Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களவையில் மசோதா நிறைவேறியது தனி நபரை தீவிரவாதியாக அறிவிக்கலாம்

Featured Replies

TamilNews_2019_Jul__800197780132294.jpg

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய தனிநபரை தீவிரவாதியாக கருதி அவரிடம் நேரடியாக விசாரிக்கவும், அவரது சொத்துகளையும் உடமைகளையும் மாநில போலீசாரின் முன் அனுமதியின்றி பறிமுதல் செய்யவும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சட்ட விரோத நடவடிக்கைகள் (உபா) தடுப்பு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. 

மக்களவையில், தீவிரவாத தடுப்பு சட்டமான, ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா’ (உபா) நேற்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்படி, தேசிய புலனாய்வு அமைப்பானது (என்ஐஏ), நாட்டின் எந்த பகுதியிலும், சம்பந்தப்பட்ட மாநில போலீசாரின் முன் அனுமதி பெறாமல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இதன்மூலம், தீவிரவாதத்திற்கு உதவி செய்பவர், தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பவர்களையும் தீவிரவாதியாக கருதி அவரிடம் விசாரணை நடத்தவும், மாநில போலீசின் முன் அனுமதியின்றி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் முடியும். இச்சட்ட திருத்தம் என்ஐஏ.வுக்கு அதிக பலத்தை தரக்கூடியது.

இதற்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தெலங்கானா எம்பி அசாசுதீன் ஓவைசி பேசுகையில், ‘‘இச்சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரானது. இதன் மூலம், நீதிமன்ற உரிமைகள் மறுக்கப்படும்,’’ என்றார். தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் இச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது, குஜராத் முதல்வராக இருந்த மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான சட்ட திருத்தம் என்றார். இச்சட்ட திருத்தத்தால் அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படக் கூடும்,’’ என்றார்.

திரிணாமுல் எம்பி மொய்திரா பேசுகையில், ‘‘இச்சட்ட திருத்தம் அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படும். இது மக்களுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான சட்ட திருத்தம். அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் தேச துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்கள். அரசு கொண்டு வரும் சட்டங்களை நாங்கள் எதிர்த்தாலும் இதே போன்று முத்திரை குத்தப்படுகிறோம்,’’ என்றார்.
 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘‘இது அரசை எதிர்ப்பவர்களை அடக்குவதற்கு உதவும். அரசியல் களத்தில் பழிவாங்க பயன்படுத்தக் கூடும்,’’ என்றார்.

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆதரித்து பேசுகையில், ‘‘இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு வழி தவறிச் சென்றுவிடாமல் இச்சட்டம் பாதுகாக்கும்,’’ என்றார். இச்சட்ட திருத்தத்தை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
 

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தீவிரவாதத்தின் ஆணி வேரை அகற்ற வேண்டுமெனில், தீவிரவாதத்துடன் தொடர்புடைய நபரையும் தீவிரவாதியாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். 

இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது. தீவிரவாதத்தை வேரறுக்க மட்டுமே பயன்படுத்தப்படும். இதை மத, இன ரீதியாக பிரித்து பார்ப்பதும் தவறானது. உண்மையிலேயே இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐமு கூட்டணி அரசுதான். காங்கிரஸ் கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால் தவறா? இந்த அரசு தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறது. இந்த விஷயத்தில் எந்த கட்சி ஆட்சி செய்கிறது என்பது ஒரு பொருட்டல்ல. நியாயப்படி இச்சட்ட திருத்தத்தை காங்கிரஸ் தனது ஆட்சியில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், வாக்கு வங்கிக்கு பயந்து அமல்படுத்தவில்லை. நாங்கள் தற்போது இதை கொண்டு வருகிறோம்.

தீவிரவாதத்திற்கு எதிராக கட்சிகளை கடந்து நாம் ஒன்று சேர வேண்டும். சிலர் சித்தாந்தத்தின் அடிப்படையில் நகர்புற நக்சல் தீவிரவாதத்தை பரப்பி வருகிறார்கள். கொள்கைக்காக என்றிருந்த மாவோயிசம், பின்னாளில் பொதுமக்களை கொல்ல ஆரம்பித்தது. அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டாது. அதை வேரோடு அழிப்பதே இந்த அரசின் நோக்கம். தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 287 எம்பி.க்களும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, உ.பா. சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆர்டிஐ மசோதா தாக்கல் ஒத்திவைப்பு
தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் அரசு பின்வாங்கியது. இச்சட்ட திருத்தத்தின்படி, தலைமை தகவல் ஆணையரின் நிர்ணயிக்கப்பட்ட (5 ஆண்டு) பதவிக்கால முறையும், சம்பளமும் மாற்றப்பட உள்ளது. இது ஆர்டிஐ சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்து விடும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மக்களவையில் ஆளும் பாஜ அரசுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் கடும் எதிர்ப்பிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் பாஜ.வுக்கு 116 எம்பி.க்கள் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற, இன்னும் 5 எம்பி.க்கள் ஆதரவு தேவை. எனவே, பெரும்பான்மை பலம் இல்லை என்பதால் திடீரென இம்மசோதா தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=512797

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.