Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Featured Replies

டி.ராஜா: பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன்

பà¯à®¤à¯à®µà¯à®à®®à¯à®à¯ à®à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ தலà¯à®µà®°à®¾à® விவà®à®¾à®¯à®¤à¯ தà¯à®´à®¿à®²à®¾à®³à®°à®¿à®©à¯ à®®à®à®©à¯

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்சியின் தேசிய கவுன்சில் ஜூலை 20ல் இதற்கு ஒப்புதல் அளித்தது. சுதாகர் ரெட்டி 2012ஆம் ஆண்டிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவந்தார்.

இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட டி. ராஜா, தனது இளமைப் பருவத்தில் இருந்தே பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சம்மேளனம், அக்கட்சியின் விவசாய அமைப்பு ஆகியவற்றில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பொறுப்புகளை வகித்தவர். இதற்குப் பிறகு 1994ல் அக்கட்சியின் தேசியச் செயலராக உயர்ந்தார் டி. ராஜா.

1949ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள சீதாதூரி்ல் விவசாயக் கூலித் தொழிலாளர்களான துரைசாமி - நாயகம் தம்பதியின் மகனாகப் பிறந்தார் ராஜா. குடியாத்தத்தில் உள்ள ஜி.டி.எம். கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார். இவருடைய கிராமத்தில் முதன் முதலில் பட்டப்படிப்பை முடித்தவர் இவர்தான்.

1967-68ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சம்மேளனத்தில் இணைந்தார் டி. ராஜா. 1973ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அவரை மாஸ்கோவிற்கு அனுப்பி கல்விகற்கச் செய்தது. 1974ல் இந்தியா திரும்பிய ராஜா, கட்சியின் முழுநேர ஊழியராக இணைந்தார்.

1976ல் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் முகமாக அடையாளம் காணப்பட்ட ராஜா, கட்சியின் மாநிலக் குழுவிலும் செயற்குழுவிலும் இடம்பெற்றார். அந்த காலகட்டத்தில் மிக முக்கியப் பிரச்சனையாக இருந்த வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வுகாணக் கோரி, Job or Jail என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடினார்.

1985ல் சட்டீஸ்கரின் பிலாஸ்பூரில் நடந்த கட்சியின் மாநாட்டில், அகில இந்திய இளைஞர் சம்மேளனத்தின் தேசியச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார் டி. ராஜா. பஞ்சாபில் பிரிவினை இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்ட அந்த காலகட்டத்தில், 'Save India, Change India' என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார் அவர்.

1992ல் ஹைதராபாதில் நடந்த மாநாட்டில், கட்சியின் தேசிய செயற்குழுவுக்குத் தேர்வான டி. ராஜா, 1994ல் தேசியச் செயலராக உயர்ந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் என சுருங்கியிருக்கும் நிலையில், அக்கட்சி தனது செல்வாக்கு குறித்து பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்த சவாலான சூழலில் அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றிருக்கிறார் ராஜா.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்சும் இந்தியாவை ஒற்றைத் தன்மையுள்ள நாடாக மாற்ற முயற்சிக்கின்றன. இதனை எதிர்கொள்ள வேண்டுமானால் இடதுசாரி கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும். இடதுசாரி சக்திகளிடையே ஒற்றுமை வேண்டும். அதை நோக்கி நான் பணியாற்றுவேன்" என்று கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வாக்கு சதவீதமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆகவே, அக்கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் கேள்வியெழுப்பியிருக்கிறது.

"இந்தக் கேள்விக்கு ஆணையத்திடம் பதில் சொல்வோம். மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், எங்களுக்கு இந்தியாவில் சித்தாந்த ரீதியான செல்வாக்கு இருக்கிறது. ஆனால், அவை ஏன் வாக்குகளாகவோ, இடங்களாகவோ மாறுவதில்லை என்பதை ஆய்வுசெய்வோம்" என்கிறார் டி. ராஜா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி கான்பூரில் துவங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போதுவரை ஒரே சின்னத்தில் தேர்தலை சந்தித்துவரும் கட்சி இது மட்டும்தான். 2004ஆம் ஆண்டில் 10 இடங்களில் வெற்றிபெற்ற அக்கட்சி, 2014ல் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் இரு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைய வேண்டுமென்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. "இப்போதைக்கு இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவோம். அதைத்தான் இந்தத் தருணத்தில் சொல்ல முடியும்" என்கிறார் டி. ராஜா.

இந்திய இடதுசாரிக் கட்சிகள் வர்க்கப் பார்வைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜாதிப் பிரச்சனைகளுக்கு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. டி. ராஜாவின் தேர்வு மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதனை உணர்ந்ததாகச் சொல்ல முடியுமா?

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதை வெளிப்படையாகப் பேசியதில்லை. டி. ராஜா தேசியச் செயலராக இருந்த போதே, ஒரு தலித்தை நாங்கள் தேசியச் செயலராக்கியிருக்கிறோம் என்று சொன்னதில்லை. டி. ராஜா படிப்படியாக மேலே வந்தவர் என்றுதான் அவர்கள் இந்த விஷயத்தைப் பார்ப்பார்கள். பொதுவுடமைக் கட்சிகள் பொதுவாக வர்க்கப் பார்வைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றாலும் 1990களுக்குப் பிறகு அது மாறியிருக்கிறது. இப்போது இடதுசாரிக் கட்சிகளின் ஒடுக்கப்பட்டோருக்கான பிரிவுகள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன" என்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

1925ல் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்த அதே ஆண்டில் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தற்போது இந்தியாவின் மிகப் பலம்வாய்ந்த அமைப்பாக உருவெடுத்திருக்கிறது. இடதுசாரிகள் செல்வாக்குச் செலுத்திய தொழிலாளர் இயக்கங்களிலும் அந்த அமைப்பு தற்போது செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்துள்ளது. இந்த சவால்களை டி. ராஜா எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது மிக முக்கியமான கேள்வியாக இருக்கும்.

2007ஆம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்ட டி. ராஜா, 2013ல் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வானார். அவருடைய மாநிலங்களவை பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பல சமூக, பொருளாதார, கல்விப் பிரச்சனைகள் குறித்து குரல் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.

Dalit Question, The Way Forward: Fight Against Unemployment ஆகிய இரு நூல்களை எழுதியிருக்கிறார்.

ராஜாவின் மனைவியின் பெயர் ஆனியம்மா. இவர் அக்கட்சியின் மகளிர் அமைப்பான இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-49065450

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.