Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியின் பால் ஆறுமுகநாவலரை விட, ராமசாமி என்பவருக்குத் தான் தமிழ் பற்று அதிகம் என்ற வகையில் சிலர் இங்கு இகழ்ந்து பேசியதற்காக, ஆறுமுகநாவலர் தமிழிற்கென எழுதின இலக்கணச் சுருக்கத்தை பிரதி பண்ணி வழங்குகின்றேன். ராமசாமி எவ்வளவு தூரம் தமிழுக்குப் பாடுபட்டார் என்பதை அவரது பக்தர்கள் விளக்கட்டும். ஏனென்றால் வடமொழியில் பற்றுக் கொண்டதாக இவர்கள் கேவலப்படுத்துகின்ற ஆறுமுகநாவலரே, இவ்வளவு செய்து இருக்கின்றபோது, இவர்களின் தமிழ் பற்றாளராகச் சாயம் பூசமுனையும் கன்னடக்காரர் எவ்வளவு தூரம் தமிழுக்குப் பாடுபட்டார் என்று அறிய வேண்டமா?

ஒரு கோட்டை அழித்து, தன் கோட்டை உயர்த்திக் காட்டுவதை விட, தன் கோட்டை உயரத்துவது தான் சிறந்த வழி. அதையே திறமையாக நாவலர் செய்திருந்தார். கோட்டை அழித்துத் தன்னை உயர்த்திக் காட்ட முனைந்தவர் தான் ராமசாமி என்பதையும், வெறுமனே இந்து மத எதிர்ப்புணர்வு தான் அவரது சொத்து என்பது தான் என் கருத்து.

அதை விடுவோம். இதை நூலகம் இணையத்தில் இருந்து பெற்றேன். முழுமையாகச் சரி பார்க்கப்படாததால், சொற்பிழைகள் உள்ளன. அவற்றிற்கு மன்னிக்க. இயலுமானவரை நான் தவிர்த்துள்ளேன்.

----------------------------------------------------------------------------

இலக்கணச் சுருக்கம்- ஆறுமுகநாவலர்

முதலாவது எழுத்ததிகாரம்

1. இலக்கண நூலாவது யாது?

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.

2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?

அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.

3. எழுத்தாவது யாது?

எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்.

4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்?

அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.

5.உயிரெழுத்துக்கள் எவை?

உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.

6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.

7.குற்றெழுத்துக்கள் எவை?

* குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.

8. நெட்டெழுத்துக்கள் எவை?

நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.

9. மெய்யெழுத்துக்கள் எவை?

மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.

10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.

11. வல்லெழுத்துக்கள் எவை?

வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.

12.மெல்லெழுத்துக்கள் எவை?

மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.

13. இடையெழுத்துக்கள் எவை?

இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.

14. சுட்டெழுத்துக்கள் எவை?

அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம்

உ-ம். அவன், இவன், உவன்,

அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்

15. வினாவெழுத்துக்கள் எவை?

எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.

உ-ம். எவன், எக்கொற்றன்

கொற்றான, கொற்றனோ

ஏவன், கொற்றனே

யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்

16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்?

அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இனவெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.

17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை?

உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநூற்றுப்பதினாறுமாம். அவை, க, கா, கி, கீ ......முதலியவைகளாம்.

18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை? உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணூறாகும்? உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்? உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?

உயிர்- மெய்க் குற்றெழுத்துத் தொண்ணூறு. உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

உயிர்-மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

19. ஆய்தவெழுத்தாவது எது?

ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.

உ-ம். எஃகு, கஃசு, அஃது, பஃறி

20. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?

மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களும் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க

அருமையான தொண்டு தூயவ நண்பரே!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் ஆசிர்வாதம் என்றும் தங்களுக்கு உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்களின் மாத்திரை

21. குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை?

குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.

22.மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை? ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தனை?

மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.

23.உயிர்மெய்குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய்நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை?

உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.

24. மாத்திரையாவது எது?

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.

25. தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ? தன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் உகரத்திற்கு பெயர் யாது? ன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் இகரத்திற்கு பெயர் யாது?

உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.

26.குற்றியலுகரமாவது யாது? அக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? நெடிற்றொடர் எத்தனையெழுத்து மொழியாகிவரும்?

குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.

அக் குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத் தொடர்கின்ற அயலெழுத்தின் வகையினாலே, நெடிற்றொடர்க் குற்றியலுகரம், ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம், உயிர்த் தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பலவெழுத்து மொழியாகியும் வரும்.

உ-ம். நாகு, ஆடு நெடிற்றொடர்க்குற்றியலுகரம்

எஃகு, கஃசு ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்

வரகு, பலாசு உயிர்த்தொடர்க்குற்றியலுகரம

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணச் சுருக்கம் பற்றி விரிவாய் அறியனும் எண்டு நினைத்து அதை எனது வலைப்பூவில் பதித்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?autom...p;blogid=5&

போக போக புரிந்து கொள்ள கஸ்டமாயிருக்கு.

இன்னும் நிறைய தாங்க. வாசித்து பாப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதனிலை

34. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை?

பன்னிரண்டுயிரெழுத்துக்களும

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதவியல்

42. பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்?

பதமாவது,த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிப்பதாம். அது, பகாப்பதமும், பகுபதமும் என இருவகைப்படும்.

43. பகாப்பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்?

பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். அது, பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம், என நான்கு வகைப்படும்.

உ-ம். நிலம், நீர், மரம் => பெயர்ப் பகாப்பதம்

நட, வா, உண் => வினைப் பகாப்பதம்

மற்று, ஏ, ஓ => இடைப் பகாப்பதம்

உறு, தவ, நனி => உரிப் பகாப்பதம்

44. பகுபதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?

பகுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம், என இருவகைப்படும். அவற்றில், வினைப் பகுபதம், தெரிநிலை வினைப் பகுபதம், குறிப்பு வினைப் பகுபதமும் என இருவகைப்படும்.

உ-ம். பொன்னன் .. பெயர்ப் பகுபதம்

நடந்தான் .. தெரிநிலை வினைப் பகுபதம்

பெரியன் .. உரிப்பகாப்பதம்

• தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் பகுபதமாகும் எனவே, அவ்விருவகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என்பது பெறப்படும்.

பகுதவுறுப்பு

45. பகுபதத்துக்கு உறுப்புக்கள் எவை? புகுபதம் இவ்வாறுறுப்புக்களும் பெற்றே முடிவு பெறுமோ?

பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடைநிலை சாரியை, சந்தி, விகாரம், என ஆறாம். புகுபதம், இவ்வாறுறுப்புக்களுள்ளும் பகுதி விகுதி என்னும் இரண்டு முதலியவவைகளினால் முடிவு பெறும்.

உ-ம்.

(1) கூனி என்பது, கூன், இ எனப் பகுதி, விகுதி என்னும் இரண்டுறுப்பால் முடிந்தது.

(2) உண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது.

(3) உண்டனன் என்தது, உண், ட், அன், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிந்தது.

(4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐந்துறுப்பால் முடிந்தது.

(5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி, முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது.

பகுதி

46. பகுதிகளாவன யாவை?

பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.

47. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?

பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.

உ-ம்.

(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.

(2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன்.

48. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.

உ-ம்.

(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.

(2) ஆற்று, இற்று, எற்று

49. விகுதி புணரும் பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ?

மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க.

உ-ம்.

அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது.

கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது.

பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.

பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.

குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.

பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது.

வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது.

சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.

50. தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?

தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும்.

உ-ம்.

நட, நடந்தான் வினையடி

வா, வந்தான்

நில், நின்றான்

காண், கண்டான்

சித்திரம், சித்திரித்தான் பெயரடி

கடைக்கண், கடைக்கணித்தான்

போல், பொன்போன்றான் இடையடி

நிகர், புலிநிகர்த்தான்

சால், சான்றான் உரியடி

மாண், மாண்டான்

51. தெரிநிலை வினைப்பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும் பொழுது எப்படி வரும்?

தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும்.

உ-ம்.

1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான்

2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது.

தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது.

தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது.

செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது.

விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது.

கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது.

கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது.

சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.

52. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்?

தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும்.

உ-ம்.

1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான்

2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான்

3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்.

53. பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்ன?

பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றை யேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம்.

54. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விகுதி

55. விகுதிகளாவன யாவை?

விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும்.

56. பெயர் விகுதிகள் எவை?

பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.

உ-ம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.

57. தொழிற்பெயர் விகுதிகள் எவை?

தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.

உ-ம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.

மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.

துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.

58. பண்புப்பெயர் விகுதிகள் எவை?

பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.

உ-ம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வரும்.

59. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை?

தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.

உ-ம்.

நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.

58. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை?

குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ,

டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.

உ-ம்.

கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.

59. தெரிநிலை வினாப் பெயரெச்ச விகுதிகள் எவை?

தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.

உ-ம்.

செய்த, செய்கின்ற, செய்யும்.

குறிப்பு: வினைப்பெயரெச்ச விகுதி, ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வினைப் பெயரெச்சத்துக்கு வராது.

உ-ம். கரிய

60. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் எவை? குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை?

தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.

உ-ம்.நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.

குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.

உ-ம்.மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.

61. பிறவினை விகுதிகள் எவை?

பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.

உ-ம்.

செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.

62. வினை முதற்பொருள் செயற்படு பொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை?

இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.

உ-ம்.

1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.

2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.

3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.

61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தற்பொருட்டுப் பொருளுணர்த்தும் விகுதி எது? செயற்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தன்மைப்பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?

61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-

விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.

உ-ம்.

வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.

கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.

உ-ம்.

அடித்துக்கொண்டான்.

படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.

உ-ம்.

கட்டப்பட்டான், கட்டுண்டான்.

மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.

உ-ம். பொன்மை, ஆண்மை

இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.

உ-ம். எழுந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.

மிகுதி தொடரும்.......

Edited by தூயவன்

இலக்கண நூல்களை பல தமிழாசிரியர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆசிரியப் பணி புரிந்த ஆறுமுகன் என்பவரும் ஒருவர்

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கண நூல்களை பல தமிழாசிரியர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களில் ஆசிரியப் பணி புரிந்த ஆறுமுகன் என்பவரும் ஒருவர்

இப்படியான விளையாட்டுக்கள் வேண்டாம் என்று நினைக்கின்றேன். உங்களுக்குப் பிடித்தமானவரைப் பற்றிச் சொல்லுகின்றபோது, அவரால் மட்டும் தான் முடிந்தது போலக் கதைப்பதும்,(உதாரணத்துக்கு தட்டச்சுச் வரிவடிவம். ஏதோ பெரியார் தான் பண்ணிக் கொடுத்ததாக பெருமை அடித்ததைச் சொல்கின்றேன்)

பிடிக்காதவர் சாதாரணமானவர் என்று பேசுவதற்காக, 100 பேரில் அவரும் ஒருவர், என்று கதைப்பது எல்லாம் பழைய பாணி.

இங்கே, நான் கேட்டது, ஆறுமுகநாவலர் -ராமசாமி பற்றிய மொழி ஓப்பீடு தான். வடமொழிப் பிரியராக நீங்கள் கேவலப்படுத்த முனையும், ஆறுமுகநாவலருக்கு ஏணி வைத்தால் கூட எட்ட முடியாத ராமசாமிக்குத் தமிழ் பற்றிக் கதைக்க என்ன தகுதியுண்டு?

மொழியின் அருமை பற்றி ஆறுமுகநாவலர் தெரிந்து வைத்திருக்கின்றார். ராமசாமிக்கு மொழியைப் பற்றி என்ன தெரியும்? அப்படி மூக்கை நுழைக்க என்ன தகுதி உண்டு என்பது தான். அப்படி தமிழுக்குப் பங்காற்றி இருந்தால் தெரிவிக்க. அதை விட்டு விட்டு, மற்றவர்களோடு ஒப்பீடு எல்லாம் வேண்டாம்.

Edited by தூயவன்

தமிழை காப்பது என்பதன் அர்த்தம் இலக்கணப் புத்தகம் வெளியிடுவது அல்ல. இலக்கணப் புத்தகம் வெளியிட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் வடமொழியில் எழுதினால் தமிழ் எப்படி வாழும்?

தமிழை மற்றைய மொழிகளின் ஆக்கிரமப்பில் இருந்து காப்பதுதான் உண்மையான தமிழ்ப் பணி.

சிங்களம் தமிழை விழுங்கி விடாதவாறு தமிழீழப் போராட்டம் காத்து நிற்கிறது. அந்தப் போராட்டத்தை நடத்துகின்ற எமது தேசியத் தலைவரும் அந்த வகையில் தமிழ் பணி செய்கிறார். இந்தப் பணிக்கு ஒரு கோடி இலக்கணப் புத்தகங்கள் எழுதினாலும் ஈடாகாது.

தமிழை அழிய விடாது போராட்டம் நடத்துபவர்களோடு இலக்கணப் புத்தகங்கள் எழுதுபவர்களை ஒப்பிடுவது தவறு.

தந்தை பெரியார் வட மொழியின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழை காத்தவர்களில் மிக மிக முக்கியமானவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியில் ஒரு ஆக்கங்களும் எழுதாமல் வடமொழியை மட்டும் எதிர்த்துக் கொண்டால் தமிழ்மொழி வளர்ந்திடுமா? தமிழில் ஆக்கங்கள் நிறைய இருந்தால் ஏன் தமிழர்கள் மற்றய மொழி நோக்கிப் போகின்றார்கள். அன்று வடமொழி, பிறகு இந்தி, போத்துக்கீசம், இப்போது ஆங்கிலம் என்று மக்கள் பிறமொழிகளை விரும்பவதற்குக் காரணமே. தமிழில் ஆக்கங்கள் ஊக்குவிக்கப்படாததும், தோன்றாததும் தான் காரணம்.

ஒவ்வொரு மொழியும் ஊடுருவலைத் தடுக்க எல்லா மொழியையும் எதிர்த்துக் கொண்டால் மட்டும் பிறமொழிக்கலப்பைத் தடுத்திட முடியுமா? முதலில் தமிழினை வளப்படுத்த வேண்டும். நமக்குள் ஒரு சரக்கையும் கொண்டிராமல் பிறரைத் திட்டுவது முட்டாள்தனமான முடிவு.

அதையும் விட ராமசாமி மொழிரீதியாக நாட்டாமை வேலைக்கு முயன்றார். இதைவிட தமிழ் வரிவடிவத்தில் கை வைக்க முயன்றார். பல எழுத்துக்களை நீக்க முயன்றாராம். சொல்லப் போனால் பெரியாருக்குத் தமிழ் பற்றிய அடிப்படை ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை. தமிழின் ஒழுங்கான வரிவடிவமே அதில் தான் தங்கியுள்ளது. "ங்" என்ற எழுத்தில் மிகுதிச் சொற்கள் எதுவுமே பாவனையில் இல்லை. அப்படியிருந்தும் மிகுதி வரிவடிவத்திற்காகத் தான் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றுமே தமிழைப் பற்றித் தெரியாத இவர் அதில் மூக்கை நுழைத்து வில்லங்கம் செய்ய முயன்றார். பிறகு அதைப் பற்றி ஏதும் தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை. அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

மேலே சொன்னது போன்று, நம் கோட்டை உயர்த்திக் கொண்டு போனால், மற்றய கோடு ஏன் நம்மை விட, உயர்ந்து நிற்கின்றது. இன்றைக்கு வலைப்பூக்களைப் பார்த்தாலே தெரியும். திராவிடவாதிகள் தான், கொச்சைத் தமிழிலும், ஆங்கில உச்சரிப்புக்களிலும் தமிழைக் கொன்று கொண்டு இருக்கின்றார்கள்.

சிங்களம் தமிழை விழுங்கி விடாதவாறு தமிழீழப் போராட்டம் காத்து நிற்கிறது. அந்தப் போராட்டத்தை நடத்துகின்ற எமது தேசியத் தலைவரும் அந்த வகையில் தமிழ் பணி செய்கிறார். இந்தப் பணிக்கு ஒரு கோடி இலக்கணப் புத்தகங்கள் எழுதினாலும் ஈடாகாது.

தலைவர் சிங்களம் அழிக என்று நேர்த்தி வைக்கவில்லையே. சிங்களத்தில் கூட தமிழீழப் போராட்டத்தை நியாயப்படுத்தி பிரச்சாரம் செய்யச் சொல்லியிருக்கின்றார். நம் மொழியும் வளரவேண்டும். அவர்களும் வளரட்டும் என்பது தான் அவரின் நிலைப்பாடாக இருக்கின்றது. இதற்கும் ராமசாமியின் செயற்பாட்டுக்கும் முடிச்சுப் போடாதீர்கள். இரண்டும் எட்டப் பொருத்தம்.

விடுதலைப்புலிகள் கூட புதிய கலைச்சொற்களையும், இலக்கணக் கட்டமைப்பையும் பேணித் தான் தமிழ் பணி செய்கின்றார்களே, தவிர சிங்களத்தைத் திட்டியல்ல. சொல்லப் போனால் இலக்கண வடிவத்தை எல்லோரும் புரிந்து கொண்டால் சொற்களை நேர்த்தியாக எழுத கடினம் இருக்காது. நாவலர் அதை இலகுவாக்கினார். இன்று தொல்காப்பியர் எல்லோரையும் விட உயர்ந்து நிற்து. தமிழினை நேர்த்தியாக்கி வடிவமைத்தது தான். இன்றைக்கும் தமிழை மூத்தமொழி என்பதே அவரின் இலக்கண வடிவமைப்புத் தான்.

இன்றும் கூட பல பிறமொழி நூல்களைப் புலிகள் மொழிமாற்றம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அதை நூலகங்களில் பல தடவை கண்டிருக்கின்றேன். அது தான் மொழி ஊக்குவிப்பு

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்றானாம். தமிழ் வரிவடிவமே தெரியாதவர்கள் தமிழைப் பற்றிக் கதைப்பதும் அதே நிலை தான்.

எந்த மொழிpயல் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவை தமிழுக்கு இல்லை. அப்படி ஏமாற்றவும் தேவையில்லை. தமிழை வளப்படுத்தினாலே, எந்தமொழியும் நம்மை நெருங்காது.

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புணர்ந்து கெடும் விகுதி

67. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?

முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும்.

உ-ம்.

*நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.

*கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.

*அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.

*காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது.

*ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.

இடைநிலை

68.இடைநிலைகளாவன யாவை? அவை எத்தனை வகைப்படும்?

இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.

69 காலங் காட்ட விடைநிலைகள் எப் பகுபதங்களுக்கு வரும்?

காலங் காட்டா விடைநிலைகள் பெயர்ப் பகுபதங்களுக்கு வரும்.

உ-ம்.

அறிஞன் .. [ஞ இடைநிலை]

ஒதுவான் .. [வ இடைநிலை]

வலைச்சி .. [ச இடைநிலை]

வண்ணாத்தி .. [த இடைநிலை]

70. காலங்காட்டுமிடை நிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்? அவை எத்தனை வகைப்படும்?

காலங்காட்டுமிடை நிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.

அவை, இறந்தகால விடை நிலையும், நிகழ்கால விடை நிலையும், எதிர்கால விடை நிலையும் என, மூன்று வகைப்படும்.

71. இறந்தகால விடைநிலைகள் எவை?

இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம்.

உ-ம்.

செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.

சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.

72. நிகழ்கால விடைநிலைகள் எவை?

நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம்.

உ-ம்.

நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.

73. எதிர்கால விடைநிலைகள் எவை?

எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம்.

உ-ம்.

நடப்பான், செய்வான்.

எதிர்மறையிடைநிலை

74. எதிர்மறையிடைநிலைகள் எவை? ஏதிர்மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடதும், எங்கே கெட்டும் வரும்?

இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும்.

உ-ம்.

நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன்.

நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு.

காலங்காட்டும் விகுதி

75. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ? து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்? டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காலங் காட்டும்?

சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-

* து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.

உ-ம்.

வந்து, (=வந்தேன்), வந்தும், (=வந்தேம்) வருது, (=வருவேன்) வருதும், (=வருவேம்) எ-ம்.

சென்று, (=சென்றேன்) சென்றும், (=சென்றேம்) சேறு, (=செல்வேன்) சேறும், (=செல்வேம்) எ-ம். வரும்.

* கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.

உ-ம்.

உண்கு, (=உண்பேன்) உண்கும், (=உண்பேம்) என வரும்.

* டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.

உ-ம்.

உண்டு, (=உண்டேன்) உண்டும், (=உண்டேம்) என வரும்.

* என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதி நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.

உ-ம்.

(1). சேறி, (=செல்வாய்) (2) நடப்ப, (=நடப்பார்) நடமார், (=நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.

* என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங் காட்டும்.

உ-ம்.

உண்ணும்

எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.

காலங்காட்டும் பகுதி

76. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?

கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.

உ-ம்.

புக்கான், விட்டான், பெற்றான்.

சாரியை

77. சாரியைகளென்பன எவை?

சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.

உ-ம்.

நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின்(??) கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர் தாம், எல்லா நம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.

சந்தி

78. சந்திகளாவன எவை?

சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்படுவனவாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.

விகாரம்

79. விகாரங்களாவன எவை?

விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலுமாம்.

பதவியல் முற்றிற்று

Edited by தூயவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புணரியல்

80. புணர்ச்சியாவது யாது?

புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்று படப்புணர்வதாம்.

81. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.

82. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது?

வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.

உ-ம்.

வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி

மரம்வெட்டினான் .. [ஐ] மரத்தை வெட்டினான்

கல்லெறிந்தான் .. [ஆல்] கல்லாலெறிந்தான்

கொற்றன்மகன் .. [கு] கொற்றனுக்கு மகன்

மலைவீழருவி .. [இன்] மலையின் வீழருவி

சாத்தான்கை .. [அது] சாத்தனதுகை

மலைநெல் .. [கண்] மலையின்கணெல்

83. ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது? அது எத்தனை வகைப்படும்?

அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) கொல்யானை .. வினைத்தொகை

(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை

(3) மதிமுகம் .. உவமைத் தொகை

(4) இராப்பகல் .. உம்மைத் தொகை

(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்

(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்

(2) சாத்தவா .. விளித் தொடர்

(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்

(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்

(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்

(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்

(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்

(8) நனிபேதை .. உரிச்சொற்றொடர்

(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்

84. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்?

இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.

85. இயல்பு புணர்ச்சியாவது யாது?

இயல்பு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.

உ-ம்.

பொன்மணி சாத்தன்கை

86.விகாரப் புணர்ச்சியாவது யாது? விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.

உ-ம்.

வாழை + பழம் = வாழைப்பழம் தோன்றல்

மண் + குடம் = மட்குடம் திரிதல்

மரம் + வேர் = மரவேர் கெடுதல்

நிலம் + பனை = நிலப்பனை கெடுதல், தோன்றல்

பனை + காய் = பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்

87. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?

தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.

நல்ல பணி தூயவ நண்பரே!

ஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் இலக்கண சுருக்கமும் எழுதியுள்ளார்கள்.

நாவலர் ஐயா பற்றி சிறு குறிப்பு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர்.

அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர்.

அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதித்துப் பதிப்பித்தவை: 39; யாத்த பாடல்கள்: 14.

விவிலிய நூலுக்குச் சிறந்த மொழிப்பெயர்ப்பு செய்தது, திருக்குறள் பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தது, பெரிய புராண வசனம் எழுதியது அவருடைய பெருமைக்குச் சான்றுபகர்வன. அவர் இயற்றிய

சைவ வினா விடைI

சைவ வினா விடை II

பாலபாடம் I,II,III,IV

பெரியபுராணம் பிரபந்தத்திரட்டு I II

திருத்தொண்டர் புராண சூசனம்

இன்றும் போற்றப் படுபவையாகும்.

யாழ்ப்பாணத்திலும், சிதம்பரத்தில் மேலவீதியில், சைவப்பிரகாச வித்தியாசாலை (1864) (தற்போது மேல்நிலைப்பள்ளி) சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திர சாலை (1860) ஆகியவற்றை நிறுவியவர். சிதம்பரம் ஞானப்பிரகாசர் திருக்குளம் வடகரையில், அவருடைய விருப்பப்படி, சேக்கிழார் கோயில் நிறுவப்பட்டது (1890).

திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்களால் 'நாவலர்' பட்டம் பெற்றவர் (1865).

அவருடைய சமகாலச் சான்றோர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் சங்கரபண்டிதர், சிவசம்புப் புலவர், ராவ்பகதூர் சி.வை.தாமோதரம் பிள்ளை, விஸ்வநாதப் பிள்ளை, பர்சிவஸ்துரை; தமிழ்நாட்டில், சிதம்பரம் வடலூர் இராமலிங்க அடிகளார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாலிங்க அய்யர், இராமநாதபுரம் பொன்னுசாமிதேவர், அவருடைய மாணக்கர்களில் சிலர்: சதாசிவம் பிள்ளை (முதல் மாணாக்கர்), பொன்னம்பலம்பிள்ளை, செந்தில்நாத அய்யர், கைலாசப்பிள்ளை.

1879 டிசம்பர் 5ல் (பிரமாதி கார்த்திகை 21 மகம்) சிவப்பேறு பெற்றார்.

கன்னட நாட்டார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்(பெரியார்) தமிழை ஒழித்தது தான் அவர் செய்தது.

தமிழனை காட்டுமிராண்டி. என்று கூறியவர்.

பண்டைய தமிழ் எழுத்துக்களை எல்லாம் மாற்றி இன்றைய தமிழர்கள் பழைய எழுத்துக்களைப் படிக்க விடாமல் செய்தது தான் கன்னட நாட்டார் ஈ.வே.ரா செய்த தொண்டு!!!

ஆறுமுக நாவலரை ஈ.வே.ராவுடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்கும் உள்ள ஒப்பீடே ஆகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயங்கா எழுத்துக்கள்

88. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்? உடம்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ?

உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிரேற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.

உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.

89. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்?

மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.

90.லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?

மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-

கர கரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர கரங்களின் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா கரத்தின் முன்னே கரமும் கரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே கரமும் கரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே கரமல்லாத எட்டும் மயங்கா.

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்

91. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?

தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.

உ-ம்.

ஆண் 10 அழகு = ஆணழகு

மரம் 10 உண்டு = மரமுண்டு

92. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?

தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.

உ-ம்.

கல் + எறிந்தான் = கல்லெறிந்தான்

பொன் + அழகியது = பொன்னழகியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

93. இ, ஈ, ஐ ,எ, ஏம் மூன்றுயிற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?

இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.

உ-ம்.

கிளி+ அழகு = கிளியழகு

தீ + எரிந்தது = தீயெரிந்தது

பனை + ஓலை + பனையோலை

94. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்? கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ?

அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.

உ-ம்.

பல + அணி = பலவணி

பலா + இலை = பலாவிலை

திரு + அடி = திருவடி

பூ + அரும்பு = பூவரும்பு

நொ + அழகா = நொவ்வழகா

கோ + அழகு = கோவழகு

கௌ + அழகு = கௌவழகு

*கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.

உ-ம்.

கோ + இல் = கோயில்

ஒரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.

95.ஏகாரவுயிற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?

ஏகாரவுயிற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.

உ-ம்.

அவனே + அழகன் = அவனேயழகன்

சே + உழுதது = சேவுழுதது

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

96. குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்?

குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.

உ-ம்.

ஆடு + அரிது = ஆடரிது

நாகு + யாது = நாகியாது

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

93.முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா?

சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.

உ-ம்.

கதவு + அழகு = கதவழகு

கதவு + யாது = கதவியாது

எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்

98.எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்?

உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;

வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.

உ-ம்.

விள + ஞான்றது = விளஞான்றது

உரிஞ் + ஞான்றது = உரிஞ்ஞான்றது

விள + ஞாற்சி = விளஞாற்சி

உரிஞ் + ஞாற்சி = உரிஞ்ஞாற்சி

நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.

99. ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ?

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்.

உ-ம்.

மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்

செய் + நன்றி = செய்ந்நன்றி

கை + மாறு = கைம்மாறு

100. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ?

நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.

உ-ம்.

நொ + ஞௌ;ளா = நொஞ்ஞௌ;ளா

யவனா = நொய்யவனா

து + ஞௌளா =துஞ்ஞௌ;ளா

யுவனா = துய்யவனா

நோ - துன்பப்படு து- உண்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்

101 யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்?

யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.

உ-ம்.

வேள் + யாவன் = வேளியாவன்

மண் + யானை = மண்ணியானை

வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.

102. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?

தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.

உ-ம்.

வேய் + யாது = வேயாது

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல்

103. அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்? இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்?

அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.

உ-ம்.

அக்குதிரை, இக்குதிரை, உக்குதிரை, எக்குதிரை

அம்மலை, அம்மலை, உம்மலை, எம்மலை

அவ்வழி, இவ்வழி, உவ்வழி, எவ்வழி

அவ்யபனை, இவ்யானை, உவ்யானை, எவ்யானை

அவ்வுயிர், இவ்வுயிர், உவ்வுயிர், எவ்வுயிர்

104. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.

உ-ம்.

அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்

105. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்? இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ?

உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

நம்பிக்குறியன்

விடலைசிறியன்

செய்பெரியன்

அவர் தீயர் நம்பிக்கை

விடலை செவி

சேய்படை

அவர்தலை உயர்தினைப் பெயர்

சாத்திகுறியள்

சாத்திகுறிது சாத்திகால் பொதுப்பெயர்

தந்தைசிறியன்

தந்தைசிறிது தந்நைசெவி

தாய்பொடியாள்

தாய்கொடிது தாய்கை

ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது

நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்ககொள்க.

முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.

106. உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்? இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ?

உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

தேன்றல்குறியன்

அவள்சிறியள்

அவன்பெரியான் தோன்றல்கை

அவள்செவி

அவன்பொருள் உயர்திணைப் பெயர்

ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது.

தூங்கல் குறியன்

தூங்கல் குறிது தூங்கல் கை பொதுப் பெயர்

மக்கள் சிறியர்

மக்கள் சிறிய மக்கள் செவி

ஆண் பெரியன்

ஆண் பெரிது ஆண்புறம்

சாத்தன் சிறியன்

சாத்தன் சிறிது சாத்தன் செவி

உயர்திணைப் பெயராற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.

*லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்

107. எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமோ?

னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விருரழியுமெனும், விகாரப்படும்.

உ-ம்.

உம்மைத் தொகை

கபிலன் + பரணன் = கபிலபரணர்

இரு பெயரொட்டுப் பண்புத்தொகை

சிவன் + பெருமான் =சிவபெருமான்

முருகன் + கடவுள் = முருகக்கடவுள்

சதாசிவன் + நாவலன் = சதாசிவ நாவலன்

கந்தன் + வேள் = கந்தவேள்

வேலாயுதன் + உபாத்தியாயன் =வேலாயுதவுபாத்தியாயன்

தியாகராசர் + செட்டியர் = தியாகராசச் செட்டியர்

விநாயகர் + முதலியார் = விநாயகமுதலியார்

வேற்றுமைத் தொகை

குமரன் + கோட்டம் = குமரகோட்டம்,குமரக்கோட்டம்

வாணியர் + தெரு = வாணியத்தெரு

விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்

108. விளிப் பெயரற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயாரற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ?

விளிப்பெயாரற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாரற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.

உ-ம்.

புலவபாடு சாத்தா கேள்

நம்பிசெல் தம்பீ தா

வேந்து கூறு மகனே படி

விடலை போ நங்காய் பார்

நாய்கீர் சென்மின் நாய்காய் பார்

தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர்

ஆண் கேளாய் கோன் பேசாய்

விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்

109. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?

ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.

உ-ம்.

அவனா கொண்டான் அவனே சென்றான்

அவனோ தந்தான் யா பெரிய

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்

110. வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? வல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ? வன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ?

வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.

உ-ம்.தெரிநிலை வினைமுற்று

உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள்

வருதி சாத்தா வந்தனை சாத்தா

வந்தது புலி வந்தாய் பூதா

உண்டீர் தேவரே உண்டாhட தேவர்

உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி

வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன்

குறிப்பு வினைமுற்று

கரியன குதிரைகள் வில்லி சாத்தா

கரியது தகர் கரியை தேவா

கரியாய் சாத்தா கரியீர் சாத்தரே

கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

ஏவலொருமை வினைமுற்று

நட கொற்றா வா சாத்தா

எறி தேவா கொடு பூதா

ஓடு கொற்றா வெஃகு சாத்தா

பரசு தேவா நடத்து பு_தா

அஞ்சு கொற்றா எய்து சாத்தா

வனை தேவா செய்கொற்றா

சேர் சாத்தா வாழ் பூதா

நில் கொற்றா கேள் சாத்தா

உண் கொற்றா தின் சாத்தா

*நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம். நொக்கொற்றா துச்சாத்தா

வினைத்தொகை

விரிகதிர் ஈபொருள்

அடுகளிறு வனைகலம்

ஆடு பாம்பு அஃகுபிணி

பெருகுபுனல் ஈட்டுதனம்

விஞ்சுபுகழ் மல்கு சுடர்

உண்கலம் தின்பண்டம்

கொல்களிறு கொள்கலம்

செய்கடன் தேர்ப்பொருள்

வீழ்புனல்

ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க.

ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.

பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்

111. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகார விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.

உண்ட கொற்றன் கரிய டிகாற்றன்

உண்ணாத குதிரை இல்லாத குதிரை

உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை

வினைடியச்சத்தின் முன்வல்லினம் புணர்தல்

112. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்?

இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.

தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்

உண்ணாச்சென்றான் உண்ணாச் சென்றான்

உண்டெனப்பசி தீர்ந்தது உண்ணப் போனான்

மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்

உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்

அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செய்வான்

113.எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா?

இய, இயர், மே, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.

உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான்

உண்ணாமே போனான் உண்ணாமை போனான்

114. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? வன்றொடரழிந்த குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? துவ் விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

வன்றொடர்க்குற்றியலுகரவீற்ற

[quote name='தூயவன்'

நன்றி இப்படியெரு பதிவைதத்ததிற்கு நிண்டநாட்கள் ஆகிவிட்டது

தமிழ்இலக்கியத்தை பார்த்து மறந்தஇலக்கியத்தை மீண்டும் தொடவைத்ததிற்கு

நன்றிகள் தொடர்த்து எழுதவும் எம் போன்றவர்களுக்கு உதவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்

123 உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?

உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.

உ-ம்.

மா + காய் = மாங்காய்

விள + காய் = விளாங்காய்

124. இகர உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?

இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.

உ-ம்.

புளி + காய் = புளியங்காய்

புன்கு +காய் = புன்கங்காய்

ஆல் + காய் = ஆலங்காய்

125. ஐகாரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?

காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும்.

உ-ம்.

எலுமிச்சை + காய் = எலுமிச்சங்காய்

மாதுளை + காய் = மாதுளங்காய்

சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்

126. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?

ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா.

உ-ம்.

மகனொடு போனான் மகனோடு போனான்

தனது கை தனாது கை தன கைகள்

குற்றியலுகரவீறு

127. வன்றொடர்க்குற்றியலுகரவீற்ற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல்

142. ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற் பெயரும், ஏவல் வினை முற்றும், தம் முன் யகர மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புணரும்? முதனிலைத் தொழிற் பெயராவது யாது? இவ் வொட்டீற்றேவல் வினைகளுள்ளே, உகரச் சாரியை பெறாதும் நிற்பன உளவோ? பொருநுதல் என்பதற்குப் பொருள் என்ன? பொருந் என்பது தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ? நகரவீற்றுப் பெயர் பொருந் அன்றி வேறும் உண்டோ? வெரிந் என்பதற்குப் பொருள் என்னை? பொருந் என்னுஞ் சாதிப் பெயரும், வெரிந் என்னுஞ் சினைப் பெயரும், உகரச்சாரியை பெறவோ?

ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி

பொருநுவலிது பொருநுவன்மை

உரிஞகொற்றா

உண்ணுநாகா

பொருநுவளவா

*திரும், செல், வவ், துள், தின் முதலியனவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.

*முதனிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குறைந்தது. முதனிலை மாந்திர நின்று தொழிப்பெயர்ப் பொருளைத் தருவதாம்.

*இவ்வொட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண்கொற்றா, தின் சாத்தா, வெல்பூதா, தூள் வளவா என, ண, ன, ல, ள, என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும்.

*பொருநூதல் - மற்றொருவர்போல வேடங்கொள்ளுதல் பொருந் என்பது தொழிற்பெயராவதன்றிஅ த்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம்.

*பொருநூக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும் வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறுமெனவுங்கொள்க. வெரிந் - முதுகு.

கர கர வீற்றுப் புணர்ச்சி

143. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், இரு வழியும் எப்படிப் புணரும்? அல்வழியில் எவ்விடத்துந் திரியாவோ? வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாகவோ? ண ன வீறு இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையில் எவ்விடத்துந் திரிந்தே வருமோ?

ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயலபாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

மண்சிறிது மட்சாடி

மண்டீது மட்டூண்

பொன் குறிது பொற்கலம்

பொன்றீது பொற்றூண்

*கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.

*மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.

144. ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இரு வழியிலும் எப்படி புணரும்?

ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம். அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

மண்ஞான்றது மண்ஞாற்சி

மண்ணீன்டது மண்ணீட்சி

மண்வலிது மண்வன்மை

பொன்ஞான்றது பொன்ஞாற்சி

பொன்னீண்டது பொன்னீட்சி

பொன்வலிது பொன்வன்மை

145. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்களின் முன் நகரம் வந்தால், ணகர னகரம் இயல்பாகவே நிற்குமோ?

தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

தூணன்று தூணன்மை

அரணன்று அரணன்மை

வானன்று வானன்மை

செம்பொனன்று செம்பொனன்மை

146. எந்த மொழியினும் ணகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ? பாண் என்பதற்கு பொருள் என்னை? உமண் என்பதற்கு பொருள் என்னை? அமண் என்பதற்கு பொருள் என்னை?

பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.

உ-ம்.

பாண்குடி உமண்சேரி அமண்பாடி

பரண்கால் கவண்கால்

பாண் - பாடுதற்றொழிலுடையதொரு சாதி. உமண் - உப்பமைதற்றொழிலுடையதொரு சாதி. அமண் - அருகனை வழிபடுவதொரு கூட்டம்.

147. தன், என் என்பவற்றின் னகரம், வல்லினம் வரின் எப்படியாம்? நின் என்பது இப்படி வராதோ? இம் மூன்றிடத்து னகரமும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இவ்விதியே பெறுமோ?

தன், என், என்னும் விகார மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.

உ-ம்.

தன்பகை தற்பகை

என்பகை எற்பகை

நின்பகை

தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.

148. எந்த மொழியினும் னகரம், வவேற்றுமையிற்றிரிந்தே வருமொ? தேன் என்பதன் னகரம்,இயல்பாதலன்றி, வேறு விதி பெறாதோஃ மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?

குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.

உ-ம்.

குயின்கடுமை - தேன்பெருமை

ஊன்சிறுமை - மீன்கண்

எயின்குடி - மான்செவி

எகின்சிறுமை - மின்கடுமை

குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள்

தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரவீற்றுப் புணர்ச்சி

149. மகரத்தின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படி புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்து எப்படிப் புணரும்?

மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.

உ-ம்.

மரக்கோடு

நிலப்பரப்பு வேற்றுமை

வட்டக்கடல்

சதுரப்பலகை பண்புத்தொகை

கமலக்கண் உவமைத்தொகை

முரங்குறிது

யபங்கொடியேம் எழுவாய்

நிலந்தீ

பயங்காக உம்மைத்தொகை

செய்யுங்காரியம் பெயரெச்சம்

உண்ணுஞ்சோறு

தின்றனங்குறியேம் வினைமுற்று

சாத்தானுங்கொற்றனும்

பூதனுந் தேவனும் உம்மையிடைச் சொல்

*மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம்.

*தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.

150.தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் இரு வழியினும் வல்லெழுத்து வரின் எப்படியாம்?

தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

கங்குறிது கங்குறுமை

அஞ்சிறிது அச்சிறுமை

செங்கோழி நங்கை

தஞ்செவி

எந்தலை

151 மகரத்தின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படிப் புணரும்?

மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

மரஞான்றது மரஞாற்சி

மரநீண்டது மரமாட்சி

152. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின் எப்படியாம்?

தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.

உ-ம்.

அஞ்ஞானம் நுஞ்ஞானம்

எந்நூல் தந்நூல் நந்நூல்

153. மகரத்தின் முன் இரு வழியினும் உயிரும்; இடையினமும் வரின் எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும் எழாம் வேற்றுமை தொகையினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்? வினையாலனையும் பெயரின் ஈற்று மகரம் வேற்றுமையில் உருபும் இடையினமும் வாரிக்கொட்டே புணருமோ? வல்லினம் வரின் எப்படியாம்?

மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.

உ-ம்.

மரவடி

மரவேர் வேற்றுமை

வட்டவாழி

வட்டவடிவம் பண்புத்தொகை

பவளவிதழ்

பவளவாய் உவமைத்தொகை

மரமரிது

மரம்வலிது எழுவாய்

வலமிடம்

நிலம்வானம் உம்மைத்தொகை

உண்ணுமுணவு

ஆளும்வளவன் பெயரெச்சம்

உண்டனமடியேம்

உண்டனம்யாம் வினைமுற்று

அரசனுமமைச்சனும்

புலியும் யானையும் உம்மையிடைச்சொல்

*செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும்.

*வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.

லகர ளகர வீற்றுப் புணர்ச்சி

154. லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, எப்படியாம்?

லகர ளகரங்களில் முன் வல்லினம் வரின், வேற்றுமையிலும் அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், இறுதி லகரம் றகரமாகவும் ளகரம் டகரமாகவுந் திரியும். எழுவாய்த் தொடரினுலும் உம்மைத் தொகையிலுந் திரியாதியல்பாம்.

உ-ம்.

பாற்குடம் அருட்பெருமை - வேற்றுமை

வேற்படை அருட்செல்வம் - பண்புத்தொகை

வேற்கண் வாட்கண் - உவமைத் தொகை

குயில்கரிது பொருள் பெரிது - எழுவாய்

கால்கை பொருள்புகழ் - உம்மைத்தொகை

*பால் குடித்தான், அருள்பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால்குதித்தோடினான், வால்போழ்ந்திட்டான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து திரியாவெனக்கொள்க.

155. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒரு கால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்? எச் சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும்? உறழ்ச்சியாவது யாது? தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ?

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிலும், உம்மைதொகையிலும், ஒரு கால் இயல்பாகவும், ஒரு காற்திரியவும் பெறும்.

உ-ம்.

கல் குறிது

முள் சிறிது கற்குறிது

முட்சிறிது எழுவாய்

அல் பகல்

உள் புறம் அட்பகல்

உட்புறம் உண்மைத்தொகை

நொல், செல், கொள், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நெற்கடிது, செற்கடிது, கெற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த்தெர்டரிலும் உறழாது திரிதே வரும்.

செல் - மேகம், கொல் - கொல்லன்

*உறழ்ச்சியாவது ஒரு கால் இயல்பாகியும், ஒரு கால் விகாரப்பட்டும் வருதல். உறாழ்ச்சி எனினும், விகற்ப்ப வினுமெனினும் ஓங்கும்.

*கற்கரித்தான், கட்குடித்தான் எனத்தனிக் கூற்றெழுத்தை சார்ந்த ல ள க்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது. திரிந்தே நிற்கும்.

156. இரு வழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்?

அல்வழி வேற்றுமை இரண்டினும் லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும்.

உ-ம்.

அலவழி வேற்றுமை

கற்றீது கற்றீமை

முட்டீது முட்டீமை

157. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் றடக்களாதலன்றி வேறு திரிபு பெறுமோ?

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும்.

உ-ம்.

கற்றீது கஃறீது

முட்டீது முஃடீது

158. தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, கெடுதல் எங்கும் இல்லையோ? தனிக்குற்றெழுத்தைச் சாரத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்? லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ? உயர்திணைப்பெயரற்று லளக்கள் வேற்றுமையில் வருந் தகரந் திரிந்த விடத்து எப்படியாம்?

தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்து அல்வழியில், எழுவாய்த் தொடரிலும், விழித்தொடரிலும், உண்மைத் தொகையிலும், வினைமுற்றுத் தொடரிலும், வினைத்தொகையிலுந் கெடும்.

உ-ம்.

வேறீது வாடீது

தோன்றறீயன் வேடீயன் எழுவாய்த் தொடர்

தோன்றாறொடராய் வேடீயை - விளித்தொடர்

காறலை தாடலை - உம்மைத்தொகை

உண்பறமியேன் வந்தாடேவி - வினைமுற்றுத் தொடர்

பயிறோகை அருடேவன் - வினைத்தொகை

*குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையிலும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத்தொகையிலும் பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையிலும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கள் - மலை, தாரை - கண்

வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.

நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாய விடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.

159. லளக்களின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்?

லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி

வில் - வின்னீண்டது வின்னீட்சி

புல் - புன்டாண்டது புன்மாட்சி

முள் - முன்ஞெரிந்நது முண்ஞெரி

புள் - புண்ணீண்டது புண்ணீட்சி

கள் - கண்மாண்டது கண்மாட்சி

160. தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இரு வழியினும் வரும் நகரந் திரிந்த விடத்து, எப்படியாம்?

தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

வேனன்று வேனன்மை

பொருணன்று பொருணன்மை

161. லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின் எப்படியாம்?

லகர ளகரங்களின் முன் இடையினம் வரின், இரு வழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம்

உ-ம்.

அல்வழி வேற்றுமை

கல்யாது கலயாப்பு

விரல்வலிது விரல்வன்மை

முள்யாது முள்யாப்பு

வாள்வலிது வாள்வன்மை

வகரவீற்றுப் புணர்ச்சி

162. சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம் அல்வழியில் மூவின மெய்களும் வரின், எப்படியாம்?

அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வரும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்: மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்: இடையினம் வரின் இயல்பாகும்.

உ-ம்.

அஃகடியன இஃசிறியன உஃபெரியன

அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன

அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன

163. தெவ்வென்னுஞ் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், எப்படியாம்? மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ?

தெவ் என்னும் சொல்லீற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்: மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும்.

உ-ம்.

அல்வழி வேற்றுமை

தெவ்வுக் கடிது தெவ்வுக்கடுமை

தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி

தெவ்வுவந்தது தெவ்வுவன்மை

தெவ்வுமன்னர் தெவ்வுமுனை

தெம்மன்னர் தெம்முனை

எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்

164. எண்ணுப் பெயர் நிறைப்பெயர், அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின் எப்படியாம்?

உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணும் பெயர் நிறைப்பெயர் அளவுப்பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும்பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும்.

உ-ம்.

ஒன்றேகால் காலேகாணி

தொடியேகஃக கழஞ்சேகுன்றி

கலனேபதக்கு உழக்கேயாழாக்கு

ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச் சாரியை வராதொழியுமெனக் கொள்க.

இடைச் சொற்களின் முன் வல்லினம் புணர்தல்

165. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரம் வல்லினம் எப்படியாம்?

உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும்.

உ-ம்.

அம்ம - அம்மகொற்றா

அம்மா - அம்மாசாத்தா

மியா - கேண்மியாபூதா

என - பொள்ளெனப்புறம்வேரார்

இனி - இனிச்செய்வேன்

ஏ - அவனே கண்டான்

ஒ - அவனோ போனான்

166. படி என்னம் இடைச் சொல்லின் மன் வரம் வல்லினம் எப்படியாம்?

வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் ஒரு கால் மிக்கும், ஒரு கால் மிகாதும், வரும்.

உ-ம்.

வரும்படி சொன்னான்

அப்படிசெய்தான் அப்படிச்செய்தான்

எப்படிபேசினான் எப்படிப்பேசினான்

167.வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் டிப்படியாம்?

வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியாதியல்பாம்.

உ-ம்.

ஆன்கூற்று வண்டின்கால்

உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்

168. உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?

உயிரீற்றுச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.

உ-ம்.

தவ - தவப்பெரியான்

குழ - குழக்கன்று

கடி - கடிக்கமலம்

கடி - கடிகா

தட - தடக்கை

கம - கமஞ்சூல்

நனி - நனிபேதை

கழி - கழிகண்ணோட்டம்

உருபு புணர்ச்சி

174. வேற்றுவமயுருபுகள், நிலைமொழியோடும், வருமொழியோடும், எடிப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாவது யாது? உருபு புணர்ச்சியாவது யாது?

வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வருமொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட்புணர்ச்சிக்கு முற் கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்: சிறுபான்மை வேறுபட்டும் வரும்.

உ-ம்.

நம்பிக்கண் வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயாPற்று உயிர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா, என்றும், ணகரம் இடையினம் வரின் இறுவழியினும் இயல்பாம், என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.

உறிக்கட்டயிர்: இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப் பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.

நம்பிக்குப் பிள்ளை: இங்கே உயர்திணைப் பெயரற்று உயிர் முன் வேற்றுமை பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.

*இங்ஙனம் உருபு புணர்ச்சியானது பொருட்புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்து கொள்க.

*உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப்பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சி யாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக்கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்படட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சியாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விதியில்லா விகாரங்கள்

170.இப்படி விதியினால் விகாரப்பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ? அவை எத்தனை வகைப்படும்?

விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.

அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனிமொழியிலும் வரும்.

171. மருவி வழங்குதலாவது யாது?

மருவி வழங்குதலாவது, விதியின்றிப்பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல்.

உ-ம்.

அருமந்தன்னபிள்ளை - அருமருந்தபிள்ளை

பாண்டியனாடு - பாண்டி நாடு

சோழநாடு - சோணாடு

மலையமானாடு - மலாடு

தொண்டைமானாடு - தொண்டைநாடு

தஞ்சாவூர் - தஞ்சை

சென்னபுரி - சென்னை

குணக்குள்ளது - குணாது

தெற்குள்ளது - தெனாது

வடக்குள்ளது - வடாது

என்றந்தை - எந்தை

நுன்றந்தை - நுந்தை

172. ஒத்து நடத்தலாவது யாது?

ஒத்து நடத்தலாவது, ஒரேழுத்து நின்றவிடத்து அற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வருமாறு

அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்ற விடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்-

அகம் - அகன்

முகம் - முகன்

நிலம் - நிலன்

நலம் - நலன்

*மொழி முதலிடைகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

பசல்

மஞ்சு

மயல் பைசல்

மைஞ்சு

மையல் மொழி முதலில் ஒத்து நடந்தது

அமச்சு

இலஞ்சி

அரயர் அமைச்சு

இலைஞ்சி

அரையர் மொழியிடையில்

ஒத்து நடந்தது

*ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சில விடத்து ஐகாரத்தின் பின்னும், நகர நின்ற விடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

நண்டு

நெண்டு

நமன் ஞண்டு

ஞெண்டு

ஞமன் மொழி முதலில் ஒத்து நடந்தது

ஐந்நூறு

மைந்நின்ற கண் ஐஞ்ஞ10று

மைஞ்ஞின்ற கண் ஐகாரத்தின் பின்

ஒத்து நடந்தது

சேய்நலூர்

செய்நின்ற சேய்ஞலூர்

செய்ஞ்ஞின்ற நீலம் யகரத்தின் பின் ஒத்து நடந்தது

ஒரொவிடத்து அஃறிணைப் பெயராற்றில் லகர நின்ற வடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

சாம்பல் - சாம்பர்

பந்தல் - பந்தர்

குடல் - குடர்

*அஃறிணைப் பெயர்களுள், ஒரோவிடத்து மென்றொடர்க் குற்றுகரமொழிகளினிறுதி உகர நின்ற விடத்து அர் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

அரும்பு - அரும்பர்

கரும்பு - கரும்பர்

கொம்பு - கொம்பர்

வண்டு - வண்டர்

*ஒரோவழி லகர நின்ற விடத்து ளகரமும், ளகர நின்ற விடத்து லகரமும் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும்.

உ-ம்.

அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்

பொள்ளாமணி - பொல்லாமணி

173. தோன்றலாவது யாது?

தோன்றலாவது, எழுத்துஞ் சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம்.

உ-ம்.

யாது - யாவது

குன்றி - குன்றம்

செல் உழி - செல்வுழி

விண் அத்து - விண்வத்து

174. திரிதலாவது யாது?

திரிதலாவது, ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம்.

உ-ம்.

மாகி - மாசி

மழைபெயின் விளையும் - மழைபெயில் வியையும்

கண்ணகல் பரப்பு - கண்ணகன் பரப்பு

உயர்திணைமேலே - உயர்திணை மேன

175. கெடுதலாவது யாது?

கெடதலாலது உயிர்மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதலாம்.

உ-ம்.

யாவர் - யார்

யார் - ஆர்

யானை - ஆனை

யாடு - ஆடு

யாறு - ஆறு

*எவன் என்னும் குறிப்பு வினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை, என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.

176. நீளலாவது யாது?

நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம்.

உ-ம்.

பொழுது - போழ்து

பெயர் - பேர்

177. நிலை மாறுதலாவது யாது? இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ? சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?

நிலை மாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்ற நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம்.

உ-ம்.

வைசாகி - வைகாசி

நாளிகேரம் - நாரிகேளம்

மிஞிறு - ஞிமிறு

சிவிறி - விசிறி

தசை - சதை

*இந்நிலை மாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக்கும் உண்டு: அங்ஙனஞ் சொன்னிலை மாறி வழங்குவன இலக்கணப் போலி எனப் பெயர் பெறும்.

உ-ம்.

கண்மீ - மீகண்

நகர்ப்புறம் - புறநகர்

புறவுலா - உலாப்புறம்

இன்முன் - முன்றில்

பொதுவில் - பொதியில்

முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின.

புணரியல் முற்றிற்று

எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.