Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பர­க­சி­ய­மா­கி­யுள்­ள இர­க­சி­ய உறவு: இ.தொ.கா.வின் ஆத­ரவு தொடர்பில் அமைச்சர் மனோ பரி­காசம்

Featured Replies

IMAGE-MIX.png
 

சஜித்தே அனைத்து இனத்­த­வ­ரையும் இலங்­கை­ய­ராக கரு­து­கிறார்

ஜனா­தி­பதி தேர்­தலில் முப்பத்­தைந்து வேட்­பா­ளர்கள் இடம் ­பெற்று தேர்தல் ஆணை க்­கு­ழு­வுக்கும், அதன்­மூலம் திறை­சே­ரிக்கும், மேல­திக செலவை ஏற்­ப­டுத்தி இருந்­தாலும், இறுதி சுற்­றுக்கு வரப்­போ­வது இரண்டு பேர்தான். 

அந்த இரண்டு இறு­திச்­சுற்று வேட்­பா­ளர்­களில் முத­லா­மவர் சஜித் பிரே­ம­தாச ஆவார். அந்த இரண்டு இறு­திச்­சுற்று வேட்­பா­ளர்­களில் சஜித்தே அனைத்து இனத்­த­வ­ரையும் இலங்­கை­ய­ராக கரு­துகிறார் என்­பதை என்னால் உறு­தி­யாக கூற முடியும். 

virakesari.jpg

இந்­நாட்டின் சிங்­கள மக்­க­ளுடன், தமிழ், முஸ்லிம் மக்­களும் நம்­பிக்­கை­யுடன் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் கரம் கோர்த்­துக்­கொண்டு, அவ­ருடன் பய­ணிக்க முடியும் என்ற நம்­பிக்­கையை அவர் எமக்குள் ஏற்­ப­டுத்தி உள்ளார் என்று   தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.       

ஒரு கண் மைத்­திரி, ஒரு கண் மகிந்த என்று சொல்லி வந்­த­வர்கள், எப்­போதும் மகிந்­த­வுடன் உறவு கொண்டே இருந்­தார்கள் என்று எமக்கு தெரியும். எங்கள் அர­சாங்­கத்­ததில், சிறிது காலம் பிரதி அமைச்சை வகித்த போதும் கூட , இந்த உறவு இருந்­த­தது எமக்கு தெரியும். நாமே இவர்­களை இங்கே வர வேண்டாம் என தடுத்­த­தாக இவர்கள் பொய் செய்­தி­களை பரப்பி வந்­ததும் எமக்கு தெரியும். நாம் யாரையும் தடுக்­க­வில்லை என்­பதை நான் கடந்த வாரமே கூறி  இருந்தேன். இன்று இவர்கள் தங்­க­ளது இர­க­சிய உறவை பகி­ரங்­கப்­ப­டுத்தி உள்­ளார்கள் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிர­ம­தா­ச­வு­ட­னான, தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முத­லா­வது பிரச்­சார கூட்டம், ஜ.ம.மு. இரத்­தி­ன­புரி மாவட்ட அமைப்­பாளர் சந்­தி­ர­கு­மாரின் ஏற்­பாட்டில், இரத்­தி­ன­புரி நக­ர­சபை மண்­ட­பத்தில் அமைச்சர் மனோ கணேசன் தலை­மையில் நேற்று இடம் பெற்­றது. ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிர­ம­தாச, கூட்­டணி பிரதி தலைவர் அமைச்சர் வி. ராதா­கி­ருஷ்ணன், எம்.பிக்கள் வேலு குமார், அர­விந்த குமார், பொது செய­லாளர் சந்­திரா சாப்டர், ஜ.ம.மு. தேசிய அமைப்­பாளர் பிரகாஷ் கணேசன் ஆகியோர் உள்­ளிட்ட பெருந்­தொ­கை­யான இரத்­தி­ன­புரி மாவட்ட ஜ.ம.மு, த.மு.கூ. அங்­கத்­த­வர்கள்  கலந்­து­கொண்ட இக்­கூட்­டத்தில் மேலும் உரை­யாற்றி அமைச்சர் மனோ கணேசன் கூறி­ய­தா­வது,

இந்­நாட்டின் சமூக, பொரு­ளா­தார, கல்வி அடிப்­ப­டை­களில் மிகவும் பின்­தங்­கிய பிரி­வி­ன­ரான, ஒன்­றரை இலட்சம் தோட்ட தொழி­லா­ளரின் வாழ்வு நிலை­மை­களை முழு­மை­யாக அடை­யாளம் கண்டு, அவர்­க­ளது விசேட பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வு தேட அவர், அர­சாங்­கத்தின் அனைத்து துறை­க­ளையும் இயக்­கு­விக்க, தோட்ட தொழி­லாளர் தொடர்­பி­லான விசேட ஜனா­தி­பதி செய­லணி ஒன்றை அமைக்­கப்­போ­வ­தாக எமக்கு அவர் ஏற்­க­னவே உறுதி மொழி அளித்­துள்ளார்.

இது ஒரு ஆய்வு செய்யும் ஆணைக்­குழு அல்ல. ஜனா­தி­பதி செய­லணி என்­பது ஜனா­தி­ப­தியின் நேரடி கண்­கா­ணிப்பில் செயற்­படும் ஒரு விசேட அதி­கார அணி ஆகும். 

தோட்ட தொழி­லா­ளரின் வாழ்வு நிலை பிரச்­சி­னை­களை இனி எவரும் புதி­தாக ஆய்வு செய்ய வேண்­டி­யது இல்லை. அவை எமக்கு தெரியும். நிறைய பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் தீர்வு தேடி உள்ளோம். இனி எஞ்சி இருப்­பது எஞ்­சி­யுள்ள பிரச்­சி­னை­களை தீர்ப்­பது ஆகும். அதைத்தான் இந்த தோட்ட தொழி­லாளர் தொடர்­பி­லான விசேட ஜனா­தி­பதி செய­லணி செய்யும்

இன்­னொரு மலை­யக கட்சி, இறுதி சுற்றின் இரண்­டா­வது வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளதை பற்றி சிலர் என்­னிடம்  அபிப்­பி­ரா­யத்தை கேட்­டார்கள். அது அந்த கட்­சியின் நிலைப்­பாடு. இது எங்கள் நிலைப்­பாடு. அவ­ர­வ­ருக்கு அவ­ரவர் நிலைப்­பாடு தொடர்பில் நியா­யங்கள் உண்டு. அவர்கள் ஏன் அந்த முடிவை எடுத்­தார்கள் என்­பதும் எனக்கு தெரியும்.

ஒரு கண் மைத்­திரி, ஒரு கண் மகிந்த என்று சொல்லி வந்­த­வர்கள், எப்­போதும் மகிந்­த­வுடன் உறவு கொண்டே இருந்­தார்கள் என்று எமக்கு தெரியும். எங்கள் அர­சாங்­கத்­ததில், சிறிது காலம் பிரதி அமைச்சை வகித்த போதும் கூட , இந்த உறவு இருந்­த­தது எமக்கு தெரியும்.

நாமே இவர்­களை இங்கே வர வேண்டாம் என தடுத்­த­தாக இவர்கள் பொய் செய்­தி­களை பரப்பி வந்­ததும் எமக்கு தெரியும். நாம் யாரையும் தடுக்­க­வில்லை என்­பதை நான் கடந்த வாரமே கூறி  இருந்தேன். இன்று இவர்கள் தங்­க­ளது இர­க­சிய உறவை பகி­ரங்­கப்­ப­டுத்தி உள்­ளார்கள். அவ்­வ­ள­வுதான்.

இன்று எவர் எங்கே என்ன நிலைப்­பாடு எடுத்­தாலும், வெற்­றிப்­பெற போகின்ற வேட்­பாளர் எமது சஜித் பிரே­ம­தா­சதான். இது நவம்பர் பதி­னாறாம் திகதி ஆரம்­பித்து பதி­னேழாம் திகதி உறுதி செய்­யப்­படும். 

எங்­களை பொறுத்­த­வ­ரையில், நான் ஏற்­க­னவே சொன்­னது போல,  இரண்டு இறு­திச்­சுற்று வேட்­பா­ளர்­களில் முத­லா­மவர் சஜித் பிரே­ம­தாச ஆவார். ஆகவே அவரே வெல்ல போகிறார். சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­களின் பெரு­வா­ரி­யான வாக்­கு­களை பெறக்­கூ­டிய  தகைமை கொண்ட ஒரே வேட்­பாளர் அவர் மட்­டுமே. ஆகவே அவரே எங்கள் நாட்டின் அடுத்த ஜனா­தி­பதி.  

எங்கள் இன்­றைய அரசின் எல்லா நட­வ­டி­கை­களும் திருப்­தி­யா­னவை அல்ல என்­பது நான் அடிக்­கடி பகி­ரங்­க­மாக கூறும் உண்மை. ஆனால், ஒப்­பீட்­ட­ளவில் நாம் 2015 ஆம் வரு­டத்­தி­லி­ருந்து முன்­னேறி வந்­துள்ளோம். இதை எவரும் மறுக்க முடி­யாது. இன்று எமக்குள் இருக்­கின்ற சில பிழை­க­ளையும் திருத்தி, எமது பய­ணத்தின் அடுத்த கட்­டத்தை இன்­னமும் சிறப்­பாக கொண்டு செல்­லக்­கூ­டிய தகைமை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு உண்டு.  ஆகவே இந்­நாட்டில் இன்று இருக்க கூடிய சந்­தோஷம், மகிழ்ச்சி, சுதந்­திரம், ஜன­நா­யகம் தொடர வேண்­டு­மென்றால், சஜி­துக்கு வாக்­க­ளிக்க வேண்டும்.

இன்­றைய சந்­தோஷம், மகிழ்ச்சி, சுதந்­திரம், ஜன­நா­யகம் ஆகி­ய­வற்றை புறந்­தள்ளி மீண்டும் 2015 ஆம் வரு­டத்தை நோக்கி பின்­னாலே செல்ல  வேண்டும் என்றால், நான் சொன்ன  இறு­திச்­சுற்றின்  இரண்டாம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.  கவலை, துன்பம், அழுகை, சர்வதிகாரம் மீண்டும் வர வேண்டுமென்றால், இந்த இரண்டாம் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

ஆனால், இந்நாட்டில் வாழும் நிதானமாக சிந்திக்க தெரிந்த மக்களுக்கு  எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்று நன்கு தெரியும் என நான் நினைக்கிறேன். இது ஜனாதிபதி தேர்தல். பாராளுமன்ற தேர்தல் அல்ல, என்பதும்  நிதானமாக சிந்திக்க தெரிந்த மக்களுக்கு நன்கு தெரியும் என நான் நினைக்கிறேன் என்றார்.       

https://www.virakesari.lk/article/66895

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.