Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா பயணிகளின் வானில் ஆயுதமா? -பொலிஸாரின் சோதனையால் மட்டு.வில் பதற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Police.jpg

சுற்றுலா பயணிகளின் வானில் ஆயுதமா? -பொலிஸாரின் சோதனையால் மட்டு.வில் பதற்றம்!

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வாகனம், மட்டக்களப்பில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று (சனிக்கிழமை) காலை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இனந்தெரியாத நபரினால், 119 அவசர இலக்கத்தினூடாக குறித்த வானின் இலக்கம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு, அந்த வானில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன் வானிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று திரும்பிச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார.

அத்தோடு, அவர்கள் வந்த வான் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு சோதனையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவிலிருந்து யாழ். குடாவுக்கு வந்தவர்கள் மட்டக்களப்புக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த அவர்கள், நேற்று உல்லைப பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.

இதன்போது காத்தான்குடி பகுதியில் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களின் ஆடை தொடர்பாக சிலர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் குறித்த குழுவினர் முரண்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வெளிநாட்டவர்களின்-வானில/

############   ##############   #############  #############

பிரித்தானியாவிலிருந்து யாழ். குடாவுக்கு வந்து,  மட்டக்களப்புக்கு  சுற்றுலா சென்று,
காத்தான்குடியில்.... "ஷொப்பிங்" செய்த ஆட்களை, என்ன வென்று சொல்வது.  😎

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களின் ஆடை தொடர்பாக சிலர் அங்கு கருத்து வெளியிட்டுள்ளனர்

காத்தங்குடியில் ஆடை தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது அநேகமாக இஸ்லாமியராக இருக்க வாய்ப்பில்லை,இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக  அவர்களை பொலிசாரிடம் மாட்டிவிட்டுள்ளனர் போல தெரிகின்றது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

காத்தங்குடியில் ஆடை தொடர்பாக கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது அநேகமாக இஸ்லாமியராக இருக்க வாய்ப்பில்லை,இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக  அவர்களை பொலிசாரிடம் மாட்டிவிட்டுள்ளனர் போல தெரிகின்றது....

உண்மைதான் புத்தன். அவர்கள் இஸ்லாமியராக இருந்திருந்தால்... 
மசூதியிலோ, ஜமாத்திலோ...சொல்லி....  காதும், காதும்.... வைச்ச மாதிரி, 
இரகசியமாக...  உள்ளாலை, அலுவலை  கொண்டு போயிருப்பார்கள்.

தமிழர்கள் என்ற படியால் தான், அவர்கள் வாகனத்தில், 
ஆயுதம் இருப்பதாக போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் இருந்து போனவர்களுக்கு... ஷொப்பிங் செய்ய காத்தான்குடியா கிடைத்தது.
கொழும்பு தாண்டி, யாழ்ப்பாணம் வந்து, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு  வரையும்...
தமிழர்களின் கடை கிடைக்கவில்லையா. நல்லாய் வேணும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.