Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரசை ஆயுதமாக்கி என்னை கைது செய்ய துடிக்கிறார்கள்: வைகோ பரபரப்பு பேச்சு

Featured Replies

காங்கிரசை ஆயுதமாக்கி என்னை கைது செய்ய துடிக்கிறார்கள்: வைகோ பரபரப்பு பேச்சு

]

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர்....

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருவான்மிïரில் இன்று காலை ம.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளர் கழக குமார் இல்ல திறப்பு விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் உங்களை கைது செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த வைகோ கூறியதாவது:-

ஈழத் தமிழ் மக்களின் வேதனையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அவர்களின் உரிமை போராட்டம் வெல்ல வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.

இதே கருத்தை பல முறை நான் சொல்லி இருக்கிறேன். பிரதமரிடமும் பேசி இருக்கிறேன். பாராளு மன்றத்திலும் பேசி இருக்கிறேன். தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்துக்கு வெளியே உண்ணாவிரதம் இருந்து இருக்கிறேன்.

அதே கருத்தைத்தான் இப்போதும் பேசி வருகிறேன். இப்போது ஆளும் மாநில அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது என்றார்.

முன்பு நீங்கள் கைது செய்யப்பட்ட போது தி.மு.க. உங்களுக்கு ஆதரவாக பேசியது. இப்போது உங்களை கைது செய்ய வேண்டும் என்பது இரட்டை நிலைப்பாடு ஆகாதாப என்று வைகோ விடம் கேட்ட போது, அவர் தி.மு.க. அரசு காங்கிரசை ஆயுதமாக பயன்படுத்தி என்னை கைது செய்ய துடிக்கிறது என்றார்.

முன்னதாக இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க. அங்கிங்கு இல் லாதபடி எங்கும் பிரகாச மாக வளர்ந்து வருகிறது. உணர்ச்சி தமிழர்கள் இதயசிம் மாசனங்களில் வீற்றிருக்கிறது. உலகில் தமிழர்களின் உரிமைக்காக பாடுபடும் இயக்கம் இது.

தமிழகத்தில் வன்முறை களுக்கு இடம் கொடுக்காத இயக்கம் 13 ஆண்டு கால நெடிய பயணத்தில் ஒரு சிறு வன்முறைக்கு கூட இடம் கொடுக்க வில்லை.

புது இல்லம் கட்டி உள்ள ம.தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் கழக குமாரின் நிஜப் பெயர் காம ராஜர். எதற்கும் ஆசைப்படாதவர் காமராஜர். அவர் பதவிகளை தேடிச் சென்றதில்லை. அவர் நினைத்திருந்தால் பிரதமர் ஆகி இருக்க முடியும். காங் கிரஸ் கட்சி தனக்கு உரிய அங்கீகாரம் தரவில்லை என்றும் கேட்டதில்லை. நான்

சொல்வது இன்றைய காங்கிரஸ் கட்சியை அல்ல.

இன்றைய காங்கிரசில் எத்தனை கோஷ்டிகள் என்றும் கண்டு பிடித்தால் நோபல் பரிசு கூட கொடுக்கலாம்.

அண்ணா உருவாக்கிய கட்சி உங்கள் பின்னால் இருக்கிறது. எத்தனையோ வசதிகள் இருக்கிறது. இவ்வளவு இருந்தும் பொன்விழா எடுக்க வேண்டும் என்கிறீர்கள். எதிர் கட்சிகளும் எதிர்ப்பாளர்களும் பல்லக்கு தூக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது என்ன நியாயம், இவ் வளவு வசதி இருந்தும் நிம்மதி வரவில்லையே. அ.தி.மு.க. வுடன் நாம் உருவாக்கி உள்ள தோழமை மேலும் வலுப்பெறும் காரணம் இது இயற் கையான கூட்டணி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தலைவியும், நாமும் கரம் கோர்த்து தமிழகத்தை பாதுகாக்க களத்தில் நிற்கிறோம். ஆளும் சர்க்கார் போலீஸ் துறையை பொய் வழக்கு போடபயன் படுத்துகிறது.

மக்கள் மன்றத்தில் குரல் வாக்கு சென்ற குற்றமற்ற பஷீரை பொய் வழக்கு போட்டு அராஜகத்தால் அடைத்தீர்கள். உங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது. இந்த ஆட் சிக்கு மக்கள் மன்றத்தில் மதிப்பு குறைஞ்சு வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.

இதே தம்பியின் திருமணத் தன்று நான் ஜெயிலில் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு ஓட்டு போடுவதற்காக சென்னைக்கு வந்தேன். இன்று இந்த விழாவின் மூலம் சொல்லிக் கொள்கிறேன். மீண்டும் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆக வேண்டும். அவருக்கு எல்லா தகுதியும் உள்ளன. ராஜேந்திர பிரசாத்தை காரணம் காட்டி மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு கட்சிகள் வியாக்கியானம் பேச என்ன யோக்கியதை இருக்கிறது.

இரண்டாவது முறை ஜனாதிபதி ஆகலாம் என்று பாரதீய ஜனதாவை பார்த்து கம்ïனிஸ்டு கேள்வி எழுப்பி உள்ளனர். அப்துல்கலாம் பாரதீய ஜனதா உறுப்பினராப அவர் நடுநிலை தவறாதவர். யாராலும் ஆட்டிப் படைக்க முடியும் கைப் பாவை யாக அவர் இருக்கவில்லை. அகிலம் வியக்கும் மாபெரும் அறிவியல் மேதை நூற்றுக்கு நூறு சதவீதம் அவர் தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும். நல்ல அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

இதே விழாவில் பா.ம.க. எம்.பி. ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டார். அவர் பேசும் போது, வைகோ மீண்டும் எம்.பி.யாகி பாராளு மன்றத்துக்கு வரவேண்டும். அவர் பாராளுமன்றத்தில் இல்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர் அவர் என்றார்.

விழாவில் ம.தி.மு.க. நிர்வாகிகள் மல்லை சத்யா, கலைப்புலி தாணு, வக்கீல் ராதாகிருஷ்ணன், நாஞ்சில் சம்பத், நன்மாறன், மணிமாறன், ஜீவன், பாலவாக்கம் சோமு, செல்வபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்வின்

Edited by வானவில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.