Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் காரணத்தை வெளியிட்டார் ஹிஸ்புல்லாஹ்

Featured Replies

நான் யாரு­டைய முக­வ­ரா­கவும் இந்த தேர்­தலில் போட்­டி­யிடவில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் முக­வ­ராக மாத்­தி­ரம்தான் போட்­டி­யி­டு­கின்றேன் என ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளு­ந­ரு­மான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

 காத்­தான்­கு­டியில் தனது முத­லா­வது பிர­சாரக் கூட்­டத்தை கடந்த வெள்ளிக்­கி­ழமை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

காத்­தான்­குடி நகரசபை தவி­சாளர் எஸ்.எச்.அஸ்பர் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் தொடர்ந்­தும் உ­ரை­யாற்­றிய அவர், இன்று எந்த நேரமும் எனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. நான் படு­கொலை செய்­யப்­பட்டால் தேர்தல் சட்­டத்தின் படி உட­ன­டி­யாக இன்­னொரு வேட்­பா­ளரை நிறுத்தி இந்­தப்­ பு­னித போராட்­டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியும்.

Hizbullah.jpg

நான் எந்த நேரமும் மர­ணிக்­கப்­ப­டலாம்.எந்த நேரமும் படு­கொலை செய்­யப்­படலாம். என்னை படு­கொலை செய்­வ­தற்­காக சர்­வ­தேச சக்­திகள்  பின் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் சமு­தாயம் சிந்­திக்க வேண்டும்.அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் உட்­பட முஸ்லிம் அமைச்­சர்­களே உங்­க­ளு­டைய இத­யத்தின் மீது கையை வைத்து சிந்­தி­யுங்கள்.

நாங்கள் முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்ற இந்த தேர்­த­லுக்­குப்­ பின்னால் வரப் போகின்ற காலம் எவ்­வா­றான பயங்­க­ர­மான காலம். சகல சட்­டங்­க­ளையும் சகல அதி­கா­ரங்­க­ளையும் பறிக்கச் செய்து வெறு­மனே அடி­மைச்­ச­மூ­க­மாக மாற்ற வேண்­டு­மென்று திட்­ட­மி­டு­கின்ற அத்­தனை எதி­ரி­களும் இரண்டு முகாம்­க­ளிலும் இருக்­கின்­றார்கள்.

வெறும் ஒரு அமைச்­ச­ராக நானும் நீங்­களும் இருந்து ஆமா சாமி போட முடி­யுமே தவிர வேறு எதையும் செய்ய முடி­யாது. கடந்த ஐந்து ஆண்­டுகள் ஆமா சாமி போட்டு முஸ்லிம் சமு­தா­யத்தை இன்று வீதிக்கு கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்றோம். இவ்­வா­றான ஆமா சாமி போடு­கின்ற சமு­தா­ய­மாக நாம் இருக்க முடி­யுமே தவிர இந்த சமு­தா­யத்­துக்­காக பேசு­கின்ற இந்த சமு­தா­யத்­துக்கு வரு­கின்ற தடை­களை உடைத்­தெ­றி­கின்ற தகர்க்­கின்ற ஒரு சக்­தி­யாக நாங்கள் இருக்க முடி­யாது.

என்னை பொறுத்­த­வரை நான் 2000ஆம் ஆண்டே உயி­ரி­ழந்து விட்டேன். அதன் பின்­ன­ரான ஒவ்­வொரு நாட்­களும் எனக்கு போனஸ் போன்­ற­துதான். நான் யாருக்கும் அஞ்­சு­ப­வ­னு­மில்லை, அஞ்­சு­வ­து­மில்லை. அஞ்­சப்­போ­வ­து­மில்லை.

எனது பல்­கலைக்கழ­கத்தை அல்லாஹ் பாது­காப்பான். அதனை பாது­காக்க இங்கு நான் போட்­டி­யி­ட­வில்லை.

முஸ்லிம் சமூ­கத்தை பாது­காக்­கவே நான் போட்­டி­யி­டு­கி­றேன். இன்னும் 25 ஆண்­டு­க­ளுக்கு முஸ்­லிம்கள் இந்த நாட்டில் நிம்­ம­தி­யாக வாழ வேண்டும், அதற்­கான நிரலை நான் தயா­ரித்­துள்ளேன்.

இந்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­களில் மிக மூத்­தவன் நான் தான். நான் யாரு­டைய முக­வரும் அல்ல. நான் முஸ்­லிம்­களின் முகவர் மாத்­தி­ர­மே­யாகும். ஜனா­தி­ப­தி­யாகும் எண்ணம் ஒன்றும் எனக்­கில்லை அந்­த­ள­வுக்கு நான் முட்டாள் இல்லை.

எனவே தான் முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கும் வெற்றி பெறும் ஜனாதிபதி வேட்பாளருக்கே நாம் ஆதரவு வழங்குவோம்.

நான் ஜனாதிபதியாகும் வேட்பாளர் இல்லை. வெற்றி பெறும் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66848

  • தொடங்கியவர்

இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா :  ரவூப் ஹக்கீம் காட்டம்

இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது.

இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கப் போகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முழுநாடும், ஏன் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது.

 இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்து, பலமானதொரு செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சொன்னோம்.

 அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழலில், தன்னையும் தனது சுயநலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு சமூகத்தையும் அடகுவைக்கின்ற வங்குரோத்து அரசியல் மிகவும் ஆபத்தானது.

அவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்டன. அவரது பல்கலைக்கழக விவகாரத்துக்கும் டொக்டர் ஷாபியின் விவகாரத்துக்கும் நாங்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. இரண்டையும் இனவாத பிரச்சினைகளாகவே நோக்கினோம். அவரையும் பாதிக்காமல், சமூகத்தையும் பாதிக்கமால், இனவாதிகளுக்கு தீனியும்போடாமல் நாங்கள் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டோம்.

முஸ்லிம்களின் வாக்குகளை பகல் கொள்ளையிட்டு எதிரணி வேட்பாளர்களின் காலடியில் கொண்டுபோய் கொட்டுவதை காத்தான்குடி மக்களோ அல்லது நாட்டு முஸ்லிம்களோ அனுமதிக்கமாட்டார்கள்.

 நாங்கள் அமைச்சு பதவிகளைத் துறந்து, இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்கு ஆறுதல் கொடுத்தோம். ஆனாலும், அவருடைய பக்குவமில்லாத செயற்பாடுகள் பிரச்சினைகளை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66850

  • தொடங்கியவர்

‘சமூகத்தைப் பாதுகாக்கவே கோட்டாவுக்கு ஆதரவு’

பெரும்பான்மைச் சமூகம் விரும்பும் தலைமைக்கு எதிராக  முஸ்லிம்கள் செயற்படுவது குறிப்பாக, தென்  இலங்கை முஸ்லிம்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமென்ற பீதியைப் போக்கவே,  கோட்டாபய  ராஜபக்‌ஷவை ஆதரிக்கத் தீர்மானித்தாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா  தெரிவித்தார்.

ராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகச்  சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,  'முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை' என்றார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/சமகததப-பதகககவ-கடடவகக-ஆதரவ/175-239992

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.