Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2020இல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2020இல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10000 வீடுகள்

2ea26f631cb3badf13f2318c0b9e0e51_XL

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட பகுதிகளில் 10000 வீடுகள் தோட்டத் தொழிலாளர்களுக்காக அமைத்துக் கொள்ளப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் லயக்குடியிருப்பை மாற்றி அவர்களுக்கு தனியான வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு நாம் எடுத்த முயற்களுக்கு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள். இதற்காக மலையக மக்களின் சார்பில் நாம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் முன்னைய மலையக பிரதிநிதிகளாக இருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மலையக மக்களின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பதுளை, கேகாலை, மாத்தளை, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, எட்டியாந்தோட்டை, தெனியாய போன்ற பிரதேசங்களிலும் இத்தனி வீட்டுத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

லயன்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான வீட்டு வசதி சுத்தமான குடிநீர் வசதி மற்றும் போக்குவரத்திற்கான பாதை வசதி போன்ற வசதிகள் இல்லை. இதற்கான ஒரு தீர்வாகவே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து கையளித்துள்ளோம். இது வரையிலும் 8000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3000 வீடுகள் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலையக குடிநீர் பிரச்சினை தொடர்பில் உலக வங்கியின் உதவியுடன் மக்களுக்கான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார். மலையக மக்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் ‘டிகிரி சக்தி’ என்ற ஊட்டசத்து திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(அ)

-தகவல் திணைக்களம்-

http://www.dailyceylon.com/185813/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.