Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்ற உத்தரவு மீறல்களுக்கு முற்றுப்புள்ளி அவசியம் : சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற உத்தரவு மீறல்களுக்கு முற்றுப்புள்ளி அவசியம் : சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்

செம்­மலை விகா­ரா­தி­ப­தியின் பூத­வு­டலை தகனம் செய்­வது குறித்த நீதி­மன்ற உத்­த­ரவு கால­தா­ம­த­மா­கி­யது என ஞான­சா­ர­தேரர் உள்­ளிட்­ட­வர்கள் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று குறிப்­பிட்ட சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் நீதி­மன்ற உத்­த­ரவு மீறப்­பட்­ட­மைக்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டாது விட்டால் விமர்­ச­னங்­களைக் கொண்­டி­ருக்கும் இலங்கை நீதித்­து­றையின் மீதான முழு­மை­யான நம்­பிக்­கையை மக்கள் இழப்­ப­தற்கு வழி­யேற்­ப­டுத்தும் என்றும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

முல்­லைத்­தீவு பழைய செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் விகா­ர­ாதி­ப­தியின் பூத­வுடல் தகனம் செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ரவு மீறப்­பட்­டமை மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரால் தாக்­கப்­பட்­ட­மையை அடுத்து வடக்கு, கிழக்கு சட்­டத்­த­ர­ணிகள் மேற்­கொண்­டு­வரும் பணிப்­பு­றக்­க­ணிப்பு உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து மனு­தா­ரர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்டுக்கு கருத்­து­களைப் பகிர்ந்து கொண்­ட­போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவை வரு­மாறு,

virakesari.jpg

நீதி­மன்று விடுத்த முதற்­கட்­டளை

செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய வளா­கத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த விகா­ரையின், விகா­ரா­தி­பதி கொலம்பே மேதா­லங்­கா­ர தேரரின் பூத­வு­டலை இறுதி மரி­யா­தை­க­ளுக்­காக ஆலய வளா­கத்­தினுள் கொண்­டு­வ­ரக்­ கூ­டாது என்றும் அவ்­வாறு கொண்டு வரப்­பட்டால் இனங்­க­ளுக்­கி­டையில் பதற்றம் ஏற்­படும் ஆபத்­துள்­ள­தா­கவும், இந்­து­ச­மய பாரம்­ப­ரி­யங்கள் மீறப்­படும் என்­பதை சுட்­டிக்­காட்­டியும்  நீதி­மன்றம் அந்­ந­ட­வ­டிக்­கைக்கு தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்க வேண்டும் என்றும் ஆலய பரி­பா­லன சபை மற்றும் தமிழ் மக்கள் மர­பு­ரிமை தரப்­பினர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

விடு­முறை தின­மா­கி­யதால் பதில் நீதிவான் ஏ.எம்.சுதர்­சனின் கவ­னத்­திற்கு வழக்கு இலக்கம் ஏஆர் 745/2019 கொண்ட மனு கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன்­போது,  '23ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை 9மணிக்கு மனு­தா­ரர்­களும், பிர­தி­வா­தி­களும் முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு ஆஜ­ராக வேண்டும். 

நீதி­மன்றம் கட்­ட­ளை­யொன்றை அறி­விக்கும் வரையில் கொலம்பே மேதா­லங்­கா­ர தேரரின் பூத­வு­டலை இப்­பூ­மியில் புதைப்­பதோ எரிப்­பதோ கூடாது. கட்­டளை அறி­விக்கும் வரையில் இரு­த­ரப்­பி­னரும் இப்­பூ­மியில் சமா­தா­னத்­திற்கு பங்கம் ஏற்­படும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது. 

அத்­துடன் கோயில் மற்றும் விகா­ரையின் வழி­பா­டு­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தாத வகையில் இருக்க வேண்டும். பொலிஸார் சமா­த­ானக்­கு­லைவு ஏற்­ப­டாத வகையில் பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்­ப­துடன் இந்தக் கட்­டளை இரு­த­ரப்­பி­ன­ருக்கும் கைய­ளிக்­கப்­பட வேண்டும். அத்­துடன் குறித்த வளா­கத்தில் இந்த கட்­டளை பகி­ரங்­க­மாக ஒட்­டப்­பட வேண்டும் என்றும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

பிர­தேச சபையின் எழுத்­து­மூல அறி­விப்பு

மயா­னங்கள் மற்றும் இடு­காடு கட்­ட­ளைகள் சட்­டத்­திற்கு ஏற்­ப கடந்த 22ஆம் திகதி, இடு­கா­டுகள் தவிர்ந்த ஏனைய பகு­தி­களில் சபையின் அனு­ம­தி­யின்றி எந்­த­வொரு பூத­வு­ட­லையும் புதைப்­ப­தற்கோ அல்­லது எரிப்­ப­தற்கோ அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் அதற்கு சபையின் அனு­மதி அவ­சியம் என்றும் இந்த விட­யத்தில் பொலிஸார் அவ­தானம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­திய எழுத்­து­மூல ஆவணம் கரைத்­து­ரைப்­பற்று பிரதேச சபையால் முல்­லைத்­தீவு பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, மாவட்ட செய­லாளர், கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச செய­லாளர், செம்­மலை கிழக்கு கிராம அலு­வலர் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

வழக்கு விசா­ர­ணையும் உட­னடி உத்­த­ரவும்

இந்­நி­லையில் 23ஆம் திகதி இந்த வழக்கு விசா­ரணை முல்லை மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதில் மனு­தா­ரர்கள் சார்பில் எனது தலை­மை­யி­லான சட்­டத்­த­ர­ணி­களும், பௌத்த தேரர்கள் சார்பில் சட்­டத்­த­ரணி தல்­பா­வில தலை­மை­யி­லான குழு­வி­னரும், பிர­தே­ச­சபை சார்பில் சட்டத்­த­ரணி இளங்­கு­ம­ரனும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இதன்­போது பௌத்த தேரர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள், விகா­ரா­தி­ப­தியின் உடலை விகா­ரைக்கு அண்­மை­யி­லேயே எரிப்­ப­தற்கு அனு­மதி கோரி­வா­திட்­டார்கள்.

இந்து சமய முறைப்­படி இறந்­த­வரின் உடலை ஆல­யத்­தினுள் கொண்­டு­வ­ர­ மு­டி­யாது. அதனை மீறும் வகையில் தேரரின் உடல் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அது தவ­றா­ன­தாகும். விகா­ரா­தி­ப­தியின் உடலை பிறி­தொரு இடத்தில் தகனம் செய்­வ­தற்கு நீதி­மன்றம் கட்­ட­ளையை பிறப்­பிக்க வேண்டும் என்று எமது தரப்பில் எதிர்த்து வாதி­டப்­பட்­டது.

அத்­துடன் கரைத்­து­ரைப்­பற்று பிர­தேச சபைக்கே இடு­கா­டுகள் மயா­னங்கள் கட்­ட­ளைகள் சட்­டத்தின் பிர­காரம் பூத­வு­டலை தகனம் செய்­வது குறித்து தீர்­மா­னிக்கும் அதி­காரம் இருப்­ப­தா­கவும் நீதி­மன்றம் இதில் உத்­த­ர­வி­ட­மு­டி­யாது என்றும் மன்றின் கவ­னத்­திற்கு எடுத்துக் கூறப்­பட்­டது.

இந்த விடயம் இன, மத ரீதி­யான உணர்வு பூர்­வ­மான விட­ய­மா­கையால் சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக இணக்கம் காண்­ப­தற்கு மன்று ஒத்­தி­வைக்­கப்­பட்டு 15நிமி­டங்கள் வழங்­கப்­பட்­டது. அத­னடிப்­ப­டையில் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்­திற்கு எதிரில் உள்ள இரா­ணுவ முகா­மிற்கு பின்னால் உள்ள கடற்­கரை பகு­தியில் தகனம் செய்­வ­தற்கு பிர­தி­வா­திகள் தரப்பில் அனு­மதி கோரப்­பட்­டது. 

அதன்­போது, அவ்­வாறு தகனம் செய்­யப்­ப­டு­கின்­ற­போது அந்த நிலத்­தினை தேரர்கள் எதிர்­கா­லத்தில் உரிமை கோரு­வ­தோடு நினை­வுச்­சி­லை­களை அமைப்­ப­தற்கும் முயல்­வார்கள். அம்­மு­யற்­சிகள் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாம் சுட்­டிக்­காட்டி எதிர்ப்­பினை வெளி­யிட்டோம்.

இவற்றை கவ­னத்தில் கொண்ட மன்று, குறித்த கடற்­க­ரைப்­ப­கு­தியில் உடலை தகனம் செய்ய முடியும் என்றும் அதன் பின்னர் அந்­நி­லத்­திற்கு யாரும் உரிமை கோர­மு­டி­யாது என்றும் அதில் எவ்­வி­த­மான கட்­டு­மா­னங்­களையும் செய்ய முடி­யாது என்றும் குறிப்பிட்டது. 

அத்­துடன் கடற்­க­ரையில் எப்­ப­கு­தியில் தகனம் செய்­வது என்­பதை இரு­த­ரப்­பினர் மற்றும் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் தலா இருவர் பங்­கேற்று பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு இடத்­தினை நேர­டி­யாகச் சென்று அடை­யா­ள­மிட வேண்டும் என்றும் மன்று கூறி­யது. அத்­துடன் முல்­லைத்­தீவு மாவட்ட பொலிஸ் தலைமை பொறுப்­ப­தி­கா­ரிக்கு இந்த விட­யத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

உதா­சீனம் செய்­யப்­பட்ட நீதி­மன்ற உத்­த­ரவு

மன்றின் உத்­த­ரவின் பிர­காரம், சட்­டத்­த­ர­ணி­க­ளான கன­ரத்­தினம் சுகாஸ், கணேஸ்­வரன், மணி­வண்ணன் ஆகி­யோரும் ஆலய நிரு­வா­கத்­தினர் மற்றும் தமிழர் மர­பு­ரிமை பேர­வையின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்­ட­வர்கள் தகனம் செய்­வ­தற்­கான இடத்­தினைக் காண்­பிப்­ப­தற்­காக சென்­ற­போது நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆலய கேணிக்கு அருகில் பெருந்­தி­ர­ளான பெரும்­பான்மை மக்கள் சூழ பௌத்த தேரர்கள் உயி­ரி­ழந்த விகா­ரா­தி­ப­தியின் பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்­கான சிதையை தயார் செய்­தி­ருந்­தனர்.

நீதி­மன்ற உத்­த­ரவை அவர்­க­ளி­டத்தில் கூறச்­சென்ற சட்­டத்­த­ர­ணி­களை தாக்­கி­ய தோடு பொலி­ஸாரும் அப்­ப­கு­திக்கு அருகில் செல்­வ­தற்கு இட­ம­ளிக்­காது தடுத்­தி­ருந்­தார்கள். நீதி­மன்ற கட்­ட­ளையை அங்­கி­ருந்த பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கு கூறி­ய­போதும் அவர்கள் கருத்­தி­லெ­டுக்­காது செயற்­பட்­டி­ருந்­தார்கள்.

சட்­டத்­த­ர­ணி­களின் அடுத்த கட்ட நகர்வு

நீதி­மன்ற உத்­த­ரவு மீறப்­பட்­டமை, சட்­டத்­த­ர­ணிகள் தாக்­கப்­பட்­ட­மையை கண்­டித்து வடக்கு கிழக்கில் மறு­தி­ன­மான 24ஆம் திகதி சட்­டத்­த­ர­ணிகள் பணிப்­பு­றக்­க­ணிப்பில் ஈடு­பட்­ட­தோடு வாய்­களை கறுப்­புத்­து­ணியால் கட்டி போராட்­டத்­தி­னையும் நடத்­தி­னார்கள். அத்துடன் வடக்கு மாகாண சட்­டத்­த­ர­ணிகள் தொடர்ச்­சி­யாக மூன்று நாட்கள் பணிப்­பு­றக்­க­ணிப்­பிலும் போராட்­டத்­திலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­காக முல்­லைத்­தீவு நீதி­மன்ற வளா­கத்தில் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யா­டிய நாம் சில தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளோம். அதற்­க­மை­வாக கடந்த 21ஆம் திகதி நீரா­வி­யடிப் பிள்­ளையார் கோவி­ல­ருகே இடம்­பெற்ற சம்­பவம் மற்றும் அதன் பிற்­பாடு இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­திற்கும் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கும் மனித உரி­மைகள் பேர­வைக்கும் முறை­யிட்­டுள்ளோம்.

அத்­துடன் சட்­டத்­த­ர­ணிகள் சில விட­யங்­களை பெரி­தாக்­கு­கின்­றனர் என தென்­னி­லங்கை ஊட­கங்­க­ளிலே வெளி­யி­டப்­படும் செய்­தி­க­ளுக்கு உரிய பதி­ல­றிக்கை வழங்­கு­வது என்று தீர்­மா­னித்­துள்ளோம். நீதி­மன்றின் கட்­ட­ளையை அவ­ம­தித்து செயற்­பட்­டமை தொடர்­பாக ஞான­சார தேரர் மற்றும் அவர் சார்ந்த தரப்­பு­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டு­மென சட்ட மா அதிபர் எழுத்­து­மூல உறுதி வழங்­க­வேண்டும். சட்ட மா அதிபர் எழுத்­து­மூல உறு­தி­மொ­ழியை வழங்­கா­விடின் சேவைப் புறக்­க­ணிப்பை தொடர்­வது குறித்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் என்றும் தீர்­மா­னித்­துள்ளோம்.

பிர­தி­வா­திகள் அறி­ய­வில்­லையா?

விகா­ரா­தி­ப­தியின் உடலை தகனம் செய்­வ­தற்­கான நீதி­மன்ற உத்­த­ரவு கிடைக்­க­வில்லை என்று கூற­மு­டி­யாது. காரணம், 22ஆம் திக­தியே பதில் நீதிவான் கட்­ட­ளையை பிறப்­பித்­துள்ளார். அதே­நேரம் 23ஆம் திகதி உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­போது அவர்­க­ளது சட்­டத்­த­ர­ணி­களும் இருந்துள்ளனர். ஞானசார தேரரோ அவரது தரப்பினரோ உத்தரவு கிடைக்கப்படவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீதித்துறையின் மீதான விமர்சனம்

இலங்கை நீதித்துறையில் சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமன் எனக்கொள்ளப்படுகின்றது. நீதிமன்றத்தீர்ப்புக்கள் தவறாக இருந்தால் அதற்கு எதிராக மேன்முறையீடுகளைச் செய்யமுடியும்.ஆனால் வழங்கப்படும் தீர்ப்புக்களை ஏற்காது மறுக்க முடியாது. இதில் ஒரு தரப்பினர் உத்தரவை ஏற்க முடியாது என்றும் கூறமுடியாது. நீதிமன்ற உத்தரவை அமுலாக்க வேண்டிய பொலிஸார் அதிலிருந்து தவறியிருக்கின்றார்கள்.

இந்த விடயத்திற்கு நீதிக் கட்டமைப்பில் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் நாளை நாடளாவிய ரீதியில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் ஏற்படும். அவ்வாறான நிலைமை விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இலங்கை நீதித்துறையின் மீதான முழுமையான நம்பிக்கையை மக்கள் இழப்பதற்கு வழியேற்படுத்தும். 

ஆகவே நீதிமன்ற உத்தரவை மீறிய இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே எதிர்வரும்காலத்தில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த முடியும். இதனை அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும். 

 ஆர்.ராம்

 

 

https://www.virakesari.lk/article/65820

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.