Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் ; சேனாதிராசா

Featured Replies

மயிலிட்டித் துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதம் தான் அவ்வாறு கூறுவதற்கு இயலாத ஒன்றாகவே உள்ளது என்றும் மக்களின்காணிகள் மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

 

மயிலிட்டித்துறைமுகம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

கடந்த ஆண்டு மயிலிட்டித்துறைமுகம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மயிலிட்டித்துறைமுகமானது பிரேமதாஸ பிரதமராக இருந்தபோது தந்தை செல்வநாயகம் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது.

இப்பிரதேசத்திலிருந்து 300 தொடக்கம் 400 தென் கடலுணவுகள் ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு சென்ற வரலாறுள்ளது. கடந்த 30 வருட காலமாக இந்த முயற்சிகள் ஏதும் இடம்பெறவில்லை இப் பிரதேச இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது 75 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. 

மயிலிட்டித் துறைமுகமானது இன்று திறக்கப்படுகின்றபோதும் இப் பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படுவதன் மூலம் தான் இந்தத் துறைமுகம் முழுமையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த மண்ணுக்குச் சொந்தக் காரர்கள் இடம்பெயர்ந்த நிலையிலேயே தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். இந்த மயலிட்டித்துறைமுகத்தை கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கும்போது நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் இந்தப் பகுதி மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தேன் அன்றைய தினமே இதற்குரிய நடவடிக்கை எடுத்ததாக வாக்குறுதியளித்தார்.

எனினும்இன்னும் நடைபெறவில்லை. இங்கு கடமையில் இருக்கின்ற இராணுவ அதிகாரி மற்றும் இராணுவத்தளபதி மக்களின் காணிகளை விடுவிப்பதில் உணர்வுபூர்வமாகவே இருந்தார்கள். எனினும் இன்னும் சாத்தியப்படவில்லை. இந்த நிகழ்விலும் பிரதமரிடம் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவே வாக்குறுதி தந்துள்ளார்.

வடபகுதியில் கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் பல காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.இவற்றை விடுவித்துத்தருமாறு பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் பேசுவதற்குக நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

இந்தத் துறைமுகம் திறக்கப்படுவது வரப்பிரசாதம் தான் அவ்வாறு கூறுவதற்கு இயலாத ஒன்றாகவே உள்ளது. மூன்று கட்டமாக புனரமைப்பு நடைபெறவுள்ள நிலையில் முதற்கட்டமாக தற்போது இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரண்டு பகுதிகளும் விரைவாக புனரமைப்பு செய்யப்படவேண்டும் 

இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இப் பகுதியில் இராணுவ மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காக காணிகளை அபகரிக்கவுள்ளதாக அறிவித்தல்களை விடுத்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். நாங்கள் இது தொடர்பில் பேசி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

நாங்கள் போர்க் காலதிலும் போர் முடிவுற்ற பின்னரும் பலநூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளோம். எனவே எங்கள் காணிகளை எங்களிடம்தந்து விடுங்கள் மீண்டும் எங்களை போராத்தூண்டாதீர்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/62724

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் இன்று ஒப்பமிட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

Army_News__5_.png

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுன. இதற்கான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஒப்பமிட்டு கையளிக்கப்பட்டன. 

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவால் இதற்கான ஆவணங்கள் இன்று கையளிக்கப்பட்டது.

காணி விடுவிப்பு தொடர்பில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று படையினர் வசமிருந்த 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாகவும். இதேவேளை மெலும் காணிகள் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை விடுவிப்பது தொடர்பிலான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும். தனியார் காணிகள் இவ்வாறு விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடு்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Army_News__3_.png

குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் ஆரமைநாயகம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று படையினரால் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை இன்று தம்மிடம் கையளித்துள்ளதாகவும், குறித்த விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் மக்கள் தமது என அடையாளப்படுத்தும் வகையில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், குறித்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/62696

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.