Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுத உதவி விவகாரத்திலும் கருணாநிதி நழுவல் போக்கு -(கலைஞன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத உதவி விவகாரத்திலும் கருணாநிதி நழுவல் போக்கு -(கலைஞன்)

[29 - April - 2007]

* ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்...

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு மீண்டும் ஆயுத தளபாட உதவிகளை வழங்கியிருப்பது தமிழக மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கும் ஆயுதங்களினால் அப்பாவி ஈழத் தமிழர்களே கொன்று குவிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டும் தமிழகக் கட்சிகள் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவதை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஆனாலும் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பையும் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் கொன்றொழிக்கப்படுவதையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு, இலங்கை அரசு இராணுவ உதவி கோரும் போதெல்லாம் எவ்வித தயக்கமுமின்றி வாரி வழங்கி வருகின்றது.

ஒவ்வொரு தடவையும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் வழங்குவதும் அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதும் வழமையான நிகழ்வுகளாகவே மாறிவிட்டன. ஆனால், இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கவேண்டுமென்பதில் இந்தியா உறுதியாகவேயுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்கும் நடவடிக்கையை தடுக்கும் வல்லமை தமிழகத்தை ஆட்சிபுரியும் கட்சிக்கே உண்டு. அந்த வகையில் தற்போது தமிழக முதலமைச்சராகவிருக்கும் கருணாநிதியினால் மட்டுமே இந்த ஆயுத உதவி வழங்கலை தடுத்து நிறுத்த முடியும்.

ஆனால், சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியோ ஈழத் தமிழர் விடயத்தில் `கழுவுற மீனில் நழுவுற மீனாகவே' செயற்படுகின்றார். இதனையே மத்திய அரசும் கருணாநிதியிடம் எதிர்பார்க்கின்றது.

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாகக் கூறி அதன் விபரங்களையும் பாகிஸ்தான் இணையத்தளம் ஒன்று வெளியிட, அதனை இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்கள் பிரசுரித்த பின்னரே தமிழக அரசியல் கட்சிகள் தெரிந்து கொண்டுள்ளமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இந்திய அரசின் ஆயுத உதவிகளைக் கண்டித்து டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டமும் சட்ட சபையில் நடந்த சூடான விவாதங்களும் ஓரளவுக்கு ஆறுதல் அளிப்பதாகவேயுள்ளன.

பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்க மாட்டோமென தமிழக அரசியல் கட்சிகளுக்கும் ஆறரைக்கோடி தமிழருக்கும் உறுதிமொழி வழங்கியிருந்த இந்திய அரசு அதனை உதாசீனப்படுத்திவிட்டே தற்போது பேரழிவு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் இணையத்தளம் அந்த ஆயுதங்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அந்த விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் அனைத்தும் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுபவையாகவே உள்ளன.

பாகிஸ்தான் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கியுள்ள ஆயுத விபரங்கள் வருமாறு;

40 மில்லிமீற்றர் மோட்டார் பீரங்கிக்குரிய ஷெல்கள், உயர் ரக வெடிபொருட்கள், கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள்-30, `வாரகா' என்ற கரையோர ரோந்து கப்பல்-1, பாதுகாப்பு உடைகள்-200 உம், குண்டு துளைக்காத உடற் கவசம் -4500, கறுப்பு உடைகள்-2500, பாதுகாப்பு தலைக் கவசங்கள் - 3245, குண்டுப் பாதுகாப்பு உபகரணங்கள் - 10.

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறை நிலை கொள்கலன்கள், சிறிய உளவு கருவிகள், குண்டு துளைக்காத வாகனங்கள்-10, இரவுப்பார்வை சாதனங்கள் -400, 3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள், இன்ரெல் பி-4 கணினிகள், இவற்றுடனான யு.எஸ்.பி. 200 உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள்- 35, மின் நிறுத்த பலகைகள்- 25, பாதுகாப்பான தளங்கள் - 35, யு.எச்.எப். கையடக்க சாதனங்களென பல மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை இந்தியா அள்ளி வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா மீண்டும் இராணுவ உதவிகளை வழங்கிய தகவல்கள் தமிழகக் கட்சிகளிடையே விசனத்தை ஏற்படுத்தின. இந்த ஆயுத உதவிகளை கடுமையாகக் கண்டித்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆறரைக்கோடி தமிழர்களின் உணர்வுகளையும் இந்திய அரசு உதாசீனப்படுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்;

`இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழித்துவிட வேண்டுமென துடித்து வரும் இலங்கை இனவாத அரசுக்கு இந்தியா ஆயுத உதவி வழங்கியிருப்பது உலகத் தமிழர்களையெல்லாம் திடுக்கிட வைத்துள்ளது. இலங்கைக்கு எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்கமாட்டோமென வழங்கப்பட்ட உறுதி மொழி மீறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களை பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்லவென்றும் பாதுகாப்புத் தேவைக்கான தளபாடங்கள் மட்டுமே என்றும் இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஈழத் தமிழர்களோடு பேச்சு வார்த்தை நடத்த மறுத்து மூர்க்கத் தனமாக அவர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்திவரும் இலங்கை இனவாத அரசுக்கு இந்தியா எத்தகைய இராணுவ உதவிகளையும் வழங்கக் கூடாதென்பது ஒட்டுமொத்த இந்தியத் தமிழரின் கோரிக்கையாகும். ஆனால், இந்த ஆறரைக்கோடி தமிழர்களினதும் கோரிக்கையையும் உணர்வுகளையும் இந்திய அரசு உதாசீனப்படுத்தி விட்டது.

இந்தப் பிரச்சினையில் தமிழகத்தின் ஆழ்ந்த நித்திரையும் தமிழகத் தலைவர்களின் மௌனமும் கலையவேண்டும். அதற்கான தருணம் வந்துவிட்டது. இந்தத் தருணத்தை தவறவிட்டால் இலங்கையில் எமது சகோதரர்களான ஈழத் தமிழர்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிடுவார்கள். அதன் பின்னர் அவர்களுக்காக அனுதாபக் கூட்டம் நடத்துவதில் எந்தப் பயனுமில்லை.

இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த இங்குள்ள ஆறரைக்கோடி தமிழர்களும் அவர்களை வழிநடத்தும் அரசியல் இயக்கங்களும் தமிழக அரசும் முதலமைச்சர் கருணாநிதியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களைக் காக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்' எனக்கோரியுள்ளார்.

இந்தப் பிரச்சினை தமிழ் நாட்டு சட்ட மன்றத்திலும் கடுமையாக எதிரொலித்தது. பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இந்திய அரசின் செயலை விமர்சித்தன.

இந்தக் கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி தனது வழக்கமான நழுவல் போக்கையே கடைப்பிடித்தார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்;

`ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைதானா என்பதை அறிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். இந்தச் செய்தி உண்மையானதாக இருந்தால் நாம் அனைத்துக் கட்சியினதும் ஒற்றுமையோடு நம்முடைய அழுத்தமான வேண்டுகோளை விடுப்பதற்குத் தயாராகவிருக்கிறோம். ஈழத் தமிழர்களை வதைக்க இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதம் வழங்கக் கூடாது. அவ்வாறான செயலை உடனே நிறுத்துங்கள் எனக் கேட்பதற்கு உரிமையும் பொறுப்பும் எமக்கிருக்கிறதென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகளை வழங்கக் கூடாதென வற்புறுத்தி கடந்த 24 ஆம் திகதி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையருகே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ஆனால், இந்த ஆயுத உதவி குறித்தோ அல்லது அதற்கெதிராக தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள், நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்தோ இந்திய அரசு அலட்டிக்கொள்ளவில்லை.

ஈழத் தமிழர்களை மட்டுமன்றி, இந்திய மீனவர்களையும் படுகொலை செய்துவரும் இலங்கைப் படைகளுக்கு ஆயுத உதவிகளை வழங்கும் இந்திய அரசு சர்வதேச மட்டத்தில் தன்னை ஒரு காந்தியவாதியாக காட்டிக்கொள்ள எவ்வித அருகதையும் அற்றதாகவேயுள்ளது.

தமது உரிமைகளுக்காக போராடுவோரை பயங்கரவாதிகளாக சித்தரித்துக்கொண்டு அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் தற்போது அஹிம்சாவளியின் அடிச் சுவடான இந்தியாவையும் இணைத்துக்கொண்டுள்ளது.

இலங்கையில் பாகிஸ்தான் பிடி இறுகி வருவதை தடுக்கும் முகமாகவே இலங்கையரசுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றபோதும் தமது அரசியல் நலன் சார்ந்த விடயங்களுக்காக ஒரு இனத்தையே கொன்றொழிக்கத் துடிக்கும் பேரினவாத அரசொன்றுக்கு ஆயுத உதவிகளை வழங்கி அதன் கொடூரச் செயலுக்கு இந்தியா ஊக்கமளித்து வருவதை எவரும் நியாயப்படுத்த முடியாது.

இலங்கைத் தமிழ் மீனவர்கள் விடயத்தில் கூட மத்திய அரசும் தமிழக அரசும் தவறிழைத்து வருகின்றன. அண்மையில் தூத்துக்குடி கடலில் `மரியா' படகுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் சிங்கள மீனவர்களெனவும் அந்தச் செய்தி தமிழகத்தில் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தியதால் உடனடியாக கைதான மீனவர்கள் தமிழர்கள் என கதை திரிபுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.