமாகின்றது. அது இலங்கை விவகாரத்தில் தீர்க்கமான சில முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கு அமெரிக்க அரசுத் தலைமையை வழிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

uthayan

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.