Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடித்துச் சிதறும் குளோரின் நிரப்பரப்பட்ட வாகனங்கள்

Featured Replies

வெடித்துச் சிதறும் குளோரின் நிரப்பரப்பட்ட வாகனங்கள்

ஈராக்கில் குளோரின் வாயு நிரப்பப்பட்ட வாகனங்களை வெடிக்க வைப்பதன் மூலம் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் தீவிரவாதிகள், இரசாயன போர் முறையில் புதிய பரிணாமத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஈராக்கின் இஸ்லாமிய தீவிரவாதிகள் இரசாயன குண்டுகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களாக மாறியுள்ளனரா என்ற அச்சத்தை மேற்குலகில் இருந்து ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 28 இற்கு பின்னர், ஈராக்கில் தீவிரமாகியுள்ள குளோரின் வாயு தாக்குதல்களில் இதுவரை 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈராக்கின் அன்பர் பிராந்தியத்திலேயே முதன் முதலில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ரமாடி, பலுஜா என முக்கிய நகரங்கள் அனைத்தும் குளோரின்வாயு தாக்குதலை சந்தித்துள்ளன.

குளோரின் வாயு கண்களையும் நுரையீரலையும் ஓரிரு செக்கன்களில் தாக்கக் கூடியது. சுவாசிப்பதில் நெருக்கடியை உருவாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது.

குளோரின் வாயு குண்டுவெடிப்புகள் தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்படுவது இன்னுமொரு வளர்ச்சியாக காணப்படுகின்றது.

தற்கொலை தாக்குதல்களிலுள்ள சாதகமான தன்மையை சுட்டிக்காட்டும் இராணுவ ஆய்வாளர்கள் நெருக்கடியை உருவாக்கி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

ஈராக்கில் ஸ்திரத் தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவும் ஈராக்கிய படையினரும் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் மிகத் துணிச்சலானவை என்றும் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் சவால் எனவும் வர்ணிக்கப்படுகின்றது.

ஈராக்கிய தீவிரவாதிகளிடம் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய தாக்குதலை மேற்கொள்ளும் திறன் இன்னமும் இருப்பதையும் இது புலப்படுத்தியுள்ளது.

ஈராக்கின் வழமையாகிப் போன தற்கொலை தாக்குதலை விட, குளோரின் வாயு தாக்குதல் மூலம் குறைவானவர்களே கொல்லப்பட்டுள்ள போதிலும் இதனால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் அதிகமானதாகவுள்ளது.

ஈராக்கிய தீவிரவாதிகள் குளோரின் வாயு தாக்குதல்களை மேற்கொண்டு வரும் விதம், அவர்களுடைய தந்திரோபாயங்கள் மாறி வருவதையும் புலப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு தாக்குதலின் போதும் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ள இரசாயனங்களின் அளவு மாறுபட்டுள்ளது. மேலும், குளோரின் வாயு வெளியேறுவதற்காக தீவிரவாதிகள் பயன்படுத்தும் முறையிலும் பலவீனங்கள் காணப்படுகின்றன.

எனினும், இவ்வகையான குளோரின் வாயு தாக்குதலால் ஏற்படும் உளவியல் ரீதியிலான பாதிப்பு பரந்துபட்டதாக காணப்படுகின்றது. தீவிரவாத அமைப்புகள் தாம் எதிர்கொள்ளும் கடுமையான எதிரியை தோற்கடித்து தமது இலக்கினை நோக்கி முன்னேற்றுவதற்காக புதிய உத்திகளை கையாள்வது வழமை.

ஈராக்கில் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ள குளோரின் வாயு தாக்குதல்களை இதனடிப்படையிலேயே பார்க்க வேண்டியுள்ளது.

மேலும், இது சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஈராக்கிய தீவிரவாதிகள் தமது இலக்குகளை (மக்கள்) தொடர்ச்சியாக அச்ச நிலைக்குள் வைத்திருப்பதற்காக புதிய வழிமுறைகளை உருவாக்குகின்றனர் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அல்லது அவர்கள் தமது தொழில் நுட்ப திறனை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளும் ஆரம்ப தாக்குதல் இதுவா என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

குளோரின் வாயு தாக்குதல்கள் தொடருமா என்ற பீதியும் காணப்படுகின்றது. குறிப்பிட்ட தாக்குதல்களிற்கு தேவையான அளவு குளோரின், தீவிரவாதிகளுக்கு தொடர்ச்சியாக கிடைப்பது கடினமாக அமையும் என பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஈரானில் குளோரினை பெறுவதற்கு பல வழிமுறைகள் காணப்பட்டாலும், கடுமையான கண்காணிப்பு மற்றும் விநியோகக் கட்டுப்பாடு மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

ஈராக்கில் இடம் பெறும் தாக்குதல்கள் அமெரிக்க மண்ணில் இவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவின் இரசாயன நிலைகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நியூயோக்கில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க இரசாயன நிலைகளில் காணப்படும் போதிய பாதுகாப்பின்மை, அங்கிருந்து இரசாயன பதார்த்தங்கள் திருடப்பட காரணமாக அமையலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஈராக்கில் பெற்றுக் கொள்ளும் அனுபவங்களை அவர்கள் அமெரிக்காவில் பயன்படுத்தலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக, ஈராக்கின் குளோரின் வாயு தாக்குதல் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தீவிர கவனம் செலுத்துகின்றன. ஆப்கானில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவம் ஈராக்கில் பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குண்டு தயாரிப்பவர்களுக்கு அற்புதமான பயிற்சிக் கல்லூரி ஈராக் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈராக்கிய தீவிரவாதிகள் துணிச்சலானவர்களாக மாறி வருகின்றனர். சமீபத்தைய குளோரின் வாயு தாக்குதல்கள் அவர்களால் உருவாக்கப்படக் கூடிய அச்சத்தையும் சேதத்தையும் புலப்படுத்துகின்றன என சுட்டிக் காட்டப்படுகின்றது.

ஈராக்கில் இடம்பெறும் குளோரின் வாயு தாக்குதல்களை துல்லியமாக ஆராய்ந்து வருகின்றோம். அதனை மேற்கொள்பவர்கள், வெடிக்க வைப்பதற்கு பயன்படுத்தப்படும் முறை, ஏற்படும் தாக்கம் என அனைத்தையும் அலசி வருகின்றோம் என்கின்றனர் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள்.

ஈராக்கில் குளோரின் வாயு தாக்குதல்கள் அதிகரிப்பது அச்சமூட்டும் விடயம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறான தாக்குதல்கள் குறித்து பெருமளவிற்கு சிந்திக்காததையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஈராக்கில் மேற்கொள்ளப்படுவது குளோரின் குண்டுத் தாக்குதலல்ல என்ற கருத்தும் சில நிபுணர்களால் முன்வைக்கப்படுகின்றது.

வாகனங்களில் குளோரின் நிரப்பப்பட்ட பெட்டிகளையும் குண்டுகளையும் நிரப்பி வைத்து அவற்றை வெடிக்கச் செய்கின்றனர் எனவும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

குளோரின் வாயு தாக்குதலை தற்கொலை போராளியொருவர் மேற்கொள்ளும்போது அதனால், கிடைக்கக் கூடிய சாதகத் தன்மை அதிகம் என்பதையும் ராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.