Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொன்றாக வேட்டையாடப்படும் 'காங்கிரஸ் தலைகள்'

Featured Replies

Untitled-1fgrrr.jpg?itok=NOsXlBh1

கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது.

இந்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் 21ம் திகதி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில்தான் சிக்கி உள்ளார்.

சிதம்பரம் தரப்பில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சி.பி.ஐ கேட்டபடி அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.சி.பி.ஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை சி.பி.ஐ போலவே அமுலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது. அமுலாக்கத் துறையும் சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது.

எனவே உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த முன்பிணை மனுவை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்பிணை என்பது அடிப்படை உரிமை கிடையாது என்றும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளது.

எனவே சி.பி.ஐ காவல் முடிவடைந்ததும், அமுலாக்கத் துறை தனது காவலில் சிதம்பரத்தை எடுத்து விசாரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரை மீண்டும் கைது செய்யத்தேவை இல்லை. அதற்குப் பதிலாக ஒரு சிறை 'வரண்ட்' பிறப்பித்து சிதம்பரத்தை சிறையில் அடைக்க அமுலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி சிதம்பரம் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுவரை இழுபறியாக இருந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு திடீரென வேகம் பிடித்து, அடுத்தடுத்து சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளார் சிதம்பரம். அனைத்து வாசல்களும் அவருக்கு அடைக்கப்பட்டுள்ளன. சிக்கலுக்கு மேல் சிக்கலில் சிக்கியுள்ளார் சிதம்பரம் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

இதுஇவ்விதமிருக்க, காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக வேட்டையாடப்படும் படலம் ஆரம்பித்து விட்டதாகவே இன்றைய நிலைமையை நோக்க முடிகிறது.

'நேஷனல் ஹெரால்ட்' வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் வரிசையாக கைது செய்யப்படப் போகிறார்கள் என்று தகவல்கள் இப்போது வெளிவருகின்றன.

பண மோசடி, வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காங்கிரஸ் மூத்த தலைவர் டி. கே. சிவகுமார் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அமுலாக்கத்துறை மூலம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிர்வரும் 13ம் திகதி வரை தடுப்புக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனத்தில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனம் மூலம் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும்2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்துக் காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 இலட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர்.ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012இ-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிதான் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக விரைவில் சி.பி.ஐ வழக்கு பதிய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.அதன்படி சி.பி.ஐ அல்லது அமுலாக்கத்துறை இரண்டும் ராகுல் மற்றும் சோனியா மீது வழக்குப் பதியலாம். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முயற்சி செய்யலாம் என்று சட்டத்துறையினர் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருவதால் இதுவும் விரைவில் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே சோனியா மற்றும் ராகுல் காந்தி தரப்பு தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எதிர்வரும் நாட்களில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு எதிரான கைது படலத்தின் ஒரு அங்கமாக கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் அமுலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டு அடுத்த சில நாட்களிலேயே கைது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள மற்றொரு பெரிய தலைவராக டி.கே.சிவகுமார் உள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவரை அமுலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர். இதையடுத்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி நேற்றுமுன்தினம் கர்நாடகத்தில் பந்த் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தது. இந்த நிலையில், டெல்லியில் நேற்றுமுன்தினம் சிவகுமாரை அமுலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிவகுமாருக்கு 10 நாட்கள் தடுப்புக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

"நாட்டின் சட்டத்தை விட, அரசியல் பழிவாங்கல் அதிக வலிமையானது" என்று சிவகுமார் கூறியுள்ளார்.

அமுலாக்கத்துறையினர் கைது செய்த சில நிமிடங்களில்,"பா.ஜ.க நண்பர்கள் என்னை கைது செய்வதில் வெற்றி பெற்று.விட்டார்கள்" என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சிவகுமார் பா.ஜ.கவுக்கு செல்ல மறுத்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடகத்தில் பந்த் போராட்டத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

https://www.thinakaran.lk/2019/09/06/கட்டுரைகள்/39887/ஒவ்வொன்றாக-வேட்டையாடப்படும்-காங்கிரஸ்-தலைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.