Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் சீருடை, பகல் உணவு மீண்டும் ஆரம்பிப்பேன்

Featured Replies

Tuesday, October 15, 2019 - 8:58am
5622634ef28273566abb3f639e6e3780_XL.jpg?

கடந்த அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் போசணைமிக்க பகல் உணவை தாம் ஜனாதிபதியானதும் நாட்டின் சகல பாடசாலைகளிலுமுள்ள மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை மற்றும் பகலுணவு வழங்கும் திட்டத்தை கடந்த அரசாங்கம் நிறுத்தியதாக குறிப்பிட்ட அவர், அதனை தாம் மீண்டும் வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.  

பலாங்கொடை நகரில் நேற்று (14) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ரணசிங்க பிரேமதாச அன்று இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதற்காக வருகை தந்தபோது அங்கு கிழிந்த பாடசாலை சீருடைகளை அணிந்து சென்ற சிறுவர்களை கண்டு தாம் இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடையையும் பகலுணவையும் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.  

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுத்த சீருடையும் பகலுணவும் தற்போது நடைமுறையிலில்லை.  

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் அதனை இல்லாமற் செய்தனர். எமது நாட்டின் பெறுமதியான சொத்து எதிர்கால சந்ததியே.  

இந்த நிலையில் நான் மக்களுக்கு மிகவும் பொறுப்புடன் கூற விரும்புவது நான் ஜனாதிபதியானவுடன் இரண்டு சீருடைகளையும் பகலுணவையும் சகல பாடசாலை மாணவர்களுக்கும் வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

மேற்படி நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சர்வதேச வர்த்தக விவகார பிரதியமைச்சர் நளின் பண்டார உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். (ஸ)

https://www.thinakaran.lk/2019/10/15/அரசியல்/42082/மாணவர்-சீருடை-பகல்-உணவு-மீண்டும்-ஆரம்பிப்பேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.