Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கிய விவகாரம்: 16 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட

Featured Replies

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில்  முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவை 16 ஆவது சந்தேக நபராக சி.ஐ.டி. இன்று பெயரிட்டது. 

CID.jpg

வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த நிலையிலேயே இன்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சி.ஐ.டி. இவ்வாறு அவரை 16 ஆவது சந்தேக நபராக பெயரிட்டது.

இன்றைய தினம் இது குறித்த வழக்கு விசாரணைகளை இடையீட்டு மனுவூடாக சி.ஐ.டி.யால்  விசாரணைக்கு எடுக்க கோரப்பட்டது. அதன்படி அவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர்  நிசாந்த சில்வா,  வசந்த கரன்னாகொடவை இந்த விவகாரத்தில் 16 ஆவது சந்தேக நபராக  பெயரிட கோரினார். 

அத்துடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பிரகாரம்,  அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாரும் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோரினார்.

சந்தேக நபராக வசந்த கரன்னாகொடவை பெயரிட அனுமதியளித்த நீதிவான்,  அவரை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிப்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியொருவர்‍ ஊடாக  மன்றுக்கு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/66955

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர்  தடுத்து வைக்கப்பட்ட இடத்தில் கொல்லப்பட்டனரா? ; கன்சைட் முகாமை சல்லடை போடும் வைத்திய பகுப்பாய்வுக் குழு

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாம்  நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை பூரணமாக விஷேட வைத்திய பகுப்பாய்வுக் குழுவினரால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.  

இதற்கான அனுமதியை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க சி.ஐ.டி.எனும் குற்றப் புலனயவுப் பிரிவுக்கு இன்றுவழங்கினார். 

அத்துடன் இந்த பகுப்பாய்வு நடவடிக்கைகளின் போது  பகுப்பாய்வு வைத்திய குழுவுக்கு மேலதிகமாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும்  பொலிஸ் ஸ்தல பகுப்பாய்வுப் பிரிவினரும் குறித்த நடவடிக்கைகளின் போது உதவ நீதிவான் அனுமதியளித்தார்.

கன்சைட் எனும் குறித்த வதை முகாமில் கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அங்கு  அப்போது கடமையாற்றிய லெப்டினன் கொமாண்டர் வெலகெதர, பொலித்தீன் உரைகளில் சுற்றப்பட்ட சடலங்களை கெப் ரக வாகனம் ஒன்றில் ஏற்றுவதை தான் கண்டதாக சுட்டிக்காட்டி அளித்த வாக்கு மூலம் மற்றும், கடத்தப்பட்டோரில் அடங்கும் ரஜீவ் நாகநாதன்  தனது தயாருக்கு  தொலைபேசியில்  கூறிய அவ்விடத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையிலான இளைஞர் யுவதிகள் அழைத்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவதான் தகவல் தொடர்பிலும் அறிவியல் சான்றுகளை கண்டறியும் நோக்கில் இந்த வைத்திய பகுப்பாய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

https://www.virakesari.lk/article/68381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.