Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: முழுமையாக விசாரிக்க ஆஸி. நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ்க் குடும்பம் நாடுகடத்தல் விவகாரம்: முழுமையாக விசாரிக்க ஆஸி. நீதிமன்றம் உத்தரவு

அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார். 

பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதை நிராகரித்துள்ள பிரியா, “இது சுத்தப் பொய். நாங்கள் தடுப்பு முகாமிற்குள் தான் வைக்கப்பட்டுள்ளோம். தடுப்புச்சுவரைத் தாண்டி வெளியே வர எங்களுக்கு அனுமதியில்லை,” எனத் தெரிவித்துள்ளார். 

59682616_2359056400820686_45143166230410

கடந்த 2012 இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள்(கோபிகா, தருணிகா) பிறந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்தனர். 

கடந்த மார்ச் 2018இல் விசா காலாவதியாகியதாக  கைது செய்யப்பட்ட இவர்கள் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

அதே சமயம், பிரியா- நடசேலிங்கம் குடும்பத்தை நாடுகடத்துவதில் அவுஸ்திரேலிய அரசு உறுதியாக இருந்து வருகின்றது. 

அவுஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளை காரணம் காட்டி அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க பிரியா- நடசேலிங்கம் முயற்சிப்பதாக பீட்டர் டட்டன் விமர்சித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

 

https://www.virakesari.lk/article/65175

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.