Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது மூன்றாம் படிக்கட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மூன்றாம் படிக்கட்டு

எல்லோரும் காதல் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் நான் இறங்குகிறேன். என் கதையை என் வருங்கால மனைவிக்குச் சொல்வதுபோல் ஒரு மாறுதலுக்காக அமைத்துள்ளேன் அப்படியே பிரிண்ட் எடுத்து அவரிடம் கொடுத்தால் அவருக்கு நான் என் காதல் கதைகளைச் சொல்லத்தேவயில்லை.

இனி என் மூன்றாம் படிக்கட்டு

இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஏன் தெரியுமா இன்றுதான் எனக்கு திருமணம் நடந்தது. காலையில் இருந்து மாலை வரை ஹோமப்புகையினாலும் வீடியோக்காரர்களின் 1000 வாட்ஸ் பல்புகளினாலும் அதை விட திருமணம் செய்யும் டென்ஸனினாலும் களைத்துப்போய் கட்டிலில் கொஞ்சம் ரிலாக்சாக அமர்ந்திருந்தேன். அப்படியே என் வாழ்க்கையின் முன்பாதிகளை நினைத்துப்பார்க்கிறேன். என் கல்லூரி நண்பர்கள் நாம் அடித்த லூட்டிகள் பரீட்சை நேரத்தில் விளையாடின விளையாடுக்கள் பின்னர் பரீட்சையில் கோட்டை விட்டதுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. என் நண்பர்களில் யார் யார் இன்று வந்திருந்தனர் பாஸ்கரன் வந்திருந்தான் அவன் தற்போது ஒரு டாக்டராக தான் அந்த நாளில் விரும்பிய பெண்னையே திருமணம் செய்து இப்போ அவனுக்கு 2 குழந்தைகள் ம்ம் நான் கொஞ்சம் பிந்திவிட்டேனா இல்லை அவன் முந்திவிட்டானா? மற்றது முகுந்தன் வந்திருந்தான் அவன் இன்னும் தன் திருமணம் செய்யவில்லை(தப்பிவிட்டான்) ஏதோ பெண் பார்ப்பதாக சொன்னான் என் பழைய நண்பர்கள் பலர் புலம் பெயர்ந்து இருப்பதால் வரமுடியவில்லை ஆனால் அவர்கள் அனைவரும் ஈமெயிலிலும் போனிலும் வாழ்த்துச் சொன்னார்கள். கதைத்தவர்கள் அனைவரும் கேட்ட ஒரே கேள்வி திவ்யாவுக்கு தெரியுமா நீ திருமணம் செய்வது? என் வாய் அந்த நேரம் திவ்யா திவ்யா என முணுமுணுக்க என் வாழ்க்கைத் துணை அந்த நேரம் வந்து யார் அந்த திவ்யா உங்கள் முன்னாள் காதலியா? அவரைப் பற்றிச் சொல்லுங்கள் ப்ளிஸ் என்றாள் புதிய மனைவி மறுக்கவா முடியும் சொல்லத்தொடங்கினேன்.

யார் இந்த திவ்யா?

10 வருடங்களுக்கு முன் ......01.செப்டம்பர் 1996

என் கல்வி கணனியுடன் என்றமுடிவு செய்து நான் கொழும்பிலுள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன் என்னுடன் என்னுடைய பாடசாலை நண்பர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்தனர். எமது வகுப்பறையில் பல இனத்தவர்களும் இருந்தனர் எம்மை சில தமிழ் நண்பர்கள் இனம் கண்டு எம்முடன் சேர்ந்து ஒரே குழுவாக சேர்ந்தோம். அப்படியே நாம் யாராவது தமிழ்பெண்கள் இருக்கிறார்களா என தேடினோம் சிலரை யார் என கண்டுபிடிப்பது கஸ்டமாக இருந்தது காரணம் அவர்களின் நெற்றியில் பொட்டில்லை வாயில் ஆங்கிலம் ஆனால் உடையோ சுடிதார் இப்படி நாம் கஸ்டப்பட்டுகொண்டு இருக்கையில் எமது ரூம் கதவைத் திறந்துகொண்டு ஒரு தேவதை நீல நிற சுடிதாரில் நெற்றியில் சிறிய ஸ்ரிக்கர் பொட்டுடன் "மே ஐ கமிங் " என்று கொண்டு வந்தாள். இன்னும் ஆசிரியர் வரதாபடியால் நான் துணிச்சலாக "யேஸ்கமிங்" என்றேன் அப்ப்படியே சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவள் எனக்கருகில் இருந்த கதிரையில் இருந்தாள்( ஆண்கள் வேறு பெண்கள் வேறு என பாகுபாடு இல்லை யாரும் யாருக்குப் பக்கதிலும் இருக்கலாம்). எனக்குப் பின்னாலிருந்த என் நண்பன் "டேய் த பெட்டையடா( த என்றால் தமிழர் சி என்றால் சிங்களவர் என்பது எம் கோட் வேர்ட்) கதையடா" என்றான். நானோ முதல் முறை பெண்களுடன் கதைக்க கொஞ்சம் கூச்சம் அதனால் கொஞ்சம் அமைதியாக இருந்தேன். அவள் என்னைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரித்துவிட்டு எத்தனை மணிக்கு வகுப்பு ஆரம்பமாகும் என ஆங்கிலத்தில் கேட்டாள் நானோ நான் தமிழன் எனக் காட்டவேண்டும் என எண்ணி 9 மணிக்குத்தான் ஸ்ரார்ட் ஆகும் இன்னும் 10 நிமிசம் இருக்கு என தமிழில் சொன்னோன். உடனே அவள் "னீங்கள் தமிழா? நான் நினைச்சேன் நீங்கள் சிங்களவர் என்று" என மறுமொழித்தாள் அதன் பின் அப்படியே எங்கள் கடலை ஆரம்பமாகியது இருவரும் முதல் நாளே ரொம்ப குளோஸ் பிரண்டாக மாறிவிட்டோம்.

அப்புறம் என்ன நடந்தது இது என் மனைவி எப்போ உங்கள் காதலைச் சொன்னீர்கள் எப்படிச் சொன்னீர்கள்? இந்தப் பெண்களுக்கே விடுப்பு கேட்பது ஒரு விளையாட்டு.

எப்போ நான் காதலைச் சொன்னேன் ? மீண்டும் நுளம்புச் சுருள் (அதான்பா பிளாஸ் பேக்)

ஒரு தமிழ் சித்திரை வருடப் பிறப்பு வருடம் பிறக்கும் சுப நேரம் நான் என் குடும்பத்துடன் கோயிலுக்குப்போனேன் அவளும் வருவதாக காலையில் போன் பண்ணி விஸ் பண்ணும்போது சொன்னாள். அந்த சனக்கூட்டத்தின் மத்தியில் நான் அவளை மட்டும் தேடினேன் என்னை அங்கே கண்டு விஸ் பண்ணிய நண்பர்கள் உறவினர்களுக்கு ஏனோ தானோ என பதிலுக்கு விஸ் பண்னி சிரிச்சு வைத்தேன். திடீரெனப்பார்க்கிறேன் என் கையைப் பற்றி (முதல் முறை அவள் என்னுடைய கையைப் பிடித்தால்)ஒரு பச்சை உடைத் தேவதை விஸ் யு எ ஹப்பி நியூ இயர் என்றால் யாரென்று பார்த்தாள் என்னவள் ஹாய் நீ எப்ப வந்தாய் என நான் கேட்க அவள் பதிலுக்கு நீ யாரைத் தேடுகிறாய் நான் நீண்ட நேரமாக உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன் நீ யாரையோ தேடினாய் யார் அவனா? அவளா? எனக் கேட்டாள். எனக்கு கொஞ்சம் வெட்கமாகப்போய்விட்டது மெல்லச் சிரித்துக் கொண்டு ஒரு வரியில் உன்னைத் தான் தேடினேன் என்றேன். அவளும் மெல்ல புன்னகைத்தபடி எனக்கு தெரியும் என்றாள்.

சரி நீ எப்ப ப்ரி எனக்கேட்க மனதுக்குள் "உனக்காக நான் என்றுமே ப்ரி "என நினைத்துக்கொண்டு "இல்லை நான் பிரண்ட்ஸ் உடன் படம் பார்க்கபோகவேண்டும் என்ன விசயம் சொல்லு" என்றேன். அவளோ இல்லை நான் உனக்கு பின்னர் கால் பண்ணுகிறேன் என்றாள். நானும் படத்துக்கு போகாமல் அவளின் காலுக்காக காத்திருந்தேன், மத்தியானம் கால் பண்ணினாள் பண்ணி "உன்னிடம் கொஞ்சம் தனியாக பேச வேண்டும் என் பிரண்ட் கெளரி வீட்டுக்கு சரியாக 4 மணிக்கு வா "என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். 3.30க்கே நான் பிரண்ட் வீட்டுக்கு போய் விட்டேன் அவள் அங்கிருந்தாள் என்னைப் பார்த்து கெளரி "ஆளைப்பார் வகுப்பில் சின்னப்பொடியம் மாதிரி இருந்துவிட்டு செய்யிறவேலை" என்றால் எனக்கோ ஒன்றும் புரியவில்லை என்ன என்ன என நான் கேட்க அவளோ நான் வெளியில் செல்கிறேன் திவ்யா நீ சொல்லு என்று விட்டு போய்விட்டாள்.

எனக்கோ கால் எல்லாம் நடுங்குகிறது திவ்யாவோ சாதரணமாக "நான் உன்னை விரும்புகிறேன்" என்றாள் எனக்கோ அதிர்ச்சி என்ன இவள் சாதரணமாக சொல்கிறாள் என நினைத்து "சும்மா விளையாடாதை " என்றேன் அவ்ளோ இல்லை சீரியசாக நான் உன்னை விரும்புகிறேன் இதில் விளையாட்டு ஒன்றும் இல்லை என்றாள் அத்துடன் நீ என்னை விரும்புகிறாய் என்று தெரியும் ஆனால் நீ இந்த ஜென்மத்தில் சொல்லமாட்டாய் என்றும் தெரியும் நீயும் நடிகர் முரளி மாதிரி காதலைச் சொல்லத் தெரியாதவன் என்றாள்.

இதுதான் என் கடைசிக்காதல் என்று அன்று எனக்கு தெரியாது என்றேன் என் மனைவியிடம்.

ஆம் அழகான கவிதையாக என் வாழ்க்கையில் வந்த அவள் பின்னர் சில குழப்பங்களால் என்னை விட்டு பிரிந்து தற்போது ஒரு புலம் பெயர் நாட்டில் இருக்கிறாள். அவள் என்னில் வைத்திருக்கும் காதல் மட்டும் தெய்வீகமானது. என் திருமணத்தின் பின்னர் தான் அவள் திருமணம் செய்ய இருப்பதாகவும் என் மனைவியிடம் கூறினேன். ஆனால் அவள் ஏன் பிரிந்தாள் என்று மட்டும் கூறவில்லை.

யாவும் கற்பனை என்றுபோட ஆசைதான் ஆனால்......

கதை நல்லாத்தானிருக்கு....

அவள் என்னில் வைத்திருக்கும் காதல் மட்டும் தெய்வீகமானது

காதலிக்கிறது ஒண்டு ,கை பிடிக்கிறது இன்ணெண்டு இதுதான் தெய்வீகமோ :angry:

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லாத்தானிருக்கு....

காதலிக்கிறது ஒண்டு ,கை பிடிக்கிறது இன்ணெண்டு இதுதான் தெய்வீகமோ :angry:

எனக்கு இன்னமும் கல்யாணம் நடக்கவில்லை. அந்தப்பெண்ணுக்கு கலியாணம் முடிந்துவிட்டது. என்ன காரணமோ தெரியாது காதல் முறிவடைய. காத்லித்தவர்கள் அனைவரும் தம் காதலிகளை கைப்பிடிப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.